Saturday, March 31, 2018

நுரையீரலுக்கு கெடுதலை விளைவிக்கும் கொசு விரட்டிகள் !!!

வீட்டை எவ்வளவு தான் சுத்தமாக வைத்திருந்தாலும், கொசுக்கள் மட்டும் எங்கிருந்து தான் வருகிறதோ தெரியவில்லை. அவ்வாறு கொசுக்கள் வருவதால் இரவில் நன்றாக தூங்க முடியாமல் அவஸ் தைபடுகிறோம். இந்த அவஸ்தை யை நீக்க கடைகளில் கொசுக்க ளை விரட்ட விற்கப்படும் கொசு வர்த்தி, மேட், கிரீம் போன்ற பொரு ட்களைப் பயன்படுத்துகிறோம். அவ் வாறு அவற்றை பயன்படுத்துவதா ல் நம் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று தற்போதைய ஆய்வி ல் தெரிய வந்துள்ளது. அதிலும் ஒரு கொசுவர்த்தி சுருளில் இருந்து வரும் புகை, 100 சிகரெட்களுக்கு சமம் என்றும் அவர்கள் கூறுகின் றனர்.
மேலும் அந்த ஆய்வில் கொசுக்க ளை விரட்ட பயன்படுத்தும் பொரு ட்களில் கொசுக்களை அழிக்கும் கெமிக்கலான அலெத்ரின் (alletrin) இருக்கிறது. இது கொசுக்களை மட் டும் அழிப்பதில்லை, நமது நுரையிர ல்களையும் அழிக்கிறது. ஏனெனில் அதனை இரவில் தூக்கும்போது அதி கம் சுவாசிப்பதால், நமது உடலில் நல்ல ஆக்ஸிஜன் செல்வது தடைபட்டு, மாசுபட்டிருக்கும் காற்றை சுவாசிப்பதால், நுரையீரலில் அந்த காற்று அடைபட்டு, நுரையீரலின் அரையை பாதி க்கிறது.
சிலர் கொசுக்களுக்கு பயந்து மாலை நேரத்தில் இருந்தே, வீட்டு ஜன் னல்கள், கதவுகள் என்று அனைத்தை யும் அடைத்துவிட்டு, இந்த கொசு விரட் டிகளை போட்டுவிடுகின்றனர். அது மட் டுமல்லாமல், அவ்வாறு அடைத்து விடு வதால், வீட்டில் சமைக்கும்போது வரு ம் புகை, இந்த கொசு விரட்டிகளால் வரும் புகை என்று வீட்டில் நல்ல காற் றைவிட, அசுத்தமான காற்று இருப்பதா ல், அவற்றை சுவாசிக்கும் போது, அந்த கொசு விரட்டிகளில் உள்ள விஷம் உடலில் வந்துவிட்டது என்பத ற்கு அறிகுறியாக முதலில் சளி, காய்ச்சல் என்று ஆரம்பிக்கும்.
இவை மூன்று நாட்கள் நீடித்தால், அதனை அலர்ஜி என்று முடிவு செய்து, அதற்கான மருந்துகளை எடுத்துக் கொண்டு ஒரு நோயா ளியாக நாமே ஏற்படுத்திக் கொள் கிறோம். பின்னர் அந்நிலை சற்று படிப்படியாக முன்னேறிய தன் அறிகுறியாக, உடலில் ஆஸ்துமா என்னும் நோய் வந்து விடுகிறது. சில பிறந்த குழந்தைகள் அந்த மேட் புகையை சுவாசித்தால், வ லிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று லக்னோ கிஸ் ஜோர் ஜின் மருத்துவப் பல்கலைக் கழகத்தி ல் கூறப்படுகிறது. அதுமட்டு மல் லாமல், அந்த புகையை சுவாசிப்பதால் சில சமயங்களில் சிலரு க்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்த வல்லது என்றும், கொசு விரட்டி யில் உள்ள டயோக்சின் புற்றுநோயை உரு வாக்க வல்லது என்றும் கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.
ஆகவே கொசுக்களை விரட்ட பணத்தை செலவழித்து கொசு விரட்டிகளை வாங்குவதை வி ட, ஈஸியாக கொசு வலைகளை கட்டி சுத்தமான காற்றை சுவா சித்து, ஆரோக்கியமாக வாழ லாம் என்றும் கூறு கின்றனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...