Friday, January 10, 2020

விஷயமறிந்தவர்களிடம் விபரம் கேட்டுத் தெளியலாம்.

🔱🚩மொட்டை போடுவதன் ஆன்மீகம்-அறிவியல் காரணம்-
உலகில் எங்கிருந்தாலும் பாரதமக்களிடையே தலைமுடியை முழுக்க மழிக்கும் பழக்கம் காணப்படுகிறது. இதனை மொட்டை போடுதல் (மொட்டையடித்தல்) என்பார்கள்.
இந்த பழக்கத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி, 1 வயது முதல் 100 வயது வரையில் மொட்டையடித்துக் கொள்வதை காணமுடியும்.
பெரும்பாலும் மொட்டை போடுதல் என்பது தங்கள் குலதெய்வம் கோவில்களுக்கு மட்டும் வேண்டுதல் வைத்து நிறைவேற்றப்படுகிறது.
குழந்தைகளுக்கு முடி எடுப்பதென்றால் ஒற்றைப்படை ஆண்டுகளில் (அதாவது ஒரு வயது , மூன்று வயது , ஐந்து வயது) எடுக்க வேண்டும். இரட்டைபடை ஆண்டுகளில் முடி எடுப்பதால் குழந்தைக்கு தொடர்ந்து உடல்நலக்குறை ஏற்படும் என்பார்கள்.
ஆனால் பெரியவர்களுக்கு அப்படியில்லை, எப்போது வேண்டுமானாலும் முடி எடுத்துக்கொள்வார்கள். அது தவறாகும்.
ஒரு முறை மொட்டையடித்துக் கொண்டால், அடுத்து முடி இறக்க மூன்று மாதங்களாக வேண்டும். மூன்று மாதமாகாமல், மீண்டும் முடி எடுக்கக்கூடாது.
இதனை பாரதமக்களிலேயே கிண்டலடிக்கும் மெய்ஞானம் இல்லாதவர்கள் உண்டு- 'உயிர் கொடுத்த சாமிக்கு மயிர் கொடுக்கிறாயா?' என்றும் ,
'ஏன் முடிய கொடுக்கிற விரலக் கொடுக்கறேன்னு வேண்டிக்கலாமே!' என்றும் பகுத்தறியார்கள் கேலி பேசுவார்கள்.
முடின்னா வளர்ந்துடும்ன்னு வேண்டிகிட்டாயா?' என்று கிண்டலடிப்பார்கள். மேல் நாட்டு மேதாவிகள்
யார் என்ன சொன்னாலும் இன்றும் மொட்டை போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருகியே இருக்கிறது, இன்னும் பெருகும்.குறிபாக ஏழுமலையானுக்கு காரணம் காக்கும் கடவுள்
மத பேதமின்றி, எல்லோருடைய கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியிருக்கும்.
இந்த மொட்டை போடும் அல்லது போட்டுக் கொள்ளும் பழக்கம் எப்போது யாரால் துவங்கப்பட்டது, என்பதனை பார்ப்போம்.
🚩🕉 மகாபாரதப் போரின் உச்சகட்ட போரின் முடிவு நாளான 18ம் நாள் இரவில், வரும் விதியின் கோரத்தை அறியாத பாண்டவர்கள் ஐவரின் குழந்தைகளும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த வேளையில், அவர்களின் உறக்கத்தை மீளா உறக்கமாக மாற்ற எண்ணி, அறையின் உள்ளே புகுந்த குரு துரோணாச்சாரியாரின் மகனான அஸ்வத்தாமன், உறக்கத்திலிருந்த குழந்தைகளை பாண்டவர்கள் என்று எண்ணி வெட்டி சாய்த்தான் .
அலறக்கூட நேரமின்றி மடிந்தன அந்த குழந்தைகள். விடிந்ததும் அங்கு வந்த பாண்டவர்கள், நடந்த கொடுமையை எண்ணி மனம் கலங்கினார்கள். இந்த மாபாதக செயலை செய்தவனை சிரம் கொய்வேன், என்று சபதமிட்டான் அர்ஜுனன். அன்று மாலைக்குள் யாரென்று கண்டறியப்பட்டு, விலங்கிட்டு கொண்டு வந்து பாண்டவர்கள் முன் நிறுத்தப்பட்டான் அஸ்வத்தாமன்.
