Monday, December 17, 2018

எந்தெந்த எண்ணெயை எப்படி பயன்படுத்த வேண்டும்?

நம்முடைய முன்னோர்கள் செக்கில் ஆட்டிய எண்ணெயைப் பயன்படுத்தி வந்தனர். ஆனால் இப்போது எல்லா எண்ணெய்களுமே ரிஃபைண்டு செய்யப்பட்டு பாக்கெட்டுகளில் விற்கப்படுகின்றன. அதனால் அதிலுள்ள சத்துக்கள் அழிந்து நச்சுத்தன்மை அதிகரித்துவிடுகிறது.
அதனால் எந்தெந்த எண்ணெயில் என்னென்ன மருத்துவ குணங்கள் இருக்கின்றன என்று தெரிந்துகொண்டு, அதற்கேற்ப பயன்படுத்தினால் ஆரோக்கியம் பெற முடியும்.
எந்த எண்ணெயில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன?
நல்லெண்ணெய்
எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய் உணவுக்காகவும் மருந்தாகவும் அழகு சாதனப் பொருட்களில் ஒன்றாகவும் பயன்படுகிறது.
இது மிக எளிதாக சருமத்துக்குள் ஊடுருவும் தன்மை கொண்டதால் சருமம் மிருதுவாகவும் போஷாக்குடனும் திகழும்.
சருமத்தின் ஈரப்பதத்தைச் சமப்படுத்தி உடல் வெப்பத்தைத் தணிக்கிறது.
உலர்ந்த சருமம் உடையவர்கள் அடிக்கடி நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது.
நல்லெண்ணெய் உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
யூக்கலிப்டஸ் ஆயில்
பழங்குடி மக்களால் ஆரம்ப காலங்களில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வரும் மருந்துப் பொருள் இந்த யூக்கலிப்டஸ் ஆயில்.
காயங்களில் பாக்டீரியாக்கள் பரவாமலும் சீழ் பிடிக்கச் செய்யாமலும் காக்கும்.
உடலில் வெப்பம் அதிகரிப்பதால் உண்டாகும் மார்புச்சளி, கோழை போன்றவற்றை குணப்படுத்தும்.
தலைவலி, ஜலதோஷத்தைப் போக்கும்.
விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெயை சருமத்தில் தடவினால் உடல் குளிர்ச்சியடையும். இதை தலையில் தேய்க்கும்போது, அவை முடியின் வேர்க்கால்களில் மெதுவான இறங்கி, தலைக்குக் குளிர்ச்சியைத் தருவதோடு முடியின் வளர்ச்சியையும் தூண்டுகிறது.
தினமும் தூங்குவதற்கு முன்பாக கண்ணிமைகளில் விளக்கெண்ணெயைத் தடவி வந்தால் கண்கள் குளிர்ச்சியடைவதோடு, நல்ல தூக்கத்தைப் பெற முடியும். அதோடு கண்ணிமை மற்றும் புருவத்தில் உள்ள முடிகளும் கருப்பாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயை கருஞ்சீரகத்துடன் சேர்த்து அரைத்து, உடலில் தேய்த்துக் குளித்தால் சரும நோய்கள் அனைத்தும் தீரும்.
தலைமுடிக்குக் குளிர்ச்சியும் ஊட்டமும் அளிக்கிறது. அதனால் முடி வளர்ச்சியும் அதிகரிக்கும்.
சமையலுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
பாதாம் ஆயில்
உடலுக்கு வனப்பும் ஆரோக்கியமும் அளிக்கக்கூடியது. அனைத்து வைட்டமின்களும் இதில் நிறைந்துள்ளன. குறிப்பாக, உடல் அழகைக் கூட்டும் வைட்டமின் இ இதில் அதிக அளவு நிறைந்துள்ளது.
பாதாம் எண்ணெயை தினமும் உடலில் தடவிக் குளித்துவர, உடல் பளபளப்பு அதிகரிக்கும்.
ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயில் தலைமுடிக்கு ஊட்டச்சத்தையும் சருமத்துக்கு பொலிவான நிறத்தையும் கொடுக்கும். இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.
அதனால் தான் கிரேக்கர்களும் ரோமானியர்களும் ஆலிவ் பழத்தை சாப்பிட்டனர். ஆலிவ் காயைக் கொண்டு செய்யப்பட்ட ஊறுகாயும் எண்ணெயும் அவர்களுடைய பிரதான உணவுகளில் பயன்படுத்தப்பட்டன.
வேப்ப எண்ணெய்
வேப்பெண்ணெய் சிறந்த கிருமி நாசினியாகப் பயன்படுகிறது. இது சருமப் பிரச்னைகளைத் தீர்ப்பதோடு, தோல் வியாதிகளையும் குணப்படுத்தும்.
வாரம் ஒருமுறை வேப்பெண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்து வர, பொடுகுத் தொல்லையும் தீரும். உடலும் குளிர்ச்சியடையும்.
கடுகு எண்ணெய்
கடுகு எண்ணெய் சருமத்தின் அழகை அதிகரிக்கும். அதனால் தான் அழகு சாதனப் பொருள்களில் கடுகு எண்ணெய் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
அதனால் உணவிலும் இதை சேர்த்துக் கொள்வதால் சரும அழகு அதிகரிக்கும்.
மிக முக்கியமாக சதைப்பிடிப்புகள் ஏதேனும் ஏற்பட்டால் அந்த இடத்தில் கடுகு எண்ணெயைத் தடவ, சதைப்பிடிப்பு விலகும். _______*******________

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...