Monday, March 26, 2018

உங்கள் சிந்தனைக்கு (தெரியாத ரகசியம்)

1. முன்நில்
2. முன் மொழி
3. முடிவெடு
4. முடிச்சவிழ்
5. முத்திரை பதி
6. முன்மாதிரியாய் இரு
உயர்வு பெற்ற ஒவ்வொரு மனிதரிடமும் உள்ளது – ஒரு முகம் என்றோ நினைக்கிறீர்கள்? -இல்லை!
ஒரு முகமல்ல- ஆறு முகங்கள்!
அந்த ஆறு முகங்களை நாமும் பெறுவோம். ஆளுமை நிறைந்த அற்புத வாழ்வை நாம் வாழ்வோம்.
ஆறுமுகங்களாவன:
1) முன்னிற்க ஒரு முகம்
2) முன்மொழிய ஒரு முகம்
3) முடிவெடுக்க ஒரு முகம்
4) முடிச்சவிழ்க்க ஒரு முகம்
5) முத்திரை பதிக்க ஒரு முகம்
6) முன் மாதிரியாய் திகழ ஒரு முகம்
தேவை: ஆறுமுகம்
தீர்வு: ஏறு முகம்!
முன்நில்
முன்னிற்கத் தேவை துணிவு. துணிவு பெறத்தேவை தன்னம்பிக்கை! தன்னம்பிக்கை பெறத்தேவை ஊக்கம்! ஊக்கத்தை – உள்ளிருந்தும் பெறலாம், வெளியிலிருந்தும் பெறலாம்.
பார்க்கப் பார்க்க, கேட்கக்கேட்க.. கவனிக்கக் கவனிக்க
மெல்ல மெல்ல ஊக்கம் பிறக்கும். மேலும் மேலும்
உற்சாகம் கிடைக்கும்.
பிறகென்ன…
தன்னம்பிக்கை “தானே” வரும்.
தன்னம்பிக்கையைப் பற்றிக் கொண்டால்
துணிவு பிறக்கும்.
துணிவு பிறந்தால் துணைக்கு வேறென்ன தேவை?
துணிவு பெற்று முன்னிற்க
வேண்டியதுதான்.
முன்னிற்பதே – தலைமை ஏற்பதற்கான
முதல் தகுதி
அதுவே முதல் அழகு
அதற்கொரு முகம்.. அதுவே முதல் முகம்!
முன்மொழி
முன்மொழியத் தேவை வெளிப்பாட்டுத்து திறன்!
வெளிப்படத் தேவை உள்ளத்தில் தெளிவு
தெளிவு பெறத் தேவை, தீராத தேடல்!
தேடலைத் தொடங்கத் தன் தேவையை
உணர்தல் வேண்டும்!
வெளிப்படுவதற்கான தேவையை உணர்ந்துவிட்டால் பேச்சாற்றலுக்கான பயிற்சி பெறலாம்.
பயிற்சி பெறுதல் முயற்சியின் முதற்படி!
முயற்சி செய்தால் முடியாததில்லை…
முன்மொழியலாம்..
முன்மொழியப் பழகிவிட்டால் –
அத்தனையும்
ஒருநாள் பொன்மொழியாகலாம்! பின் என்ன?
பொற்காலம் காணலாம்.
மொழியாமல் முன்னேற்றம் இல்லை!
முன் மொழிதலே – ஒரு தலைவனுக்கு
இரண்டாம் அழகு
முன் மொழியத்
தேவை இரண்டாம் அழகு!
முடிவெடு
முடிவெடுக்கத்தேவை, ஆராயும் மனம்,
தேவை எது? எனத் தீர்மானிக்கும் திறன்
விருப்பம் எது? – என உணரும் திறன்
பொருத்தம் எது? – எனத்
தேர்ந்தெடுக்கும் திறன்!
தீர்வின் திசைகளைக் கண்டெடுக்கும் திறன்!
பயணிப்பதற்கான பாதையை
நிச்சயிக்கும் திறன்!
முடிவெடுக்கத் தேவை, உள்ளத்து உறுதி!
உறுதியான மனமெடுக்கும் முடிவு
இறுதியானதாய் இருக்கும்
முடிவெடுத்தல் – ஒரு தலைவனுக்கு –
மூன்றாம் அழகு
முடிவெடுக்கும் முகம் மூன்றாம் முகம்!
முடிச்சு அவிழ்
முடிச்சை அவிழ்க்கத் தேவை..
சிக்கல் தீர்க்கும் திறன்…
சிக்கல் தீர வேண்டுமெனில் அதன்
ஆணிவேரைக் கண்டுபிடிக்க வேண்டும்!
சிக்கலின் “மூலமே”
அதன் ஆணிவேர் தான்!
ஆணிவேரைக் கண்டு அசைத்து விட்டால்
அவிழா முடிச்சும் –
ஆக்கப்பூர்வமான மனமிருந்தால்
ஆணிவேர் சீக்கிரமாய் அகப்பட்டு விடும்.
இல்லையெனில் அலைபாய நேரும்..
முடிச்சவிழ்க்க முடியாது போனால்…
முணகும், புலம்பும்…
மனம் கவலையில் மூழ்கும்!
கவலையில் மூழ்கினால் முன்னேற்றம் ஏது?
எனவே, முடிச்சவிழ்த்தல் – ஒரு
தலைவனின் நான்காம் அழகு!
அதுவே நான்காம் முகம்! நான்முகன் –
படைப்பாளி அல்லவா?
முத்திரை பதி
முத்திரைப் பதிக்கத் தேவை “தனித்தன்மை”
ஆளுக்கு ஆள்
அந்தத்தனித் தன்மை வேறுபடும்
அறிந்து கொண்டால்
அற்புதங்கள் கூடிவிடும்!
தனித்தன்மையே அவரவர் அடையாளம்!
அடையாளம் கண்டு கொண்டால் பிறகு
தடையேதும் இலை.
வினாக்களெல்லாம் விடைபெற்று விடும்.
அசத்தலாம்-
அனைவரையும் வசப்படுத்தலாம்.
தனித்தன்மை அறிந்து தடம்பதி!
மனித இதயங்களில் தனக்கொன்றோர் –
இடம்பிடி!
வாழ்க்கை நிலைபெறவடம்பிடி!
வடம் பிடித்து வாழ்வில் முத்திரை பதித்தல்
ஒரு தலைவனின் ஐந்தாம்
அழகு! – அதுவே ஐந்தாம் முகம் தரும்
அற்புதம்.
முன் மாதிரியாய் இரு
முன் மாதிரியாய் திகழத் தேவை.
பயன்பாடு,
பயன்பட வேண்டுமெனில்
பக்குவப்பட வேண்டும்!
பக்குவப்பட்டவனே “முன் மாதிரி”
பக்குவப்பட்டவனே முதன்மையானவன்!
மதிப்பு மிக்கவன்!-
மதிப்புமிக்கவனே மாதிரி!
அவனே உலகின் முன் மாதிரி! (Role Model)
முன் மாதிரியாதல் –
ஒரு தலைவனக்கு ஆறாம் அழகு!
அதுவே ஆறாம் முகம் தரும் பொலிவு!
ஆறழகும் ஓரழகாய் ஆறுமுகமும்
ஒரு முகமாய் தோன்றிவிட்டால்
அதுவே பேரழகாய் ஒளிரும் – அல்லவா!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...