இன்றைய செய்தி, கலெக்டர் சுஜித்தின் குடும்பத்துக்கு, பத்து லட்சம் வழங்கியிருக்கிறார்.அரசாங்கத்தின்சார்பில் வழங்கப்பட்டுள்ளது. மு. க.ஸ்டாலின் பத்துலட்சம், முதலமைச்சர் பத்துலட்சம் வழங்கியுள்ளனர். இந்த தொகை யாவும் அனுதாபத்தின் பேரில் வழங்கப்பட்டது.இதெல்லாம் சரி. முகநூலில் நண்பர்கள் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோர்தான் பாதுகாப்பு தரவேண்டும், இப்படி நிதி வழங்குவது தவறான முன்னுதாரணம் ஆகும், என்ற கண்டனங்களை பதிவு செய்தனர்.நான் இந்த நிதிவழங்கிய விஷயத்தை கொச்சை படுத்தாதிர்கள் என்று பதிவு செய்தேன். இப்போது கலெக்டர் நிதிவழங்கியபின் அரசாங்க வேலை வேண்டும் என்றுசுஜித்தின் குடும்பத்தினர் கேட்பது , நியாயமற்ற செயலாகும். அந்த குழந்தையின் இறப்பை வைத்து அரசாங்க வேலை கேட்பது ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை. அரசு வேலை பார்த்த ஒருவர் இறந்து விட்டால் அவரது குடும்பம் நிர்க்கதியாகி விடகூடாது என்பதற்காக அந்தகுடும்பத்தைசார்ந்தவருக்கு வேலை கொடுப்பது வழக்கமான ஒன்று.எந்தஅடிப்படையில் , இப்படி கேட்கிறார்கள்? தனியார் கம்பெனிகளில் வேலை செய்யும் இளைஞர்கள்விபத்து போன்றவற்றில் இறந்து விட்டால், நிராதரவாக தவிக்கும் குடும்பங்களை, கண்கூடாக பார்க்கிறோம். அரசு இந்த அளவுக்கு செய்தும் மேற்கொண்டு இப்படிப்பட்ட சலுகைகளை எதிர்பார்ப்பதை பார்த்தால் அரசாங்கம் தவறு செய்துவிட்டதாக., மக்கள் எண்ணக்கூடிய சூழ்நிலை உருவாகி விடும்.ஆசைப்படுவதும், ஆதாயம் தேடுவதும், இந்த சந்தர்பத்தை வைத்து அரசியல் செய்வதும் சரியல்ல. தவறு ம் அலட்சியமும், பெற்றோர்களது தானே தவிர மற்றோரது அல்ல என்பதை புரிந்து கொள்வது நல்லது.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment