Wednesday, September 17, 2014

**ஹெல்த்** உடல் நலத்தை கெடுக்கும் மைக்ரோவேவ்...

மைக்ரோ வேவ் ஓவனில் சூடுபடுத்தப்பட்ட உணவு அல்லது சமைக்கப்பட்ட உணவை சாப்பிடுவது எவ்வளவு அபாயகரமானது என்று பல ஆராய்ச்சி அறிக்கைகள் வந்துள்ளன.

**உணவு எப்படி மாறுகிறது.**

மைக்ரோ வேவ் ஓவனில் உணவு வைக்கப்பட்டவுடன் உணவில் உள்ள அணுக்களை அது வேகமாக, அதிவேகமாக சுழற்றுகிறது. இந்த வேகத்தாலும் சுழற்சியாலும் உணவுகள் தங்கள் இயற்கை தன்மையை இழந்து விடுகிறது.
வைட்டமின், தாது பொருள்ளகள், புரதம் என எல்லாவற்றையும் இழந்து ‘ரேடியோ லைடிக்’ என்னும் புதிய ரசாயன கலவையை உற்பத்தி செய்கிறது.
இதில் அபாயம் என்ன வென்றால், இந்த புதிய ரசாயனம் இயற்கையானது அல்ல. இது நமது ஜீரண உறுப்பால் ஜீரணிக்க முடியாதது. அதாவது இந்த ரசாயனம் நமது உடலுக்குள் சென்று விட்டால் மீண்டும் வெளியே வர முடியாது.நமது உடலுக்கு இதை வெளியேற்ற தெரியாது.

**பின் இந்த ரசாயணம் எங்கே இருக்கும்?**

மைக்ரோவேல் உணவை தொடர்ந்து நாம் சாப்பிட, இந்த ரேடியோ லைடிக் ரசாயனம் நமது உடலுக்குள் நுழைகிறது. நமது கொழுப்பு சத்து நிறைந்த அணுக்கள் இதை மடக்கி தங்கள் அணுக்களால் இதை மூடி வைக்கிறது.
இப்படி உடலில் சேர்ந்து விடும் இந்த ரசாயணம் நமது உடலை பதம் பார்க்க தொடங்கும்.

**மைக்ரேவ் உணவால் விளையும் நோய்கள்**

சுவிஸர்லாந்து, ரஷ்ய, ஜெர்மானிய நாடுகளின் ஆராய்ச்சி முடிவுகளின் படி, மைக்ரோவேவ் உணவால் பலவகை நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

* தொடர்ந்து மைக்ரோவேவ் உணவை சாப்பிட்டால் நமது மூளையில் உள்ள ‘மின் அலைகளில்’ மாற்றம் ஏற்படும் அபாயம் உள்ளதாம்.

* இந்த ரேடியோ லைடிக் ரசாயனத்தை நமது உடலை விட்டு அகற்ற முடியாது.

* ஆண்/பெண் ஹார்மோன் சுரப்பிகளை பாழபடுத்தும்.

* உணவின் எல்லாவித சத்துகளும் அழிக்கப்பட்டு தேவை இல்லாத உடலை விட்டு வெளியேற்ற முடியாத ரேடியோ லைடிக் ரசாயனத்தை உடலில் சேரும்.

* காய்கறிகளை மைக்ரோவேவில் வைத்து சமைத்தால் காய்கறிகளின் சத்துகள் அகற்றப்பட்டு கான்சர் வர கூடிய அணுக்கள் உற்பத்தி ஆகிறது.

* மைக்ரோ வேவ் உணவினால் வயிற்று புற்று நோய், ரத்த புற்றுநோய் வர அதிக வாய்ப்பு உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியும் குறைகிறது.
ஞாபக சக்தி குறையும். மன அழுத்தம் அதிகரிக்கும்! மூளை சுறுசுறுப்பு குறையும் என்று பலவகை ஆபத்துகள் மைக்ரோவேவ் உணவால்  ஏற்படுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...