Thursday, July 26, 2018

சொன்னா எவன்டா கேட்கிறான்!"

பெண் பார்ப்பது...?

.
ஒரு வாலிபன் தன்னுடைய குருவிடம்...
எனக்கு என் தாயார் திருமணம் முடிக்க ஆசைப்படுகிறார். குருவே எனக்கும் அதில் ஆசைதான்... 
நான் எப்படிப்பட்ட பெண்ணை திருமணம் செய்வது என்றான்...
குருநாதர் சொல்கிறார்...
.
.
*அழகானவளை முடிக்காதே!
அடுத்தவன் அவள் மீது ஆசைப்படக் கூடும்,
.
*அழகில்லாதவளை முடிக்காதே!
ஒருவேளை உனக்கே அவளை பிடிக்காமலும் போகும்.
.
*உயரமானவளை முடிக்காதே!
ஒவ்வொரு வார்த்தைக்கும் உன் கழுத்து சுலிக்கக் கூடும்.
.
*குள்ளமானவளை முடிக்காதே!
உனக்கு அது சரியான ஜோடியாக இருக்காது
.
*பருமனானவளை முடிக்காதே!
உன் வருமானம் அவளுக்கு போதாது
.
*மெலிந்தவளை முடிக்காதே!
வீட்டில் அவள் எங்கே என நீ தேடுவாய்
.
*வெள்ளையானவளை முடிக்காதே!
அவளை காணும்போதெல்லாம் உனக்கு மெழுகுவர்த்திதான் ஞாபகம் வரும்
.
*கருத்தவளை முடிக்காதே
இருட்டில் அவளை கண்டு நீயே பயப்படக் கூடும்
.
*படிக்காதவளை முடிக்காதே!
நீ கூறுவதை அவள் புரிந்துகொள்ளமாட்டாள்
.
*படித்தவளை முடிக்காதே!
உன் பேச்சையே அவள் கேட்கமாட்டாள்
.
*பணக்காரியை முடிக்காதே!
உனக்கு அந்த இடத்தில் மரியாதை இருக்காது
.
*ஏழையை முடிக்காதே!
உனது மரணத்திற்கு பிறகு உன் குழந்தைகளும் சிரமப்படும்
.
*அதிக அன்பானவளை முடிக்காதே!
நீ வாழவும் இயலாது சாகவும் இயலாது
.
*கோபக்காரியை முடிக்காதே!
உன் வாழ்க்கை நரகமாகிவிடும்
.
*அனைத்தும் தெரிந்தவளை முடிக்காதே!
உன் மீது சந்தேகம் கொள்வாள்
.
*ஒன்றும் தெரியாதவளை முடிக்காதே!
நீ வீட்டு வேலைக்காரனாய் மாறிவிடுவாய்
.
*அமைதியானவளை முடிக்காதே!
நீ இறந்துபோனாலும் அவள் மௌனமாகத்தான் இருப்பாள்
.
*பரபரப்பானவளை முடிக்காதே!
நீ சொல்வது அவள் காதில் விழாது
.
*ஊருக்குள்ளே பார்த்து முடிக்காதே!
தாய் வீட்டில் கோழி முட்டையிட்டாலும் அதை காண ஓடுவாள்
.
*தூரத்தில் பார்த்தும் முடிக்காதே!
அடிக்கடி பயணம் செய்வதிலேயே உன் வாழ்க்கை முடிந்து போகும்.
.
என்று கூறி பெறும் மூச்சுவிட்டார் குருநாதர்...
.
.
இதை கேட்ட அந்த வாலிபன் கடுமையான கோபத்தோடு சொல்கிறான்...
.
"ஏன் குருவே இதற்கு நீங்கள் திருமணமே வேண்டாம்!" என்று சொல்லிவிடுங்களேன்..
.
குரு மென்மையான ஒரு சிரிப்புடன் சொல்கிறார்...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
"சொன்னா எவன்டா கேட்கிறான்!"
😝😂

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...