Tuesday, September 30, 2014

செயலலிதா உடனடியாக விடுதலையாக 3 வழிகள்

தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட வல்லுனர்கள் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும்.

1. ஒரு மாநில முதல் அமைச்சரை கீழமை நீதிமன்ற நீதிபதி சர்வாதிகாரத்தனமாக கைது செய்தது செல்லாது என கவர்னர் அறிவிக்க வேண்டும். இதற்கு தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னரிடம் சபாநாயகர் முறையிட வேண்டும். கவர்னர் ஆனையிட்டால் உடனடியாக பெங்களூர் சிறையில் இருந்து செயலலிதா விடுதலையாவார். 

2. செயலலிதா மீதான தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் கவர்னருக்கு உள்ளது. இதற்காக தமிழக சட்டசபை  கவர்னருக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இதனால் செயலலிதாவுக்கு பொதுமன்னிப்பு வழங்க முடியும். உடனடியாக செயலலிதா மீண்டும் முதல் அமைச்சராக முடியும்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை கவர்னர் மதிக்காமல் இருப்பது, பயன்படுத்தாமல் இருப்பது தான் இன்னும் விசித்திரமாக உள்ளது. இதை அதிமுக சட்ட வல்லுனர்கள் ஏன் பயன்படுத்த தயங்குகிறார்கள் என்பதும் புரியாத புதிராக உள்ளது.   

ஒரு மாநில முதல் அமைச்சருக்கு கீழமை நீதிமன்ற நீதிபதி தண்டனை அறிவிப்பது தவறில்லை. ஆனால் அவரை தண்டிக்கும் அதிகாரம் நீதிபதிக்கு இல்லை. அதை கவர்னர் தான் செய்ய வேண்டும். இந்த விடயத்தை சட்ட வல்லுனர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழக முதல்வர் செயலலிதா செய்த படிப்படியான தவறுகள்:

1. நீதிபதியிடம் தான் தற்போது தமிழக முதல் அமைச்சர் பொறுப்பில் இருப்பதால் பதவியை ராசினாமா செய்து விட்டு இந்த நீதிமன்றத்தில் சரணடைகிறேன் என்று கூறியிருக்க வேண்டும். 

2. தீர்ப்பின் நகலை பெற்றுக்கொண்டு உடனடியாக சென்னை திரும்பி கவர்னரிடம் ராசினாமா கடிதம் கொடுத்திருக்க வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மேல்முறையீட்டு வழிகளை ஆய்வு செய்திருக்க வேண்டும்.

3. செயலலிதா தமிழக முதல் அமைச்சராகவும், கூடவே இசட் பிரிவு பாதுகாப்பிலும் உள்ளார். எனவே கீழமை நீதிமன்ற நீதிபதி வலுக்கட்டாயமாக செயலலிதாவை கைது செய்திருக்க முடியாது.

 அதிமுக வழக்கறிஞர்கள் பதட்டத்தில் கோட்டை விட்டு விட்டார்கள் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?

4. தீர்ப்பை எதிர்ப்பது, 100 கோடி அபராதத்தை எதிப்பது என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். முதலில் தமிழக முதல்வரை கைது செய்து சிறையில் அடைத்தது தவறு!. நீதிபதி தனது அதிகார வரம்பை மீறி இருக்கிறார் என்ற சட்டப்பிரச்சனையை தான் அதிமுக வழக்கறிஞர்கள் கையில் எடுத்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு இப்போது சாமீனுக்காக அலைவது மிக முட்டாள் தனமான நடவடிக்கை!

