Saturday, March 24, 2018

உடலின் செல்கள் அமிலத்தன்மையை அடைந்தது விட்டதென்றால் உடலுக்கு அழிவுதான்.

நோய்க்கு காரணம் கிருமிகள் என்று ஆங்கில மருத்துவம் கூறுகிறது.
ஆனால் இயற்கை மருத்துவமோ கிருமிகள் நோய்க்கு காரணம் அல்ல என்கிறது.
கிருமிகள் தங்கக்கூடிய அளவிற்கு உடலில் கழிவுப் பொருட்களை நாம் தேக்கி வைத்திருப்பதே காரணம் என்கிறது.
ஓடுகின்ற நீரில் கொசுக்கள் முட்டையிடுவதில்லை. தேங்கியுள்ள நீரில்தான் கொசுக்கள் முட்டையிடும்.
அதேபோல் நாம் உடலை கழிவுகள் இன்றி தூய்மையாக வைத்திருந்தால் நோய் வருவதில்லை. கழிவுகள் என்பவை மலம், சிறுநீர், சளி, கெட்ட கொழுப்பு போன்றவை ஆகும். கிருமிகள் கழிவுகளில் இருந்து தானாகவே உற்பத்தியாகின்றன.
ஒரு மாம்பழத்தின் கொட்டையிலிருந்து எப்படி இயல்பூக்கத்தினால் ஒரு வண்டு தானாவே உருவாகிறதோ, அதேபோல் கிருமிகள் தேங்கியுள்ள கழிவிலிருந்து தானாவே உருவாகின்றன.
மேலும், இயற்கை மருத்துவம் நோய் என்பது ஒன்றுதான் என்கிறது.
சித்த மருத்துவத்தில் நோய்களின் எண்ணிக்கை ஏறத்தாழ ஐந்தாயிரம் எனப்பட்டுள்ளது.
ஆங்கில நோய்களுக்கு எண்ணிலடங்கா பெயர்களை இட்டுள்ளது.
இயற்கை மருத்துவம் நோய் என்பது ஒன்றுதான் என்றும் , உடல் உறுப்புகளின் பெயர்களுக்கேற்ப நோயின் பெயரும் மாறுபடுகிறது என்கிறது.
எடுத்துக்காட்டாக, ஒரு குளத்தின் கரை உடைந்துவிட்டது என பொத்தாம்பொதுவாக சொன்னால் யாருக்கும் புரியாது. அதற்கு பதில், குளத்தின் கிழக்கு கரை உடைந்துவிட்டது என்று சொன்னால் தெளிவாக புரியும்.
அதேபோல் நம் உடலிலுள்ள அழுக்குகள், கழிவுகள் உடலின் ஏதேனும் ஒரு பகுதி வழியாக வெளியேறுகிறது.
வெளிவிடும் மூச்சுக் காற்றாகவும்,மலமாகவும், சிறுநீராகவும் வெளியேறுகிறது.
சற்று அதிகமானால் கண்ணில் பீளை, சளி, வியர்வை ஆகிய வழிகளிலும் உடல் தன் கழிவை வெளியேற்றுகிறது.
இன்னும் அதிகமானால் காய்ச்சல், தலைவலி, வாந்தி பேதி, தொற்று போன்ற உணர்வுகளால் நமக்கு உடலில் கழிவு அதிகமிருக்கிறது என்பதை உடல் தெரிவிக்கிறது. கழிவுகள் அதிகரிக்க அதிகரிக்க துன்பம் அதிகரிக்கிறது, நோயின் பெயரும் அதற்கேற்ப மாறுபடுகிறது.
சரி....உடலில் கழிவுகளும் உருவாகித் தேங்க காரணம் என்ன? நோய்களாக அவை உருவெடுக்க காரணம் என்ன?
இதற்கு பதில் மிக எளிமையானது. மனித உடலானது (ரத்தத்தில்) இருபத்தைந்து சதவீதம் அமிலத்தன்மையும், எழுபத்தைந்து சதவீதம் காரத்தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
இந்த இருபத்தைந்து சதவீதம் அமிலம் : எழுபத்தைந்து சதவீதம் காரம் என்ற விகிதாச்சாரம் தவறும்போது, சீர்குலையும்போது உடலில் கழிவுகள் தேக்கமும், கிருமிகள் உற்பத்தியும் துவங்கிவிடுகின்றன. இங்கு நாம் கவனிக்க வேண்டியது, காரத்தன்மை என்றால் வீட்டில் பயன்படுத்தும் மிளகாய்பொடி காரம் அல்ல....இதன் பெயர் ஆங்கிலத்தில் ஆல்கலைன்.
அமில கார விகிதாச்சாரம் கெடக் காரணம் என்ன?
செயற்கையாக தயாரிக்கப்பட்ட உணவு, அதிக உணவு, நேரங்கெட்ட நேரத்தில் உண்ணுதல், பசியே இல்லாமல் உண்ணுதல், போதிய அளவு நீர் அருந்தாமை - இவை அமில:கார சமநிலை கேட்டு நோய்வர, உணவு சார்ந்த பிரதான காரணங்களாகும். உணவில் அமிலச்சத்து நிறைந்த உணவுகள், காரச்சத்து நிறைந்த உணவுகள் என இரண்டுவகை உள்ளன.
மாவுசத்து (கார்போஹைட்ரேட்), கொழுப்பு, புரதம் ஆகியவை நிறைந்த உணவுகள் அமில உணவுகள் ஆகும். வைட்டமின்கள், தாது உப்புகள் (சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு போன்றவை) நிறைந்த உணவுகள் காரத்தன்மை உண்டாக்கும் உணவுகளாகும்.
துரதிஷ்டவசமாக, நாம் அனைரும் அமிலச்சத்து நிறைந்த உணவுகளையே உண்டு வருகிறோம். அடுத்த பதிவில் எந்தெந்த உணவுகள் அமிலத்தன்மை கொண்டவை, எந்தெந்த உணவுகள் காரத்தன்மை கொண்டவை என்பதை ஒரு அட்டவணையாக தருகிறேன்.
உடலின் செல்கள் அமிலத்தன்மையை அடைந்தது விட்டதென்றால் உடலுக்கு அழிவுதான் என்றும், வாழ்வின் போக்கும்- உடல் நலமும் - வயதான காலத்தில் நோய்களுக்கு தாக்கு பிடிக்கும் சக்தியும் - காரதன்மையையே சார்ந்தது என் டாக்டர். ஹெச்.சி. மேன்ஹேல் (எம். டி ) கூறுகிறார்...
யாம்இருக்க பயமேன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...