Thursday, July 26, 2018

அடர்த்தியான புருவம் கிடைக்க இதோ சில டிப்ஸ்...

விளக்கெண்ணெய்
* விளக்கெண்ணெயை விரலால் தொட்டு பின் அதனை புருவங்களின் மீது தடவ வேண்டும்.
* பின்பு 40-45 நிமிடம் நன்கு ஊற வைக்கவும்.
* அதன் பின் ஈரமான துணியால் புருவங்களைத் துடைத்து எடுக்கவும்.
* இந்த செயலை தினமும் ஒரு முறை செய்து வந்தால், புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளரும்.
தேங்காய் எண்ணெய்
* தேங்காய் எண்ணெயை புருவங்களின் மீது தடவி, மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து 1 மணிநேரம் நன்கு ஊற வையுங்கள்.
* இறுதியில் கிளின்சர் பயன்படுத்தி, புருவங்களை நன்கு கழுவுங்கள்.
வெங்காய சாறு
* சிறிது வெங்காயத்தை எடுத்து அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.
* பின் அதன புருவங்களின் மீது தடவ வேண்டும்
* பின்பு 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, கிளின்சர் பயன்படுத்தி, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள்.
* இந்த செயலை வாரத்திற்கு 4-5 முறை பின்பற்ற, புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளரும்.
ஆலிவ் ஆயில்
* ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, புருவங்களின் மீது தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள்.
* இப்படி ஒரு நாளைக்கு பல முறை செய்தால், எதிர்பார்த்த பலனைப் பெறலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...