குருவின் மகனை கொல்லுதல் பாபம் என திரௌபதியும் , அண்ணன்களும் கூற, 'என் சபதம் முடிக்காமல் விடமாட்டேன்' என கர்ஜித்தான் அர்ஜுனன்.
அப்போது ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு உபாயம் சொல்கின்றார். 'அர்ஜுனா , உன் கோபமும் செயலும் நியாயமானதே! ஆனாலும் தர்மத்தின் பாதையில் செல்லும் நீ புரிந்து கொள், அவனை சிரம் கொய்யாதே, பதிலாக சிகையை மழித்துவிடு, அது அவன் மரணித்ததற்கு ஒப்பாகும்' என்றார்.
அதற்காக, அஸ்வத்தாமனின் முடி மழிக்கப்பட்டு துரத்தப்பட்டான். ஆக, சிகையை (முடியை) இழப்பது என்பது மரணத்திற்கு சமமானதாகும்.
அறிவியல் காரணம்:
நம்முடைய உடல் அமைப்பின்படி வயிற்றில் இருக்கும் போது பித்தம் மற்றும் உடல் சிதை கழிவுகள் அனைத்தும் தலை முடியின் வழியாக மட்டுமே வெளியேற்றப்படும் எனவேதான் பிறந்த குழந்தைக்கு ஐந்தாம் மாதம் அல்லது ஏழாம்மாதம் மெட்டை அடித்து அந்த கழிவை நீக்க வேண்டும் இல்லை என்றால் மந்தநிலை, மூளை வளர்ச்சியற்ற நிலை, சிந்தனை திறன் குறைவு போன்ற பல குறைப்பாடுகள் ஏற்படும். அதனை தவிர்த்து நம் கலாச்சாரத்தை பின்பற்றிய அரசர்களும் மக்களும் பல துறைகளில் சாதித்து வாழ்தார்கள் நாம் பின்பற்றாமல் பகுத்தறிவற்று பரிகாசம் செய்து வாழ்வதெ இன்றைய மக்களின் இயலாமைக்கு காரணம் சிந்திபோம் செயல்படுவோம்
பாரதமக்களின் கலாசாரத்தின் ஒவ்வொரு அசைவிற்கும் காரணம் உண்டு ,
நாகரீகம் என்று எண்ணிக்கொண்டு, வெகு தூரம் வெளியே வந்து விட்ட மக்களாகிய நமக்கு, இது கிண்டலாகவும் கேலியாகவும் தெரிவது இயற்கை தானே.
ஒருவரின் ஜாதகத்தில் உயிருக்கு ஆபத்து இருந்தால், மரண திசையாக இருக்குமானாலும் அவர்கள் ஏதேனும் ஒரு குலதெய்வகோவிலுக்கோ (முருகன் மற்றும் சொந்த ஊரில் அம்மன்) அல்லது ஏழுமலையானுக்கு சென்று முடி எடுத்துக் கொள்வார்களேயானால், அந்த உயிராபத்திலிருந்து நீங்கிப் பிழைப்பது சர்வ நிச்சயமாகும்.
பாரத கலாசாரத்தின் ஒவ்வொரு சொல், செயல் அனைத்திற்கும் உள் அர்த்தம் உண்டு இதுவே நமது ரிசிகளும் சித்தர்கள் வகுத்த வாழ்க்கை நெறிமுறை. எல்லாவற்றையும் அறிந்து செயலாற்றுவதற்கு நமக்கு வயது போதாது. ஆகவே, சொல்வதை அப்படியே கேட்டு அதன் வழி செல்வதுதான் சாலச் சிறந்தது.
வேண்டுமானால், விஷயமறிந்தவர்களிடம் விபரம் கேட்டுத் தெளியலாம்.
ஒன்று மட்டும் நிச்சயம்! பாரதமக்களின் எந்த சொல்லும் செயலும் சதயமற்றதோ, அதர்மமானதோ, இறைவனுக்கு (அன்புக்கு) எதிரானதோ இல்லை.
யாரோ ஒருவர் ஏதோ தவறிழைத்தார் என்றால் பாரதகலாச்சாரமோ, அதைபின்பற்றும் மக்களோ, தமிழ்சமயமோ, காரணமில்லை என்பதை உணருங்கள்.
அதை பகுதறிய தெரியாத தவறாக புரிந்து தனிமனிதனின் தவறுக்காக, உலகின் புனிதமான மிகவும் பழைமையாக நம் பாரதகலாசாத்தையே இழிவாக்குவது,
இழிவாகப்பேசுவது என்பது எந்த பிறப்பானலும் தவறே!
வளமோடு வாழுங்கள், வாழும் நாளெல்லாம்...🔥

1 comment:

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...