Thursday, December 20, 2018

இன்றைய சிந்தனைக்கு.......

குரு, சனி, ராகு, கேதுப் பெயர்ச்சியெல்லாம் காலம் காலமா நடந்துகிட்டுதான் இருக்கு.
ஆனா அப்போல்லாம் இவ்ளோ யாருக்கும் தெரியாது. நல்லதோ.. கெட்டதோ.. சாமி மேல பாரத்தைப் போட்டு போயிடுவாங்க.
"நல்லதே நினைங்க.. நல்லது நடக்கும்..
காரணமில்லாம எதுவும் நடக்கலை..
நடப்பது எல்லாம் நம்மைப் படைத்தவன் செயல்..அவனன்றி ஓர் அணுவும் அசையாது..அவன் அவன் கருமம் அவனுக்கு....எல்லாம் நன்மைக்கே..
இதுவும் கடந்து போகும்..
மேடு பள்ளம் உள்ளதுதான் வாழ்க்கை..."
இப்படி சமாதானம் சொல்லி ஈஸியா கடந்து போயிடுவாங்க...
இப்போ நிலைமை மாறிப்போச்சு...எல்லாருக்கும் எல்லாம் சொல்றாங்க...
நாம கேக்கறமோ இல்லியோ.. தொலாவிப் போறோமோ இல்லியோ...நம்மை நோக்கி விஷயங்கள் வருது.அதில..கொஞ்சத்துக்கு கொஞ்சம் மட்டும்தான் உண்மை...
எல்லாத்தையும் போலவே...இதுலயும் பாதி மிகைப்படுத்தல்... வியாபாரம்....பணம் பண்றது எல்லாம் கலந்திருக்கு...
ஆன்மீகமும் இப்போ வியாபாரமாயிடுச்சு.
மக்களோட பயத்தை பணம் பண்றாங்க.
இப்பல்லாம் பாதி பேர் பயத்தோடதான் கோவிலுக்குப் போறாங்க... பக்தி எல்லாம் கம்மியாகிருச்சு
அந்த அர்ச்சனை..இந்த அர்ச்சனை..பரிகார பூசை...அந்தக் கோவில்.. இந்தக் கோவில்னு..
கண்ல பட்டது.. காதுல கேட்டது... படிச்சது...பக்கத்து வீட்டுக்காரங்க சொன்னதுன்னு...பைத்தியம் பிடிக்காத குறையா மக்கள் அலையறாங்க...
பரிதாபமா இருக்கு பார்க்க...
கோவிலுக்குப் போங்க...கட்டாயம் போங்க..அவசியம் போகணும்...
அர்ச்சனை பண்ணுங்க..பூசை பண்ணுங்க...விளக்கு ஏத்துங்க.. மலர் தூவுங்க... ஒரு தப்பும் இல்லை...
ஆனா..இதெல்லாம் பயத்தில பண்ணக்கூடாது. பக்தியோட பண்ணோனும்... நம்பிக்கையோட போகோணும்.
கோள்கள் சுழற்சியில வாழ்க்கைல ஏற்றத்தாழ்வுகள் வரலாம்...சோதனைகள் வரலாம். ஆனா...இப்படி ஆளாளுக்கு கிளப்பி விடறதை படிச்சுட்டு பயந்துடாதீங்கன்னு சொல்லவர்றேன்.
அந்த சனி பகவானே இறங்கி வந்து,
"நான் இப்படியெல்லாம் செய்வேன்னு உங்கள்ட்ட சொன்னனாடா..??!!" னு
ஆளுக்கு ரெண்டு அறை விட்டு போயிடுவார்...அப்படி பீதிய கிளப்புறாங்க...
படிக்கிறவங்க என்னாவாங்கன்ற மனசாட்சி கூட இல்லாத சோதிட வியாாரிகள்..
நல்ல சோதிடர்கள் நாசூக்கா சொல்வாங்க..நீங்க சாதகம் பார்க்க போனாலே அது தெரியும்...படால்.. தடால்னு சொல்ல மாட்டாங்க...
இதுல அரை குறை அறிவோட பேசறவங்க சில பேரு வேற...
மொத்தத்தில மக்கள் பயந்து
"ஐயோ இனி நான் அவ்ளோதான்"னு உடைஞ்சு சுக்கு நூறாகிடுவாங்க..
வாழ்க்கையில உள்ள கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போயிடும்...
அதனாலதான் நம்ப முன்னோர்கள் எல்லாத்தையும் இலை மறை காய் மறையாவே வைச்சிருந்தாங்க...
"எல்லாம் சரியாகிடும் போ"னு தைரியம் சொல்வாங்க...
இதெல்லாம் நம்பறவங்களுக்கு "
இறை சக்தியை விட பெரிய சக்தி எதுவும் இல்லை.. கோள்கள் அனைத்தும் படைத்தவன் கட்டுப்பாட்டில் இருக்கு." னு தைரியம் வேணும்
கோள் பெயர்ச்சி பலன்கள் எல்லாம் ஒரு எச்சரிக்கை மாதிரி வைச்சுக்குங்க...
மத்தபடி..
"ஜாமீன் கையெழுத்து போடாத..
அளவா பேசு...
சாமான், காசு, பணம், நகை, நட்டு பத்திரமா பாத்துக்க...
வாகனத்துல போறப்போ எச்சரிக்கையா இரு..
புது பிஸினஸ்ல பாத்து இறங்கு..
பாஸ்கிட்ட வம்பிழுத்துக்காத..
சொந்தக்காரங்கள பகைச்சுக்காத..
யாரையும் நூறு பர்சன்ட் நம்பாத.."
இதெல்லாம் சனி வந்து சொல்லோணும்னு அவசியம் இல்லை...
எல்லாக் காலத்துலயும் எல்லாரும் பண்ண வேண்டியதுதான்...
அதனால...பயந்துக்க வேணாம்...
உலகத்துல இருக்கற அத்தனை பேரும் இந்த பன்னிரண்டு ராசில அடங்கிருவாங்க...
அத்தனை பேருக்கும் ஒரே மாதிரி நடந்தா உலகம் தாங்குமா...
அப்படியா நடக்குது...
அவங்கவங்க சாதகம்.. பிறவிப்பலன்.. பிற கிரகங்கள் இருப்பு...கூட வாழறவங்களோட பலன்...இப்ப செய்ற காரியங்களோட பலன்...
எல்லாத்துக்கும் மேல கடவுள்...எல்லாம் இருக்கு....
பயப்படாம சாமி மேல பாரத்தைப் போட்டு நம்ம வேலை பார்த்துட்டு இருந்தாலே போதும்....நம்ம மனசு நல்லாயிருந்தா...அவன் கூடவேதான் இருப்பான்...
கிரகங்கள் ஆட்டி வைக்கிறபடிதான் நம்ம வாழ்க்கைன்னா.. சாமிக்கு என்ன மரியாதை...
அதனால....நம்ம பெரியவங்க சொன்ன மாதிரி..
இது ஒரு முன்னெச்சரிக்கைனு வைச்சுக்கிட்டு.. கடவுளை நம்பி நாம பாட்டு நம்ம வேலை செய்லாம்...
தென்னாட்டுடைய சிவனே போற்றி... என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...