Friday, November 1, 2019

திரு கருணாநிதி அவர்கள் இப்போது இருந்தால்......!(ஒரு கற்பனை)!

"முரசொலி செய்தி!
"மூலப் பத்திரம் எங்கே என்று மருத்துவர் திரு ராமதாஸ் கேட்ட கேள்விக்கு முன்னாள் முதல்வர் திரு கருணாநிதி சாட்டையடி!
"உடன்பிறப்பே!
"BP, ECG, Ecco, சர்க்கரை அளவு என்ன என்று ஒரு மருத்துவர் கேட்டிருந்தால் உடனே கொடுத்திருப்பேன்! மூல பவுத்திர தொந்தரவு இருக்கிறதா என்று கேட்டிருந்தாலும் உடனே நான் பொறுப்போடும் கடமை, கண்ணியத்தோடும் பதில் சொல்லியிருப்பேன்!
ஆனால் இதையெல்லாம் கேட்காமல் மூலப் பத்திரம் எங்கே என்று ஒரு வக்கீல் கேட்க வேண்டிய கேள்வியை ஒரு மருத்துவர் கேட்கின்றார் என்றால் இவர் யார்? எங்கிருந்து வந்தார்? கைபர் கணவாயைத் தாண்டி வந்து நம்மை ஆள நினைக்கும் ஆதிக்க சாதிக்கு சாமரம் வீசுபவரா என்ற பல கேள்விகள் தமிழன் மனதில் உலா வைருவது இயற்கைதான் என் உயிரினும் மேலான உடன் பிறப்பே!
இம் என்றால் சிறைவாசம்! இச் என்றால் பத்திரமாக இருக்கும் பத்திரத்தை தூக்கிக் கொடுத்து விட வேண்டுமா?
தன்மானமே உயிர் என நினைத்திடும் தன்மானத் தமிழனை, தவிட்டிற்கு காசு கொடுத்து வாங்கிய தவிலைப் போல் எண்ணி இரண்டு பக்கமும் அடிப்பதைப் போல் தங்கத் தமிழனை ஒரு போலி மருத்துவர் இனியும் மூலப் பத்திரம் பற்றி மூளையில்லாமல் கேட்டு வஞ்சிக்க முடியாது என்பதை காலம் ஒரு பாடமாகவே புகட்டும் காலம் நெருங்கிவிட்டது என்பதை நினைவுறுத்தும் காலம் வந்துவிட்டது என்பதை இந்த மருத்துவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்!"

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...