Tuesday, September 30, 2014

ஜெயலலிதா விடுதலை எப்போது

மிதுன லக்னம்...அம்மாவுக்கு குரு திசை சனி புத்தி நடக்குது..அவர் அஷ்டமாதிபதி...அதனால் சிறை சென்றே ஆகணும் என சில ஜோதிடர்கள் சொல்லி இருந்தனர்..நானும் கவனித்தேன்...மிதுன லக்னத்துக்கு சனி கெட்டது செய்தால் அவர் எப்படி சுபர் ஆவார்...? அஷ்டமாதிபதி அவரை சிறையில் அடைத்தாலும் ஒரு நாள் சிறையில் இருந்தாலும் தோசம் விலகி விடுகிறது....அந்த சனியே..பாக்யாதிபதி என்ற முறையில் அவர் விடுதலையும் செய்வார்...குரு திசை பாவர் திசைதான்..ஆனால் குரு திசை முழுக்க கெடுதல் நடப்பவர் யாரும் இல்லை...ஒரு கெட்டது நடந்தது...மன உளைச்சல் பெரிதாக கொடுத்துவிட்டது..ஆனால் அது தொடராது..நல்லது நடக்கும்....இது நிரந்தரம் அல்ல..அவர் சிறையில் வாழ்க்கை நடத்தும் ஜாதகம் உடையவர் அல்ல..சாதிக்க பிறந்தவர்...மாசி மகம் ஜகத்தை ஆளும் என்பதெல்லாம் பொய்யாகிவிடாது..சிம்ம ராசிக்கு குரு 12ல் இருப்பதால் மன உளைச்சல் அடுத்த குருப்பெயர்ச்சி வரை இருக்கும்...செல்வாக்கை குறைக்கும்..ஆனால் வாழ்க்கை முடிந்துவிடாது..இன்னும் அவர் சாதிக்க நிறைய இருக்கிறது!!.

அவர் பிறந்த நட்சத்திரத்துக்கு 6 வது நட்சத்திர நாளில் அவர் தண்டனை பெற்று சிறை சென்றிருக்கிறார்...அதனால் நிச்சயம் இந்த வழக்கும் தீர்ப்பும் முற்றிலும் உடையும். விடுதலையும் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது......மிக பிரச்சினையான நேரத்தில் நாம் பிறந்த நட்சத்திரத்துக்கு 6 வது நட்சத்திரத்தில் சென்றால் அது முற்றிலும் செயல் இழக்கும்... அதுபோல் உள்ளே சென்ற அவர் நிச்சயம் இந்த வழக்கை முற்றிலும் உடைத்து வெளியே வருவார்.....
91ல் அவர் செய்த ஆடம்பர செலவுகளை கண்டு மக்கள் முகம் சுழித்து 96ல் அவருக்கு தோல்வி தண்டனை கொடுத்தனர். இன்று அதே மக்கள் அவரை கொண்டாடும் சூழலில் அவரை சட்டம் தண்டித்தால் லட்சக்கணக்கான மக்களின் அனுதாபமும், பிரார்த்தனையும்...அவர் எம்.எல்.ஏ ஆன ஸ்ரீரெங்கத்து பெருமாள் அருளாலும் அவர் நிச்சயம் வெளியில் வர முடியும்..!!

ஐந்து நாட்கள் விடுமுறைக்கு முதல் நாள் தீர்ப்பு என்பதை கூட விட்டுவிடலாம்...சனிக்கிழமை தீர்ப்பு என்பதில் நியாயமில்லை...அடுத்த நாள் ஞாயிறு...ஒருநாளாவது சிறையில் இருக்க வேண்டும்...என்ற எண்ணமா..?அதுவும் காலையில் தீர்ப்பு கொடுக்காமல் 4 மணிக்கு தீர்ப்பு கொடுக்க வேண்டும் என்பதில் ஏதோ வன்மம் இருக்கத்தான் செய்கிறது....
இன்னும் சில வாரங்களில் இந்த தீர்ப்பையே சுப்ரீம்கோர்ட் ரத்து செய்துவிட்டால் இன்று அவரை பழிப்பவர்கள்..என்ன செய்வார்கள் என தெரியவில்லை...இது நிரந்தர தீர்ப்பல்ல..மக்கள் தீர்ப்பு மட்டுமே மகேசன் தீர்ப்பு என நம்புபவர் அவர்...900 கோடி ஊழல் செய்த லல்லுக்கு 25 லட்சம் அபராதம்..66 கோடி சொத்து குவிப்பிற்கு 100 கோடி அபராதம்...எல்லோருக்கும் ஒரே சட்டம் என்பது இங்கே பல்லிலிக்கிறது...91 முதல் 96 வரை சம்பாதித்தது ஊழல் சொத்து எனில்....அவர் நடிகையாக நடித்து சம்பாதித்த சொத்துக்கள் எங்கே....?? அதன் மதிப்பு என்ன..? காலம் பதில் சொல்லும்....அவர் ஜாமீனில் வரட்டும்....பிரார்த்திப்போம்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...