Friday, April 22, 2022

'ஆளுங்கட்சியின் திட்டமிட்ட சதியே மின்வெட்டு'.

 ஆளுங்கட்சி சார்ந்த தனியார் நிறுவனம் ஒன்றுக்கு, ஆதாயம் தேடித் தரும் நோக்கத்தில், தமிழகத்தில் செயற்கையாக மின் வெட்டு ஏற்படுத்தப்படுகிறது என்ற பகிரங்க குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



latest tamil news



வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் இந்த நேரத்தில், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மின் வெட்டு நிலவுகிறது. பெரிய நகரங்கள் தவிர்த்து, பிற இடங்களில் இரண்டு முதல் ஆறு மணி நேரம் மின் வெட்டு அமலில் உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக எட்டு மணி நேர மின் வெட்டு நிலவுகிறது.

'மத்திய தொகுப்பில் இருந்து கிடைக்க வேண்டிய 750 மெகாவாட் கிடைக்காததால் தான் மின் வெட்டு நிலவுகிறது. 'அதை சீர் செய்ய, மின் வாரியத்தின் உற்பத்தியை அதிகரிப்பதோடு, தனியாரிடம் இருந்தும் கொள்முதல் செய்யப்படுகிறது' என்று, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கூறியதில், தனியாரிடம் கொள்முதல் செய்வது தான் மையக்கருத்து என்கிறார், பாரதிய மஸ்துார் சங்க மின் வாரிய பிரிவின் அகில இந்திய தலைவர் முரளி கிருஷ்ணன். அவர் மேலும் கூறியதாவது: மத்திய மின் தொகுப்பில் இருந்து மின்சாரம் கிடைக்கவில்லை என்பது முற்றிலும் தவறு. தமிழக மின் உற்பத்தி, சில நாட்களாகவே சிலரால் திட்டமிட்டு தடை செய்யப்படுகிறது. துாத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள நான்கு அலகுகளில், மூன்றில் உற்பத்தியை நிறுத்தி உள்ளனர். நிலக்கரி நிரவல், பராமரிப்பு பணி என்று காரணம் சொல்கின்றனர்.

ஆனால், திட்டமிட்டே மின் உற்பத்தியை நிறுத்தினர் என்பது தான் நிஜம். காலை, மதியம், மாலை என விட்டு விட்டு மின் உற்பத்தி அலகை இயங்கச் செய்வதும், நிறுத்துவதுமாக இருந்தனர். இதனால், பல கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டு இருக்கும் மின் அலகுகள், கெட்டுப்போய் செயல்படாமல் போகவும் வாய்ப்புள்ளன. அவை பற்றி எல்லாம் யாருக்கும் அக்கறையில்லை. இப்படி செய்ததும், மின் உற்பத்தி குறைந்து, பற்றாக்குறை ஏற்பட்டது. பற்றாக்குறையை போக்க, மின் வெட்டு ஏற்படுத்தப்பட்டது.

எதற்காக இப்படி செயற்கையாக மின் வெட்டை ஏற்படுத்த வேண்டும்? மின் வெட்டை போக்க, எந்த நடவடிக்கை வேண்டுமானாலும், அரசு எடுக்கட்டும் என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட வேண்டும். அப்போது தான், யாரும் கேள்வி கேட்காமல், தனியாரிடம் மின் கொள்முதல் செய்ய முடியும். அதற்கு ஏற்றாற்போல, 'கோடையில் மின் தேவையை சமாளிக்க, 3000 மெகாவாட் வெளியில் இருந்து கட்டாயம் வாங்கியாக வேண்டும்' என்று, மின் வாரிய தலைமை நிர்வாகி அறிவித்துள்ளார்.

பற்றாக்குறை பிரச்னையை மேலும் மோசமாக்குவதற்கு தான், அவசர அவசரமாக ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கொடுத்துள்ளனர்.இந்த புதிய இணைப்புகளால், மேலும் 2000 மெகாவாட் மின்சாரம் தேவை ஏற்படும் என்று தெரிகிறது.

அதனால், மொத்தமாக 5,000 மெகாவாட் வெளியில் இருந்து கொள்முதல் செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. வெளியில் இருந்து, மின் வாரியமே நேரடியாக மின்சாரத்தை வாங்கலாம். ஆனால், அந்த உரிமம் கோவையைச் சேர்ந்த பிரமுகர் ஒருவரின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது. இவர், ஆளுங்கட்சி அதிகார வட்டத்திற்கு மிகவும் நெருக்கமானவராக தெரிகிறது. ஒரு சில மாதங்களுக்கு முன் தான் இது நடந்துள்ளது. உள்ளூரில் யூனிட்டுக்கு, 2.50 காசுக்கு உற்பத்தியாகும் மின்சாரத்திற்கு பற்றாக்குறை ஏற்படுத்தி, வெளியில் இருந்து யூனிட்டுக்கு, 20 ரூபாய் வரை கொடுத்து வாங்க திட்டம் போடுகின்றனர்.


latest tamil news



ஏற்கனவே, உதய் மின் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த முயன்ற போது, மின் வாரியத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்று சொல்லி எதிர்த்தது தி.மு.க., தான். ஆனால், ஆட்சிக்கு வந்ததும், தனியார் வாயிலாக மின்சாரம் வாங்குகிறது. எல்லா விஷயங்களையும் போல, இந்த விஷயத்திலும் தி.மு.க., தரப்பு இரட்டை வேடம் போடுகிறது.இவ்வாறு முரளி கிருஷ்ணன் கூறினார்.


தினமும் ரூ.9 கோடி சம்பாதிக்கலாம்!



மொத்தம், 3,000 மெகாவாட் என்றால், நாளொன்றுக்கு 7.20 கோடி யூனிட். ஒரு யூனிட் உற்பத்தி செலவு 2.50 ரூபாய் எனில், 7.20 கோடி யூனிட்டுக்கு 18 கோடி ரூபாய் செலவு. இதுவே, ஒரு யூனிட்டுக்கு 20 ரூபாய் கொடுத்து வாங்கினால், 144 கோடி ரூபாய் செலவு.யூனிட்டுக்கு 20 ரூபாய் கொடுத்து வாங்கவில்லை என்றாலும்; வெளிமாநில மின்சார உற்பத்தியாளரிடம் இருந்தோ, கையாளும் நிறுவனத்தின் கமிஷனாகவோ, பரிவர்த்தனை செலவாகவோ, எங்காவது ஒரு இடத்தில் யூனிட்டுக்கு 1 ரூபாய் சம்பாதித்தால் போதும்; தினமும், 9 கோடி ரூபாயாவது சம்பாதிக்கலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...