Friday, April 20, 2018

சந்தோஷமாக வாழ்வோம்...!*

ஒரு மனிதன் திடீரென இறந்து போனான்...!
அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள்
அவன் அருகில் வந்தார்...!
*கடவுள் 
" வா மகனே...!
நாம் கிளம்புவதற்கான
நேரம் வந்து விட்டது...! "
*மனிதன் 
" இப்பவேவா ?
இவ்வளவு சீக்கிரமாகவா ?
என்னுடைய திட்டங்கள்
என்ன ஆவது ? "
*கடவுள் 
" மன்னித்துவிடு மகனே...!
உன்னை கொண்டு
செல்வதற்கான நேரம் இது...! "
*மனிதன் 
" அந்தப் பெட்டியில் என்ன உள்ளது ? "
*கடவுள் 
" உன்னுடைய உடைமைகள்...! "
*மனிதன் 
" என்னுடைய உடைமைகளா...!
என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்
எல்லாமே இதில்தான்
இருக்கின்றனவா ? "
*கடவுள் 
" நீ கூறியவை அனைத்தும்
உன்னுடையது அல்ல..
அவைகள் பூமியில்
நீ வாழ்வதற்கு தேவையானது...! "
*மனிதன் 
" அப்படியானால்
என்னுடைய
நினைவுகளா ? "
*கடவுள் 
" அவை காலத்தின் கோலம்...! "
*மனிதன் 
" என்னுடைய
திறமைகளா ? "
*கடவுள் 
" அவை உன் சூழ்நிலைகளுடன்
சம்பந்தப்பட்டது...! "
*மனிதன் 
" அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா ? "
*கடவுள் 
" மன்னிக்கவும் !
குடும்பமும் நண்பர்களும்
நீ வாழ்வதற்கான வழிகள்...!"
*மனிதன் 
" அப்படி என்றால்
என் மனைவி மற்றும் மக்களா ? "
*கடவுள் 
" உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானவர்கள் அல்ல...! அவர்கள்
உன் இதயத்துடன்
சம்பந்தப்பட்டவர்கள்.! "
*மனிதன் 
" என் உடலா ? "
*கடவுள் 
"அதுவும் உனக்கு
சொந்தமானதல்ல...!
உடலும் குப்பையும் ஒன்று...! "
*மனிதன் 
" என் ஆன்மா ? "
*கடவுள் 
"அதுவும் உன்னுடையது அல்ல...! அது என்னுடையது...! "
🍂 மிகுந்த பயத்துடன்
கடவுளிடமிருந்து
அந்தப் பெட்டியை
வாங்கி திறந்தவன்
காலி பெட்டியை கண்டு
அதிர்ச்சியடைகிறான்...!
🍂 கண்ணில் நீர்
வழிய கடவுளிடம்
" என்னுடையது என்று
எதுவும் இல்லையா ? "
என கேட்க...!
*கடவுள் சொல்கிறார் 
🍂 அதுதான் உண்மை !
நீ வாழும் ஒவ்வொரு
நொடி மட்டுமே
உன்னுடையது...!
வாழ்க்கை என்பது
நீ கடக்கும் ஒரு நொடிதான்...!
🍂 ஒவ்வொரு நொடியையும்
சந்தோஷமாக வாழ்...!
எல்லாமே உன்னுடையது என்று நினைக்காதே...!
🍂 ஒவ்வொரு நொடியும் வாழ்...! உன்னுடைய வாழ்க்கையை வாழ்...!
🍂 மகிழ்ச்சியாக வாழ்...! அது மட்டுமே நிரந்தரம்...!
🍂 உன் இறுதி காலத்தில்
நீ எதையும் உன்னுடன்
கொண்டு போக முடியாது...!
🍂 *வாழுகின்ற*
*ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம்...!*
     

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...