
வரும்ம்ம் ஆனா வராது
காகம் கவிழ்த்ததால் கமண்டலத்திலிருந்து விடுதலையாகி வேகமாய் பாய்ந்தோடிய

தஞ்சை மண்ணில் கொஞ்சி விளையாடிய காவிரி, இன்று தஞ்சை மக்களைப் பராரியாய் கையேந்த வைத்திருப்பதற்கு யார் காரணம்? இயற்கையல்ல சுயநல மனிதர்களும் மாநில
வெறி பிடித்த சில மடையர்களும், தேர்தல் வெற்றி க்காகவே இயங்கும் அரசியல் வியாபாரிகளும்தான் கரைபுரண்ட காவிரி இன்று கரை சேராதிருப்பதற்கு முக்கிய காரணங்கள்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை என்றுமே மதித்திடாத கர்வம் கொண்ட கர்நாடக காங்கிரஸ் அரசை நீதிமன்ற அவ மதிப்பைக் காரணங்காட்டி… இன்றைய பா.ஜ•க•அர சும் தூக்கி யெறியத் தயங்கியது ஏன்? ஆறு வாரத்திற்குள் ஆணையம் அமைத்திட
உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டபின்னரும் கடைசி வரை தூங்கி விட்டு இன்று மூன்று மாத அவகாசத்தை மோடி சர்க்கார் வேண்டுவது ஏன்? எதற்காக?

1974-ல் காவிரி ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க அன்றைய தன்மானமுள்ள அன்றைய திராவிட பாரம்பரிய தமிழக அரசு மறுத்தது ஏன்? மத்தியிலும் மாநிலத்திலும் கூட்ட
ணியில் கும்மியடித்து பதவிகளை பெற்று ஊழல்களாலும் செய்யத் தெரிந்தவர்களுக்கு சொந்த மாநிலத்திற்கு தண்ணீர் பெற்றுத் தர முடியாதது ஏனோ? 39 நாடாளு மன்ற உறுப்பினர்களை இன்றைய ஆளுங்கட்சிக்கு மக்கள் தேர்ந் தெடுத்தது கூவத்தூரில் கும்மியடிக்கவா

இந்த கேள்விகளுக்கு விடை தெரிந்தும் தெரியாதது போல் ஆளுங்கட்சி ஆண்ட கட்சி எதிர்கட்சி, எதிரிக்கட்சி தமிழ் நாட்டை காப்பாற்றுவதற்காகவே பிறந்த சில அவதாரங்க ள் எல்லாருமே போராடுவது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.

எல்லா மொழியும் இந்திய மொழியே எல்லா வளமும் இந்திய வளமே எல்லா உணவும் இந்திய உணவே எல் லோர் உணர்வும் இந்தியன் என்கிற உணர்வே என்ற பக்குவநிலை வராதவரை காவிரி வரும் ஆனா வராது….
No comments:
Post a Comment