Wednesday, March 28, 2018

சிவபெருமான்… தன் தலையில் கங்காதேவியை தூக்கி வைத்து கொண்டாடுவதன் பின்னணி – அரிய தகவல்

சிவபெருமான்… தன் தலையில் கங்காதேவியை தூக்கி வைத்து கொண்டாடுவதன் பின்னணி – அரிய தகவல்

பொதுவாக சிவ பெருமான் என்றால் பல‌ லிங்க ரூபமாகவும், ஒருசில இடங்களில்
நடராஜராகவும் சில இடங்களில் மனித தோற்றமாகவும் காட்சி அளித்து வருகிறார். அந்த மனித தோறத்தில் தலையில் எப்போது கங்காதேவி தனது தலையில் வைத்து கொண்டாடிக் கொண்டிருப்ப‍வர் போல் காட்சிகள் இருக்கும் அது ஏன்? அதன் சரித்திர பின்னணி இங்கு காண்போம்.
சிவபெருமானுக்கு இரண்டு மனைவிகள் என்று யாவரும் கூறு துண்டு. ஆனால் அது தவறு. சிவனுக்கு பார்வதிதேவி மட்டுமே மனைவி. அப்படியானால் கங்கா தேவியை சிவபெருமான் தலையில் ஏன் வைத்திருக்கிறார் என நமக்கெல்லாம் கேள்வி எழும். அதற்கான விடையை பார்ப்ப்போம்.
அன்றையகாலத்தில் கங்கையானது பூமியில் ஓடாது, ஆகாய கங்கையாக ஓடி கொண்டிருந்தது. அப்போது பகீரதன் என்ற அரசன் தன் மூதாதையர்களின் ஆத்மா சாந்தி அடைய வழி தேடி முனிவர்களை நாடினான். அப்போது முக்காலம் அறிந்த முனிவர் ஒருவர், ஆகாய கங்கையை பூமிக்கு கொண்டு வந்து அவர்களின் அஸ்தி யை அதனில் கரைத்தால் அவர்கள் முக்தி அடைவார்கள் என கூறினார். ஆகையால், பகீரதன் கங்கையை பூமிக்கு அழைக்க கங்கா மாதாவை நோக்கி கடுந்தவம் புரிந்தான்.
பகீரதனின் கடுந்தவத்தை மெச்சி கங்கா மாதா அரசன் முன் எழுந்தருளினாள். வரம் தந்த கங்கா தேவி ஒரு நிபந்தனை விதித்தாள். நான் என்னுடைய வேகத்தில் இந்த பூமியை நோக்கி வந்தேன் என்றால் இந்த பூமி என் வேகம் தாங்காது வெடித்து சிதறிவிடும். ஆகவே, என் வலிமையை தாங்க கூடிய ஒருவர் என்னை அவர் தலையில் தாங்கி இந்த பூமிக்கு தருவிக்க வேண்டும். நீ தென்னாடுடைய சிவனை நோக்கி தவம் செய். பரமனால் மட்டும்தான் என் வலிமையை தாங்க முடியும்” என்று கூறி மறைந்தாள்.
பகீரதனும் சிவனை நோக்கி தவம் செய்து தான் எண்ணத்தை வேண்டி நின்றான். சிவபெருமானும் தன் சடாமுடியை விரித்து அதில் கங்கையை இறங்க சொன்னார். சிவனின் திருமுடியை அடைந்த கங்கா, வேகம் குறைந்து திருமுடியில் இருந்து பூமிக்கு இறங்கினாள். ஆகவே தான், சிவபெருமான்… தன் தலையில் கங்காதேவியை தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார். (lord shiva with ganga )
கங்கா தேவியை சிவபெருமான் தலையில் வைத்திருக்க காரணம் என்ன…?
ரஹோத்தமன் என்பவர்… …. எமது மின்னஞ்சலுக்கு அனுப்பிய பதிவு

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...