Monday, March 26, 2018

மஞ்சதுண்டு....

1967 இல் அண்ணா ஆட்சியின் போது நம்ம மஞ்சதுண்டுதான் பொதுப்பணித்துறை அமைச்சர்...
சென்னையில் இருக்கும் கூவம் நதியை சுத்தம் செய்வதாக முதல் கட்டமாக 3 கோடி நிதியை ஒதுக்குவதாக மஞ்சத்துண்டு அறிவித்தார் ;
6 மாதம் ஓடி விட்டது ; கூவம் நதி சுத்தம் ஆனதாக தெரியவில்லை , இதை பற்றி கம்யுனிஸ்ட்டுகள் சட்டசபையில் மஞ்சதுண்டை கேள்வி கேட்டபோது - "இன்னும் மூன்று நாளில் கூவம் நதி சுத்திகரிப்பு பற்றி விவரம் சொல்கிறேன் " என்றார் மஞ்சதுண்டு ;
அடுத்தநாள் பத்திரிக்கையில் ஒரு பரபரப்பு செய்தி வந்தது - "கூவம் நதியில் முதலை - பொது மக்கள் அலறி ஓட்டம்" என்பதுதான் அந்த செய்தி ;
அடுத்த நாள் சட்டசபையில் மஞ்சத்துண்டு விளக்கம் தருகிறார் "கூவம் நதியில் முதலை இருப்பதால் சுத்தம் செய்கின்ற பணியாளர்கள் தொடர்ந்து வேலை செய்ய மறுத்துவிட்டதால் கூவம் நதி சுத்திகரிப்பு திட்டம் கைவிடபடுகிறது " என்று அறிவித்தார் மஞ்ச துண்டு...
உடனே எதிர்கட்சிகள் "அப்போ , இத்திட்டத்திற்கு ஒதுக்கிய அந்த 3 கோடி என்னாச்சி? " என கேட்க ... மஞ்சதுண்டோ "முதல்கட்ட பணிக்காக அந்த 3 கோடி முழுமையாக செலவழிந்து விட்டது" என்றார்........!!!
# சாக்கடையில் முதலை எப்படி வரும் ? ;
கூவத்தில் இல்லாத முதலையை இருப்பதாக வதந்தி பரப்பி , இத்திட்டதிற்க்காக ஒதுக்கிய 3 கோடியை நம்ம மஞ்சதுண்டின் முதலை வாய் முழுங்கி விட்டது ;
அன்றைய காலத்தில் ஒரு பவுன் நகையே 100ரூபாதான் ;
3 கோடியில் - 3 லட்சம் பவுன் நகை வாங்க முடியும்;
இன்றைய மதிப்பில் ஒரு பவுன் நகை 20,000 ரூபாய் என்று வைத்தாலும் ,
இன்றைய மொத்த மதிப்பு ..
20000*300000 = 6600 கோடி ...
இப்ப சொல்லுங்க தமிழ்நாட்டு மகா ஜனங்களே,
இந்தியாவுல பலே திருடன் எத்தன பேர்கள் இருந்தாலும்
எத்தனுக்கேல்லாம் எத்தன் ... ஜித்தனுக்கேல்லாம் ஜித்தன்...
"பல்லேலக்கா" திருடர் 93, 94 ஐ தாண்டியும் தன் தொழிலை குடும்ப வாரிசுகளோடு திறம் பட செய்கிறார் என்றால் இது நம்ம தமிழ் நாட்டுக்கே பெருமையல்லவா!!!.Image may contain: 1 person, sunglasses and closeup

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...