Tuesday, April 30, 2019

99 மதிப்பெண்ணுக்கு பதிலாக 0 மார்க் போட்ட ஆசிரியை சஸ்பெண்டு.

99 மதிப்பெண்ணுக்கு பதிலாக 0 மார்க் போட்ட ஆசிரியை சஸ்பெண்டு
















தெலுங்கானா மாநிலத்தில் இன்டர்மிடியேட் தேர்வு (11 மற்றும் 12-ம் வகுப்பு) பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடந்தது. இந்த தேர்வை மொத்தம் 9.47 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். இந்த தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானது. இதில் மிகப்பெரிய குளறுபடி காணப்பட்டது.

பாஸ் மதிப்பெண் பெற வேண்டிய 3.28 லட்சம் பேர் தோல்வி அடைந்ததாக தேர்வு முடிவில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவ-மாணவிகள் மறு மதிப்பீடு செய்ய கோரி விண்ணப்பித்து உள்ளனர். தேர்வு முடிவு காரணமாக 21 பேர் தற்கொலை செய்து உள்ளனர்.

இதைதொடர்ந்து தெலுங்கானா பள்ளி கல்வித்துறை 3 பேர்கொண்ட குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில் மாணவி ஒருவருக்கு 99 மதிப்பெண்ணுக்கு பதிலாக 0 மார்க் இருந்த விவரம் வெளியே தெரிய வந்து உள்ளது.

கிரிஜா நவ்யா என்ற மாணவி தெலுங்கு பாடத்தில் 0 மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அவர் வர்த்தக பாடத்தில் 99, சிவிக்ஸ் பாடத்தில் 96, பொருளாதாரம் 95, ஆங்கிலம் 68 பெற்று இருந்தார். தெலுங்கு பாடத்தில் மதிப்பெண் இல்லாமல் தோல்வி அடைந்ததாக முடிவு வெளியானதால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதைத்தொடர்ந்து அந்த மாணவி தனது மதிப்பெண்ணை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்று முறையிட்டார். அப்போது அவருக்கு 99 மார்க்குக்கு பதிலாக 0 மார்க் போடப்பட்டிருந்த அதிர்ச்சிகரமான தகவல் தெரிய வந்தது.

இதைதொடர்ந்து அவரது தெலுங்கு பேப்பரை மதிப்பீடு செய்த ஆசிரியை உமாதேவியை சஸ்பெண்டு செய்து தெலுங்கானா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதோடு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

தனியார் பள்ளியில் பணிபுரியும் அந்த ஆசிரியையை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...