Thursday, March 8, 2018

ஒரே சொத்தை இருவருக்கு விற்றால் அந்த சொத்தை எப்ப‍டி மீட்பது.

ஒரே சொத்தை இருவருக்கு விற்றால் அந்த சொத்தை எப்ப‍டி மீட்பது?

ஒரே சொத்தை இருவருக்கு விற்றால் அந்த சொத்தை எப்ப‍டி மீட்பது
தான் சம்பாதித்த‍ பணத்தில் சிறுகச் சிறுக சேமித்து ஒரு சொத்தை
வாங்குகிறோம் அப்ப‍டி வாங்கும் சொத்தை விற்பவர் இன்னொருவ ருக்கும் போலியான ஆவணம் தயார் செய்து விற்றிருந்தால் அது மிக ப்பெரிய சிக்க‍லை ஏற்படுத்தி விடும்.
அப்ப‍டி ஒரே சொத்தை (#One_Property) இருவருக்கு விற்பது (Two Buyers) சட்டப்படி குற்றம் (#CriminalOffence)ஆகும். அவ்வாறு ஒருவர் விற்பனை செய்திருந்தால் இரண்டாவதாக செய்த விற்பனை செல்லாது. இ ருந்தாலும், அந்த சொத்தை முதலாவதாக வாங்கியவர் சட்டப்படி சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அந்த இரண்டாவது பத்திரத்தை முறைப்படி ரத்து செய்ய என்ன செய்ய வேண்டும்?
இரண்டாவதாக பதிவுசெய்யப்பட்டுள்ள பத்திரத்தின் பதிவுகளை ரத்துசெய்யக்கோரி, பதிவுச்சட்டம் 1908பிரிவு 82ன்கீழ் பதிவுத்துறை த் தலைவர் அவர்களுக்கு முதலில் உரிய ஆவண நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பதிவுத்துறைத் தலைவர் அவர்களின் உத்தரவின்படி தங்களின் விண்ணப்பமானது தங்களது மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்) அவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க அனுப்பப்படும்.
மாவட்டப் பதிவாளர் அவர்கள், சமபந்தப்பட்ட இரண்டு தரப்பினரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டு ஆவணங்களை ஆய்வுசெய்வார்
உங்களது புகாரில் உண்மை இருப்பது மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்) அவர்களுக்கு தெரியவந்தால், இரண்டாவதாக பதிவு செய்யப்பட்ட பத்தி ரஙளை ரத்துசெய்ய சார்பதிவாளர் அவர்களுக்கு உத்தரவிடுவார்.
பதிவுச்சட்டம், 1908-பிரிவு 83ன்கீழ் சட்டத்திற்கு புறம்பாக இரண்டு நபர்களுக்கு ஒரே சொத்தை விற்பனை செய்த நபர் மீது, காவல்நி லையத்தில் புகார் அளித்து சட்டப்ப டியான நடவடிக்கை எடுக்கவும் சார்பதிவாளர் அவர்களுக்கு அதிகாரம் உள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...