Sunday, September 28, 2014

கர்நாடகாவின் அயோக்கியத்தனம்

தமிழக முதலமைச்சர் கைது செய்யப்பட்டது இந்திய சட்டத்தின் அயோக்கியத்தனமா? அல்லது கர்நாடக நீதித்துறையின் அயோக்கியத்தனமா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சரை எந்தவித முன் அறிவிப்பும், காலஅவகாசமும் இன்றி சிறையில் அடைத்தது மிகப்பெரிய முட்டாள் தனம். தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மானநட்ட வழக்கு தொடர வேண்டும்.  நீதிபதி குல்கார்னியை நீதி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். தமிழக அரசையும் மக்களையும் அவமதித்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். 

இங்கு சட்டத்தின் முன் அனைவரும் சமம், தண்டனை அறிவிக்கப்பட்டதும் செயலலிதா தமிழக முதலமைச்சர் பதவியை இழக்கிறார். அவர் சாதாரண மக்களிள் ஒருவர் தான் என நினைக்கலாம். ஆனால் அது தவறு. முதலில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள். ஒருவர் மீது குற்றம் சுமத்துவதற்கும், வழக்கு தொடுப்பதற்கும் தான் சட்டம் அனைவருக்கும் சமம். ஆனால் ஒருவரை கைது செய்வதற்கு சட்டம் சில வழிமுறைகளை வகுத்துள்ளது. ஒரு அமைச்சரை கைது செய்ய சபாநாயகரின் முன் அனுமதியை பெற வேண்டும். 
ஊழல் வழக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி எம்.எல்.ஏ., எம்.பி., பதவிகள் தான் உடனடியாக இழக்கப்படும். ஆனால் அமைச்சர் பதவி பறிக்கப்படமாட்டாது. செயலலிதாவுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டதும் தனது எம்.எல்.ஏ., பதவியை தான் இழக்கிறாரே தவிர, முதல்அமைச்சர் என்ற பதவியை அல்ல. எம்.எல்.ஏ., பதவிக்கும், அமைச்சர் பதவிக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஒரு அமைச்சரை பதவிநீக்கம் செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. அதே போல ஒரு  முதல் அமைச்சரை கவர்னர் மற்றும் சபாநாயகரின் அனுமதி இன்றி சிறைவைக்க நீதிபதிக்கு அதிகாரம் இல்லை. 

செயலலிதா விசயத்தில் மிகப்பெரிய சட்ட மீறுதல் நடந்துள்ளது. இதை சட்ட வல்லுநர்கள் கவனிக்க வேண்டும். செயலலிதாவை சிறையில் அடைத்ததற்கு கர்நாடக நீதித்துறை நிபந்தனை அற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். கர்நாடக நீதிபதி அதிகார அத்துமீரலில் ஈடுபட்டிருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 
செயலலிதாவை குற்றவாளி என்று அறிவித்தது, தண்டணை அறிவித்தது இவைகளை நான் குறை சொல்லவில்லை. அது சரியா தவறா என உச்சநீதிமன்றம் முடிவு செய்யட்டும். ஆனால் தமிழக முதல்வரின் காரை பறிமுதல் செய்து, அரசு சின்னங்களை பறித்தது, தமிழக முதல்வரை கைது செய்து சிறையில் அடைத்தது, தமிழக அமைச்சரவையை முடக்கியது., ஒட்டுமொத்த தமிழகத்தையும் அவமதித்த செயலாகும். எம்.எல்.ஏ., எம்.பி., க்களுக்கும் முதல் அமைச்சருக்கும் உள்ள வித்தியாசத்தை நீதிபதி புரிந்துகொள்ள தவறிவிட்டார். 

செயலலிதாவை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய பின்னர் தண்டனைக்கு உட்படுத்த ஆளுநருக்கு பரிந்துரை செய்திருக்க வேண்டுமே. ஆனால் நீதிபதி தானே தமிழக அரசு சின்னங்களை பறித்தது, சிறையில் அடைத்தது என தன் அதிகார வரம்பை மீறி இருக்கிறார். 

தமிழக அமைச்சரவையை முடக்குவது என்பது ஒட்டுமொத்த தமிழக அரசையே முடக்குவதற்கு இணையானது. இதற்கு ஆளுநர், குடியரசு தலைவரிடம் முறையான ஒப்புதலை பெற நீதிபதி தவறி விட்டார். இந்த விடயத்தில் தமிழக ஆளுநர் மற்றும் சபாநாயகர் த¬லையிட்டு கர்நாடக நீதிபதியை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். 

தமிழக மக்களுக்கு  ஒரு வேண்டுகோள் : செயலிதா அவர்கள் குற்றவாளியாக இருக்கட்டும். தண்டிக்கப்பட வேண்டியவராக இருக்கட்டும். ஆனால் அதற்காக கர்நாடக நீதிபதி தமிழக அரசை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ளக்கூடாது.  இதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். இந்த விடயத்தை தீவிரமாக ஆய்வுக்கு உட்படுத்துங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...