Wednesday, March 28, 2018

உங்கள் முகத்தின் அழகை கெடுக்கும் கரும்புள்ளிகளை முற்றிலுமாக அகற்ற‍ பயனுள்ள 10 குறிப்புகள் !

1. கோதுமை தவிடுடன் பால் கலந்து முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர சிறிது நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.
2. முருங்கை இலைச்சாறு, எலுமிச்சை சாறு மற் றும் தேன் கலந்து தடவினால், கரும்புள்ளிகள் நீங் கும். அதேபோல் பப்பாளி பழத்தை மசித்து தேன் கலந்து முகத்தில் தடவினாலும், நல்ல பலன் கிடைக்கும்.
3. முல்தானி மட்டியுடன் வெள்ளரிச் சாறு கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடங் களில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர நாளடைவில் கரும்புள்ளிகள் மறையு ம்.
4. ரோஜா இதழ் மற்றும் பாதாம் பருப்பை அரை த்து முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவி வர, கரும்புள்ளிகள் மறையும்.
5. கடலை எண்ணெய் மற்றும் எலுமிச்சம் பழச் சாறு சம அளவு கலந்து அவற்றை கரும்புள்ளிக ள் உள்ள இடத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து கழுவினால், முகம் பளபளக்கும் மேலும் கரும்புள்ளிகள் கண் ணுக்கே தெரியாம ல் மறையும்.
6. எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவி வர, அவை நாளடை வில் மறைந்து விடும்.
7. வெள்ளரிச்சாறு, புதினா சாறு, எலுமிச்சை பழச் சாறு ஆகியவைகளை சம அளவில் கலந்து முக த்திலுள்ள கரும்புள்ளிகள்மீது தேய்த்து வந்தால் கரும்புள்ளிகள் போய்விடும்.
8. முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்து, முகத்தில் தேய்த்து காய்ந்ததும், அவற்றி ன் மீது தண்ணீர் தடவி தேய்த்தால், கரும்புள்ளி கள் நீங்கும்.
9. தக்காளி மற்றும் வெள்ளரிக்காயை நன்கு நை சாக அரைத்து முகத்தில் பூசி சிறிதுநேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு அடிக் கடி செய்து வந்தால், கரும் புள்ளி கள் ஏற்படுவது தடுக்கப்ப டும்.
10. முட்டைகோசுடன் பன்னீர் ரோஜாவை மசித்து அதில் பால் மற்றும் தேனை கலந்து முகத்தில் தேய் த்து சில நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ் வாறு வாரம் ஒரு முறை செய்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...