Saturday, December 22, 2018

விளக் கெண்ணெய் பயன்படுத்துவதால் என்ன பயன் தெரியுமா? விளக்கெண்ணெய்..!!

விளக்கெண்ணெய், இன்றைக்கும் கிராமத்தில் நக்கல், நய்யாண்டி, செய்யப் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை,
"அந்த ஆள் ஒரு விளக்கெண்ணெய்" என்று யாராவது யாரையாவது செல்ல கேட்டிருப்போம்,
ஒருவரை குறைத்துச் சொல்வதற்கு இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டாலும் விளக்கெண்ணெய் விசேஷமானது,
உண்மையில் "ஆமணக்கு எண்ணெய்" எனப்படும் விளக்கெண்ணெய் மருத்துவ குணங்கள் கொண்ட அற்புதமான ஒரு பொருள்,
விளக்கெண்ணெய் "ஆமணக்கின் குருதி" என்று கூடச் சொல்லலாம்,
ஆமணக்குச் செடி மண்ணின் நுட்பமான கூறுகளை உறிஞ்சி, உழைத்துச் சேமித்த நுண் மருந்துகள் தான் விளக்கெண்ணெயில் கொட்டிக்கிடக்கின்றன,சுருக்கமாக விளக்கெண்ணெய் ஒரு நலபொக்கிஷம்,
மருத்துவக் குணங்கள் நிறைந்த விளக்கெண்ணெய் தயாரிக்க மூல காரணமாக இருக்கும் ஆமணக்குச் செடி குறித்த செய்திகள் நிறைய இருக்கின்றன,
குழந்தையின் அழுகையை நிறுத்துவதில் தொடங்கி, பல்வேறு நோய்களுக்கு மூல காரணியாக இருக்கும் மலச்சிக்கல் வரை விளக்கெண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது,
ஆமணக்குச் செடியின் விதைகளிலிருந்து எடுக்கப்படும் விளக்கெண்ணெயை ஆங்கிலத்தில் " Castor oil " என்பார்கள்,
இது மற்ற எண்ணெய்களைப்போல் அல்லாமல் அடர்த்தி அதிகமாகவும் பிசுபிசுப்புத்தன்மையுடனும் காணப்படும்,
தமிழ்நாட்டு கிராமப்புறங்களில் பரவலாக பயிரிடப்படும் ஆமணக்குச் செடியை "கொட்டை முத்துச்செடி" என்றும் சொல்வார்கள்,
குத்துச் செடியாக வளரக்கூடிய இதன் இலைகள் முரடாகவும், கொஞ்சம் அகலமாகவும் இருக்கும்,
செயல்திறன் நிறைந்த ரசாயனப் பொருள்கள் உள்ள இதன் விதைகளில் நச்சுத்தன்மை உண்டு, ஆனால் விதையிலிருந்து எண்ணெய் தயாரிக்கப்பட்ட பிறகு அதில் "நச்சுத்தன்மை இருக்காது,
4,000 ஆண்டுகளுக்கு மேலாக விளக்கெண்ணெயின் மருத்துவக் குணங்களை அறிந்துவைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்,
குழந்தைகளை அடிக்கடி விளக்கெண்ணெய் குடிக்கவைத்து, மலத்தை வெளியேற்றவைத்து, வயிற்றறை சுத்தமாக வைத்திருப்பார்கள், கிராமபுரங்களில் இன்றைக்கும் விளக்கெண்ணெயைத்தான் பேதி மருந்தாக பயன்படுத்துகின்றனர்,
காலையில் சூடான "டீ "அல்லது " காப்பி"யில் விளக்கெண்ணெயைக் கலந்து குடித்தாலே மலம் இளகி தாராளமாக வெளியேறிவிடும்,
இரவில் நாட்டு வாழைப்பழம், அல்லது பேயன் பழத்தை விளக்கெண்ணெயில் நனைத்துச் சாப்பிட்டால் காலையில் தாராளமாக மலம் கழியும்,
சிறுவயதில் குழந்தைகள் காரணமின்றி அழுவார்கள், அப்போது தலை, தொப்புள், உள்ளங்கால் பகுதிகளில் விளக்கெண்ணெயை வைத்தால் அது சூட்டை தணிக்கும், இதனால் குழந்தையின் அழுகையும் நிற்கும்,
கோழைக்கட்டு, இருமல் இருந்தால் இரண்டு பங்கு விளக்கெண்ணெயுடன் ஒரு பங்கு தேன் சேர்த்துக் கொடுத்தால் வயிறு கழிந்து நோயின் தன்மை குறையும், தொப்புள் பகுதியில் தினமும் எண்ணெய்விட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும்,
இன்றைக்கு கம்ப்யூட்டர், மொபைல் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை மணிக்கணக்கில் பயன்படுத்துவதால் பலருக்கு கண்களில் வரட்சி ஏற்படுகிறது, இது போன்ற பிரச்சனைகளுக்கு தொப்புளில் விளக்கெண்ணெய்விடுவது நல்ல பயன் தரும், விளக்கெண்ணெயை உட்கொள்வதால் மலச்சிக்கல் தீரும்,
வயிறு தொடர்பான கோளாறுகள் நீங்கும்,
வாய்வு தொல்லை அகலும், வயிற்றுப் புண் நீங்கும், வயிற்றில் உள்ள கசடுகள் நீங்கும், வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும், உடலுக்குக் குளிர்ச்சி கிடைக்கும், விளக்கெண்ணெய் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு குறையும்,
"கால்களில் ஏற்படும் பித்தவெடிப்பைப் போக்க விளக்கெண்ணெயைச் சூடாக்கி அதனுடன் மஞ்சள்தூள் சேர்த்து தடவலாம், சில நாட்களில் சரியாகிவிடும்,
மூக்கடைப்பு, சளித்தொல்லை, தலைவலியால் அவதிப்படுபவர்கள் விரலி மஞ்சளை விளக்கெண்ணெயில் நினைத்து தீயில் எரிந்து அதிலிருந்து வரும் புகையை சுவாசித்தால் பிரச்சினை சரியாகும்,
குழந்தை பெற்ற தாய்மார்களில் சிலருக்கு போதிய அளவு தாய்ப்பால் சுரக்காமலிருக்கும் அவர்களின் மார்பகங்களில் விளக்கெண்ணெயை தேய்த்துவிட்டால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும் என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள்...!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...