Wednesday, April 18, 2018

வாஸ்து என்பது எது? – மெய்ஞானத்தை அறிந்த நம் நாட்டில் நாம் எப்படி வாழ்கின்றோம்.

மனிதனானவன் “முழு முதல் கடவுள்” என்றால் விஞ்ஞான அறிவு கொண்டு எத்தனையோ வகை உயிரணுக்களை இன்று உருவாக்கியுள்ளார்கள்.

எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலையில் புற நிலைகள் செய்தாலும் அக நிலைகளிலும் ஜீவ அணுக்களை உருவாக்கும் விஞ்ஞான தத்துவமே இன்று வந்துவிட்டது.

கருவிற்குள் இருக்கும் ஒரு சிசுவின் தன்மையும் அது எப்படி அதனின் உணர்வு இயக்குகின்றது என்று காணுகின்றார்கள்.

அது வளரும் பருவத்தில் கரு உருவான பத்து நாட்களுக்குள் கருவின் சிசுக்கள் எப்படி இயக்குகின்றது என்ற நிலையை எலெக்ட்ரானிக் என்ற உணர்வின் அதிர்வை வைத்து அதனின் நிலையை விஞ்ஞானி அறிகின்றான்.

அது வளர்ந்து வரப்படும் பொழுதே அதில் வரக்கூடிய குறைபாடுகள் என்ன ஏற்படுகின்றது? என்றும் கண்டறிகின்றார்கள்.

எந்த நிலையை இன்று புறத்தால் செய்தாலும் அதே எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற உணர்வின் அதிர்வுகளை உள்ளே விட்டு அந்தக் குழந்தைகள் உருமாறினாலும் உருமாற்றினலும் அதை மாற்றியமைக்கும் சக்தி கொண்டு வருகின்றான் விஞ்ஞானி.

கண்களில் நாம் பார்க்கின்றோம்.

இப்பேர்ப்பட்ட விஞ்ஞான வளர்ச்சிகள் வந்த இந்தக் காலத்திலும் நான் மந்திரத்தால் ஜெபிப்பேன் என்ற நிலைகளும் ஜோதிடம் பார்த்து, வாஸ்து சாஸ்திரம், அந்தச் சாஸ்திரம் பார்த்து நான் செய்வேன் என்ற நிலையில் நாம் சென்று கொண்டிருந்தால் நம்மை நாம் இழுக்குப்படுத்துகின்றோம், மனிதன் நாம் நம்முடைய அறிவை இழந்து கொண்டிருக்கின்றோம் என்று தான் பொருள்.

இங்கே “வாஸ்து” என்பது எது?

வாசுதேவனுக்கும் தேவகிக்கும் சிறைச்சாலையில் கண்ணன் பிறந்தான் என்று தெளிவாக நம் சாஸ்திரங்கள் கூறுகின்றது.

நாம் எதைச் சுவாசிக்கின்றோமோ “வாசுதேவன்”, உயிர் சுவாசித்ததை உருவாக்குகின்றான். “தேவகி” நாம் எதைத் தேவை என்று எந்த உணர்வை எடுத்தோமோ அந்தச் சக்தியாக நம்மை இயக்குகின்றது.

தான் பார்க்க வேண்டும் என்ற உணர்வின் தன்மை வரும் பொழுது உடலான நிலைகள் கொண்டு நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் அறிவாகத் நமக்குள் தெரிந்து கொள்கின்றோம்.

கண்கள் இல்லாதபோது கண்ணின் உணர்வின் தன்மையை உருவாக்கியது நம் எண்ணமே. அந்த எண்ணத்தின் தன்மையை உருவாக்கியது உயிரே. இதையெல்லாம் தெளிவாகக் கூறுகின்றது நம் சாஸ்திரங்கள்.

புறத்தால் நாம் இன்று உடலாக இருக்கின்றோம். இன்னது செய்யவேண்டும் என்ற உணர்வின் தன்மை வரப்படும் பொழுதுதான் உணர்ச்சியின் தன்மை அறிவாக உங்களை இயக்குகின்றது.

ஏன் உங்களால் இதைச் செய்ய முடியாது?

விஞ்ஞான அறிவு இந்த நிலைக்கு வந்திருக்கும் பொழுது மெய்ஞானத்தின் தன்மை அறிந்து கொண்ட நம் நாட்டில் இன்னும் அஞ்ஞான வாழ்க்கை வாழ்வது சரியா? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நாம் சுவாசிப்பதை நம் உயிரான ஈசன் உருவாக்குகின்றான். அந்த நிலைப்படி தான் நம் வாழ்க்கை அமைகிறது என்ற நிலையை உணர்ந்து அருள் உணர்வின் தன்மையை உங்கள் சுவாசமாக்கி அந்த அருள் வழியில் நீங்கள் நடந்தால் உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.

நீங்கள் யாரிடமும் சென்று யோசனை கேட்க வேண்டியதில்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...