Thursday, July 19, 2018

"கடவுள் என்னுடன் இருப்பதால்......

ஒரு வாலிபன் ஒரு சோப்புக் கம்பெனியில் விற்பனையாளனாகச் சேர்ந்தான்.
வீடு வீடாகப்போய் விற்பனை செய்ய வேண்டும்.
எப்படிப் பேச வேண்டும்.
எப்படிப் பழக வேண்டும் என்றெல்லாம் சொல்லிக்கொடுத்தார்கள்.
ஒரு நகரத்தை ஒதுக்கி அவனை அனுப்பினார்கள்.
ஒரு தெருவுக்குப் போனான் பையன்.
பயம் வந்துவிட்டது.
முதல் வீட்டுப் படியேற முடியவில்லை.
" இந்த வீட்டில் போன வாரம்தான்
மூன்று டஜன் சோப்பு வாங்கினார்கள்." என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.
அடுத்த வீட்டுக் கதவைத் தட்டவிடாமல் அச்சம் தடுத்தது.
" இந்த வீட்டில் வீட்டுக்காரர் வெளியே போயிருக்கிறார் " என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
மூன்றாவது வீட்டுக்குப் போய்க் கதவைத் தட்டினான்.
" யார் அது?" என்று எரிச்சலோடு கேட்டுக் கொண்டே ஒரு கிழவி வந்து கதவைத் திறந்தான்.
அவளது முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்ததைக் கண்ட இளைஞனுக்கு எதுவும் பேச நா எழவில்லை.
தோல்வியுடன் திரும்பி விட்டான்.
அடுத்த நாள்,
கம்பெனிக்காரர்கள் அவனுக்குத் துணையாக இன்னொரு வாலிபனை அனுப்பினார்கள்.
இருவரும் புறப்படும் பொழுதே உற்சாகத்துடன் காணப்பட்டார்கள்.
நண்பன் கூட இருக்கும் தைரியம் இந்த இளைஞனுக்கு வந்தது.
அந்த ஊரில்
முதல் நாள் போன தெருவுக்குப் பக்கத்து தெருவுக்குப் போனார்கள்.
எதிர் எதிர் வாடையைத் தேர்ந்தெடுத்தார்கள்.
இந்த வாலிபன் ஒரு வீட்டுக் கதவைத் தட்டும்பொழுது,
அந்த நண்பன் எதிர்புறத்தில் கதவைத் தட்டினன்.
இவனைப் பார்த்து ஊக்கப்படுத்தி சைகை செய்தான்.
பக்கத்தில் கூட்டாளி ஒருவன் இருக்கும் தைரியம் இவனுக்கு வந்துவிட்டது.
அன்று நிறைய ஆர்டர்கள் கிடைத்தன.
உன்னதமான ஒரு துணை நமக்கு வாழ்க்கையில் கிடைத்தால்,
அச்சத்தை உதறியெறிந்துவிட்டு,
வாழ்க்கையில் முன்னேற முடியும்.
இந்த மகத்தான துணைவன் நமக்கு யார் கடவுள்தான்!
"இறைவன் என்னை வழிநடத்திச் செல்கிறான்.
நான் எங்கேயும் வழி தவறிப் போகமாட்டேன்" என்ற உறுதி நமக்கு வர வேண்டும்.
"கடவுள் என்னுடன் இருப்பதால்
நான் பொல்லாங்குக்குப் பயப்ப்படேன். அவரது கருணைக்கரம் என்னைக் காப்பாற்றும் " என்ற நம்பிக்கை,
நம்மை ஆண்டுகொள்ள வேண்டும்.
கடவுளை நேசித்தால் அவர் மீது நமக்கு நம்பிக்கை வரும்.
ஆண்டவன்மீது நம்பிக்கை வந்தால், அச்சம் நீங்கிவிடும்.
பாரத்தை அவன்மீது போடுங்கள்.
உங்களைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு,பாதுகாக்கும் கடமை அவனுடையதாகிறது.
அவன் உங்கள் துன்பங்கள், துயரங்களைப் போக்கி, பயத்தை நீக்கி, நீடித்த நிம்மதியைக் கொடுப்பான்.
இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்.
அற்புதமான காலை வணக்கங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...