Thursday, April 25, 2019

சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.

*இந்திய வானிலை ஆய்வு மைய அறிவுரையின்படி 30.04.2019 அன்று தமிழக வட கடலோர மாவட்டங்களில் காற்றுடன் கனமழை வரும் என எதிர்பார்க்கப் படுகிறது*.
காற்றுடன் கனமழை யாழ் அதிக பாதிப்புக்குள்ளாகும் தென்னை உள்ளிட்ட பல்வேறு பல ஆண்டுகள் பலன் தரும் தோட்டக்கலை மரங்களை பாதுகாக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் விவரம் வருமாறு:-
*தென்னை மரங்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள்:*
தென்னை மரங்களைப் பொறுத்தவரை மகசூல் தரும் *தென்னை மரங்களில் தலைபாகத்தில் தேங்காய், இளநீர், பச்சை ஓலை, காய்ந்த ஓலை* போன்றவை அதிகம் இருந்தால் காற்றின் வேகத்தினால் மரம் முழுவதும் அடியோடு சாய்வதற்கோ, முறிந்து விழுவதற்கோ வழிவகுக்கும். எனவே, *இளம் ஓலைகளைத் தவிர்த்து, மீதமுள்ள பச்சை மற்றும் காய்ந்த மட்டைகள், இளநீர், தேங்காய் போன்றவற்றை வெட்டி அகற்றி விடுமாறு* விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதனால், மரம் காற்று வேகத்தை தாங்கி நிற்கும் வாய்ப்புகள் அதிகம்.
புயல், மழை போன்றவற்றை எதிர்கொள்ளவிருக்கும் *நான்கு நாட்களுக்கு முன்பு விவசாயிகள் தென்னந்தோப்புகளுக்கு நீர்ப் பாய்ச்சுவதை நிறுத்திவிட வேண்டும். இதனால், தென்னையின் வேர்ப்பகுதி மண்ணில் நன்றாக இறுகி மரம் சாய்ந்துவிடாமல் பாதுகாக்க உதவியாக இருக்கும்.*
*மா, பலா, முந்திரி மற்றும் பல்வேறு தோட்டக்கலைப் பயிர்கள்:*
காற்று வீசும் சமயம், காற்று மரங்களின் ஊடே புகுந்து செல்லும் வகையில், *பக்கவாட்டுக் கிளைகளையும் அதிகப்படியான இலைகளையும் கவாத்து செய்து, மரம் வேரோடு சாய்ந்து விடுவதை தடுக்கலாம்.* கவாத்து செய்த இடங்களில் பூஞ்சாண நோய் பரவாமல் தடுக்க *காப்பர் ஆக்ஸிகுளோரைடு ஒரு லிட்டர் நீரில் 300 கிராம் கலந்த கலவை கொண்டு பூச வேண்டும்.*
தோப்புகளுக்கு *நீர் பாய்ச்சுவதை இரண்டு நாட்களுக்கு முன்பே நிறுத்திவிடுவதன் மூலம் வேர்ப்பகுதி இறுகி மரம் காற்றில் சாயாமல் தடுக்கலாம்.*
உரமிடுதல் போன்ற பணிகளுக்காக மரத்தை சுற்றி பாத்தி கட்டுதல் போன்ற பணிகளை தற்சமயம் மேற்கொள்ளாமல், கன மழை மற்றும் காற்று கடந்த பின் மேற்கொள்வது சிறந்தது.
வாழைத் *தோப்பினைச் சுற்றி வாய்க்கால் எடுத்து மழைநீர் தேங்காமல் வெளியேற வழிவகை செய்ய வேண்டும்.*
நெல், பயறு வகைகள், சிறுதானியங்கள், பருத்தி, கரும்பு, நிலக்கடலை போன்ற பயிர்களுக்கு வயல்களில் *மழை நீர் தேங்கியிருந்தால், தண்ணீரை வடித்து வடிகால் வசதியினை நன்றாக ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.*
விவசாயிகள் மேற்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, பருவமழை காலத்தில் மழை மற்றும் காற்றின் பாதிப்பிலிருந்து பயிர்களைப் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
*வேளாண்மை துறை*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...