Saturday, April 27, 2019

*வாழை இலையும் உடல் ஆரோக்கியமும்.

“வாழை இலையின் நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே .! அந்தக் கோட்டைப் போட்டது யார்..?”*
.
*என்ன பதில் சொல்வது இதற்கு..?*
.
*லாஜிக்படி பார்த்தால் , எல்லா இலைகளையும் போலத்தான் வாழை இலையும் ..!*
.
*"புராண காலங்களில் வாழை இலையின் நடுவில் இவ்வளவு பெரிய கோடு கிடையாதாம்..!*
*இராமாயண காலத்தில் ....*
*ஒரு முறை ராமன் சாப்பிடும்போது அனுமனையும் தன்னுடன் ஒரே இலையில் சாப்பிடச் சொன்னாராம்*
*இருவரும் எதிர் எதிராக அமர்ந்திருந்தார்களாம்*
.
*அப்போதுதான் அணில் முதுகில் கோடு போட்ட மாதிரி*
*வாழை இலையின் நடுவிலும் தனது கையால் ஒரு பெரிய கோட்டைக் கிழித்தாராம் ராமன்.*
.
*ராமர் இருந்த பக்கத்தில் மனிதர்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளும்*
*அனுமன் இருந்த எதிர் பகுதியில் குரங்குகள் விரும்பிச் சாப்பிடும் காய்கறிகளும் பரிமாறப்பட்டதாம்*.
*அப்படி பரிமாறிய அந்தப் பழக்கம்தான் இன்னும் நம்மிடையே தொன்று தொட்டு தொடர்ந்து வருகிறதாம்*
*# கதை சுவையாகத்தான் இருக்கிறது...!*
.
*நல்லது... வாழை இலை பற்றி இன்னும் சில விஷயங்கள்
.
*வாழை இலையில் சாப்பிடும் எல்லோருக்கும் ,சாப்பிடும் முன் ... ஒரு நொடிக் குழப்பம் ஒன்று வந்தே தீரும்.*
.
*“ பரிமாறும்போது இலையை எப்படிப் போடுவது..?*
*இலையின் நுனி இடது பக்கமாக வர வேண்டுமா..? வலது பக்கமா..?*
.
*சிம்பிள் ..!*
.
*இலையின் நுனி , சாப்பிட அமர்ந்திருப்பவருக்கு இடது கை பக்கமாக வருகிற மாதிரி போட வேண்டும்.*
.
*ஏன்..?*
.
*நாம் சாப்பிடும்போது , வலது கையால் பிசைந்து சாப்பிடுவதால்*
*இலையின் வலது பக்கம் அதிக இடம் தேவை..!*
.
*சரி ...உப்பு, ஊறுகாய், இனிப்பு இவற்றையெல்லாம்*
*இலையின் குறுகலான இடது பக்கத்தில் வைக்கிறோமே .. அது ஏன்..?*
.
*உப்பு, ஊறுகாய், இனிப்பு ..* *இதையெல்லாம் ஓவராக சாப்பிட்டால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது*
*கொஞ்சமாகத்தான் சாப்பிட வேண்டும். அதனால்தான் இலையின் குறுகலான பாகத்தில் இட ஒதுக்கீடு !*
.
*சாதம் , காய் கறிகள் ...* *இவற்றையெல்லாம் நிறைய சாப்பிடலாம் .*
*அதனால் அவற்றை இலையின் அகலமான வலது பக்கத்தில் பரிமாற வேண்டும்.*
.
*சரி .. இலையில் முதலில் வைக்கப்படும் இனிப்பை , பலர் கடைசியாக* *சாப்பிடுகிறார்களே ..இது சரிதானா ..?*
.
*இல்லை..!*
.
*இலையில் முதலில் இனிப்பு பரிமாறப்படுவதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது*
*நாம் இனிப்பை எடுத்து வாயில் வைத்த அடுத்த நொடியில்... அந்த இனிப்பு , உடனடியாக உமிழ் நீருடன் கரைந்து , ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று , வயிற்றில் ஜீரண சக்திக்கு தேவையான அமிலங்களை சுரக்க செய்ய உத்தரவிடுகிறது . அதனால்தான் ஜீரணம் எளிதாக நடை பெறுகிறது.*
.
*# அப்பப்பா ! இலையைப் போடுவதிலிருந்து , எப்படி பரிமாறுவது , எதை முதலில் சாப்பிடுவது ...*
*எல்லாவற்றையும் முறையாக வகுத்துத் தந்திருக்கும் நம் முன்னோர்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...