Monday, February 4, 2019

மீண்டும் தாமரைக்கனி போல் ஓருவர் வேண்டும்.

மிகச்சரியாக 20.7.1982 . அன்றுதான் ஸ்ரீவில்லிபுத்தூர் அக்கிரகாரத்தில் ஒரு பிராமணர் கூட்டம்.
மொத்தமாக கூடி தொகுதி எம்.எல்.ஏ தாமரைக்கனியிடம் புகார் அளித்தனர்.
அக்கிரகாரத்தில் தி.க தலைவர் வீரமணி முதல்நாள் கூட்டம் போட்டிருந்தார்.
ஆண்டாள் பற்றியும் அந்தணர்கள் பற்றியும் அச்சில் ஏற்றமுடியா வண்ணம் அருவறுக்கத்தக்க வார்த்தைகளால் மேடையில் அர்ச்சனை.
Image may contain: 1 person, closeup
அதை புகாராக தெரிவிக்க தாமரைக்கனி வீட்டில் ஒன்று கூடினர்.
அத்தனைபேரையும் அமைதிப்படுத்தினார் தாமரைக்கனி.
எவன் என்ன பேசினாலும் உங்களுக்கு பக்கதுணையாக நானிருக்கிறேன் என்றார்.
வீரமணி இன்னும் வத்ராப்பில்தான் இருக்கிறான். இந்த வழியாதான் போகணும். கவலைப்படாம போங்க ... நான் பார்த்துக்கறேன் என்றார் கனி.
அப்போ எல்லாம் இந்த மாதிரி வசதி இல்லை. தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருக்கு டிரங்க்கால் போட்டார் தாமரைக்கனி.
தலைவா .... நாளைக்கு நீங்க மதுரை வரவேண்டியிருக்கும். அத்தனை புரோக்கிராம்களையும் கேன்சல் பண்ணிடுங்க. இதை மட்டுமே தெரிவித்தார் கனி.
எம்.ஜி.ஆரின் பதிலை எதிர்பார்க்காமல் போனை துண்டித்தார்.
பதறிப்போன எம்.ஜி.ஆர் , தாமரைக்கனி யை கண்காணிக்க சொல்லி ராம்நாட் கலெக்டருக்கும் ( அப்போ விருதுநகர் மாவட்டம் உதயமாகவில்லை ) மதுரை கலெக்டருக்கும் உத்தரவிட்டிருந்தார்.
தாமரைக்கனி எஸ்கேப்.
இதற்கிடையே வத்ராப் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு வீரமணி வந்துகொண்டிருந்தார்.
மம்சாபுரம் விலக்கு அருகே சுமார் 50 பேர் தி.க சட்டையும் கொடியும் ஏந்திக்கொண்டு தந்தை பெரியார் வாழ்க !!!! இனமான காவலர் வீரமணி வாழ்க !!!! என்று கோஷம் போட்டுக்கொண்டு இருந்தனர்.
தி.க காரர்கள் என்று நினைத்து காரை விட்டு இறங்கினார்.
அடுத்த நொடி கொடியை கழற்றினால் அத்தனையும் இரும்பு பைப்.
வெளுத்தாங்க பாருங்க .... அந்த அடி வீரமணி இன்றுவரை எங்கயும் வாங்கி இருக்க மாட்டான். வரலாறு காணாத அடி.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வீரமணி அட்மிட் செய்யப்பட்டார். வாய் கோணி இருந்தது. தலை கவிழ்ந்து இருந்தது. இடுப்பு திரும்ப ஒரு வாரமானது.
எம்.ஜி.ஆரை வரவேற்க மதுரை விமான நிலையம் சென்றார் தாமரைக்கனி.
மலர் வளையமா ? மலர் மாலையா ?
இப்போதைக்கு மலர் மாலை போதும். இந்த நிலை தொடர்ந்தால் வீரமணிக்கு மலர் வளையம் வைக்கவேண்டியிருக்கும் என்றார் தாமரைக்கனி.
இந்த சம்பவத்தை அக்கால பெரியவர்கள் யாரும் மறக்காமல் இருப்பார்கள்.
சட்டசபையில் பெஞ்சு மேல் ஏறி பிராமணர் மாநாட்டை தடுத்து நிறுத்த எவனுக்காவது தைரியம் இருந்தால் வாங்கடா என வேஷ்டியை கழற்றி கோஷம் போட்டவர்.
முதலமைச்சர் எம்.ஜி.யாரே ஒரு கணம்
கண் சிமிட்டாமல் பார்த்த்தார்.
மீண்டும் ஒரு தாமரைக்கனி வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...