Wednesday, September 10, 2014

மகாகவி பாரதியார் நினைவு நாள்


மாகவி பாரதி

இன்று தமிழ் மாகவி பாரதி நினைவு நாள்.
கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிணாமங்கள் கொண்ட மகாகவி பாரதி இறந்த தினம். 
இவருடைய இயற்பெயர் சுப்பிரமணியன். 
1882-ம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயருக்கும் இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார். தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவி புனையும் ஆற்றலை வெளிப்படுத்தியவர்.

தமிழின் கவிதை மற்றும் உரை நடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடி. தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை ஊட்டியவர் என பலரும் இவரை போற்றியுள்ளனர். 

இந்திய வரலாற்றில் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும், கட்டுரைகளும் எழுதியுள்ளார். தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். 
பிற மொழி இலக்கியங்களை மொழிபெயர்க்கவும் செய்துள்ளார். இவருடைய கவிதை திறனை பாராட்டி பாரதி என்ற பட்டத்தை எட்டப்பர் மன்னர் வழங்கினார். 
அன்றுமுதல் பாரதி என்றும் சுப்பிரமணிய பாரதி என்றும்  அழைக்கப்பட்டார்.
"தேடிச் சோறு நிதந் தின்று பல"
                                                                                                                              சின்னஞ் சிறுகதைகள்                                                                                                        பேசி மனம்
வாடித் துன்பமிக உழன்று பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின் மாயும் பல
வேடிக்கை மனிதரைப் போலே நான்
?வீழ்வேனென்று நினைத்தாயோ'
என்ற பாரதி தன்னால் அன்புடன் பார்க்கப்பட்ட யானை முட்டித்தள்ளியதால் ஏற்பட்ட மன அதிர்ச்சியிலும்,உடல் நலக்குறைவினாலும் இயற்கை எய்தினார்.
யானை முட்டியது பாரதிக்கு இறுதிக்கட்டத்தை தந்தது.இப்போதோ அது யானைகளுக்கு அல்லவோ இறுதியை தந்து விடுகிறது.

                       
               
      மகாகவியையும்  அவரது  நினைவையும் போற்றுவோம்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...