Sunday, March 25, 2018

பதினெட்டாம்படி கருப்பசாமி.............

*இறைவன் எதையாவது ஒன்றை உன்னிடமிருந்து எடுத்துக்கொண்டால் அதை விடச் சிறந்த ஒன்றை கொடுத்தே தீருவான் என்பதை காலம் நிச்சயம் உனக்கு காட்டித்தரும்.. நம்பிக்கையோடு காத்திரு.!*
*யாராவது ஒருவரிடம் உள்ளதொன்றை பார்த்து பொறாமைப்படாதே.. ஒருவேளை நீ அவருக்கு அது அருள் என்று நினைத்திருப்பாய்.. ஆனால் அதுவே அவருக்கு பெரும் சோதனையாக இருக்கும்.!*
*யாரையும் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்காதே.. அது உன் நிம்மதியை தொலைக்க வைக்கும்.. காலம் அதன் கருமத்தை கச்சிதமாக செய்யும் வரை பார்த்துக் கொண்டிரு.!*
*நீ வாழ்வில் எதை இழந்தாலும் அதற்கு பதிலீடாக எதையாவது பெறுவாய்.. ஆனால் இறைவனின் மீதான நம்பிக்கையை நீ இழந்தாயேயானால் அதை ஈடு செய்ய உன்னால் எதையும் தேட முடியாது.!*
*எல்லா சூழ்நிலையும்*
*ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.*
*ஓஹோ என்று வாழ்ந்து*
*ஒன்றுமில்லாமல்* *போனவர்களும் உண்டு.*
*ஒன்றுமில்லாமல் வாழ்ந்து*
*ஓஹோ வென்று போனவர்களும் உண்டு...!*
*மற்றவர்களிடம் இருப்பதில் எவை என்னிடம் இல்லை என்று சிந்திப்பதை விட மற்றவர்களிடம் இல்லாதது எவை என்னிடம் உள்ளது என்று தேடிப்பாருங்கள்.*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...