5. தமிழக முதல் அமைச்சர் கைது செய்யப்பட்டவுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் உடனடியாக ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்திருக்கலாம். இதனால் கவர்னர், மாநில காவல் ஆணையர், தலைமை செயலாளர் ஆகியோர் நீதிமன்றத்திற்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருப்பார்கள். (செயலலிதா கைது செய்யப்பட்ட விடயம் அடுத்த நாள் தான் கவர்னருக்கும் தலைமை செயலருக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது என்பதை கவனிக்கவும்)

இங்கு பலருக்கும் ஒரு சந்தேகம் வரலாம். குற்றவாளி என அறிவிக்கப்பட்டதும் உடனடியாக செயலலிதா தனது முதலமைச்சர் பதவியை இழக்கிறார். எனவே மேலே சொல்லபடும் காரணங்கள் எல்லாம் குழந்தை தனமானது எனலாம்.

குற்றவாளி என அறிவிக்கப்பட்டதும் செயலிதா முதல்வர் பதவியை இழக்கிறார் என்பது சரிதான். ஆனால் அதற்கு வழிமுறைகள் இருக்கிறது. முறையாக கவர்னர் தான் இதை அறிவிக்க வேண்டும். அல்லாமல் கீழமை நீதிமன்ற நீதிபதி அல்ல. தன்னிச்சையாக பதவிஇழக்க முதலமைச்சர் பதவி ஒன்றும் கிள்ளுக்கீரை அல்ல. அதற்கு என்று ஒரு மதிப்பு இருக்கிறது. அதை கர்நாடக நீதினமன்றம் காலில்போட்டு மிதித்துள்ளது. இதை தமிழகம் இன்னும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது தான் கேவலமாக உள்ளது.

முதலமைச்சர் பதவியை கீழமை நீதிமன்ற நீதிபதி பறிக்க முடியும் என்றால் கவர்னர் எதற்கு? தமிழக அரசுக்கு நிகழ்ந்த இதே நிலையை இந்திய அரசுக்கு நிகழ்வதாக ஒப்பிட்டு பாருங்கள். பிரதமரை பதவிநீக்கம் செய்ய யாருக்கு அதிகாரம் இருக்கிறது? சனாதிபதிக்கா? அல்லது கீழமை நீதிமன்ற நீதிபதிக்கா?

 மெத்த படித்த கனவான்களே இன்னும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை கேவலப்படுத்தாதீர்கள். உலகம் உங்களை பார்த்து உரக்க சிரிக்கிறது.

சட்டம் அனைவருக்கும் சமம் என்றால் செயலலிதாவுக்கு எதற்கு சிறையில் சொகுசு அறை? இதிலிருந்தே தெரியவில்லையா சட்டம் சில விதிமுறைகளை வைத்திருக்கிறது என்று!

கர்நாடக வழக்கறிஞருக்கு முறையாக ஆணை கிடைக்கவில்லையாம் அதனால் செயலலிதா சாமீன் வழக்கில் வாதாட முடியாது என்கிறார். அதை அனைவரும் சரி என ஒப்புக்கொள்கிறோம். அதே போல  முறையாக கவர்னருக்கு அறிவித்து விட்டு தானே செயலிதாவை கைது செய்திருக்க வேண்டும். அதை ஏன் கேள்வி கேட்க தயங்குகிறீர்கள்? 

தூக்கு தண்டனை விதித்தவுடன் நீதிபதியே எமனை போல தூக்கு கயிறை வீசி குற்றவாளியை அங்கேயே கொல்வது போல உள்ளது நீதிபதி குன்காவின் செயல். நல்லவேளை நீதிபதி குன்கா செயலிதாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கவில்லை. அப்படி விதித்திருந்தால் உடனே தன் முன் இருக்கும் சுத்தியலை எடுத்து வீசி கொன்றிருப்பாரோ என்னவோ?  

ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. அதற்காக முதலமைச்சர் என்ற மாண்புமிகு பதவியை கேவலப்படுத்தாதீர்கள். 

ஒரு நிறுவனத்தில் எடுபடி வேலை செய்யும் நபரை பணிநீக்கம் செய்யவே விதிமுறைகள் இருக்கிறது. அதைவிட கேவலமானதா முதல் அமைச்சர் பதவி? கொஞ்சமாவது அறிவுபூர்வமாக யோசியுங்கள்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...