Thursday, February 27, 2020

நமக்கு தெரியாமல் நம்முடைய தோஷங்களை அழித்துவிடும் எளிய ரகசியங்கள்.

அனைவரும் படித்து பயன் பெறுக.
1.படுக்கை அறையில் தலை அருகே நீரை வைத்து உறங்கிவிட்டு அந்த நீரை காலையில் செடிகளுக்கு விட சுக்ரதோஷம் படிப்படியாக குறையும்
இந்த விவரத்தை மாற்றி சொல்லலாம், படுக்கைக்கு நாம் எடுத்து செல்லும் குடிநீர் காலையில் மீதம் இருந்தால் செடிகளுக்கு குறிப்பாக துளசி அல்லது தொட்டாச்சிணுங்கி செடிகளுக்கு விட்டுவிட வேண்டும் ..
2.அடிக்கடி பசுவிற்கு வாழை பழம், கற்கண்டு பொங்கல் கொடுப்பது சந்திரனின் ஆசிகளை நமக்கு கொடுத்து புகழை பெற்று தரும் .
3.வசதி இல்லாத குடும்பத்தினருக்கு ஈமச்சடங்குகள் செய்ய
பணம், பொருள் கொடுத்து உதவி செய்தால், சனியின் ஆசிகளை கொடுத்து
ஆயுளை விருத்தி செய்யும் .
4.ஆசான், வேதம் படித்தவர், நம் முன்னோர்கள் மற்றும் சாதுக்களை விழுந்து வணங்கிட, புண்ணியயாத்திரைக்கு இல்லாதவருக்கு பொருள் கொடுத்து உதவுவது, குழந்தைபெற்ற ஏழை தம்பதியருக்கு பொருள் கொடுத்து உதவுவது, குருவின் ஆசிகள் கிடைக்கும்.
5.சிதிலமடைந்த கோவில்களுக்கு நீர்நிலை உண்டாக்குதல் /தண்ணீர் தொட்டி /குளம் சரி செய்தல் அல்லது செய்பவருக்கு உதவுதல்
தேவதைகளின் ஆசிகளை கொடுத்து நமக்கு வசியமும் கவர்ச்சியும் கொடுத்துவிடும் .
6.சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வதும் பசித்து தவிக்கும் உயிர்களுக்கு உணவு அளிப்பதும்,கோவிலுக்கு ஸ்வர்ணத்தை தானமாக அல்லது கலசத்திற்கு தருவது, தொழு நோய் /குஷ்டம் கண்டவர்களுக்கு வைத்தியசெலவு அல்லது அவர்களுக்கு நல்லஉணவு அளிப்பது சூரியனின் ஆசிகளை கொடுத்து நல்லஆரோக்கியம் மற்றும் வம்சவிருத்தி செய்யும் .
7.ஏழை பெண்களுக்கு திருமணத்திற்கு பொருள் கொடுத்து உதவுதல் ,
நாம் வாழும்மனை, தொழில் செய்யும் மனையை கைகளால் தொட்டு வணங்குதல், மேலும் பூமிக்கு மரியாதை செய்தல், பலஉயிர்களை வளர்த்தல்
(விலங்கு பறவைகள்),உயிர் பலிகளை நாம் தவிர்த்தல் இல்லாதவர்களுக்கு மருத்துவசெலவிற்கு பணம் கொடுத்தல் செவ்வாயின் ஆசிகளை கொடுத்து அஷ்டசுகம்களையும் தரும் .
8.ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு பொருள் உதவி செய்தல், புதன் கிழமை
தோறும் அன்னதானம் செய்தல், புதியஉடைகளை தானம் செய்தல் (குறிப்பாக குளிர் காலத்தில் செய்வது ) புதனின் ஆசிகளை நமக்கு கொடுத்து சண்டை பொறாமையினால் வரும் நோய் (திருஷ்டி) நீதிமன்றசோதனை போன்ற தொல்லைகளை விலக்கி நல்லதொழில்
மேன்மையான வாழ்க்கையை கொடுக்கும் .
9.நாகங்களை கண்டதும் அடிக்காமல் இருப்பது. இறந்தநாகத்தின் உடலை
கண்டதும் தீயிட்டு கொளுத்துவது.
குடி கெடுத்தவன், குடிகாரன், குரு துரோகி, பசுவை கொன்றவன் சண்டாளன் -- இவர்களிடம் நட்பு கொள்ளாமல் தவிர்ப்பது ராகு -கேது ஆசிகளை கொடுத்து அதிர்ஷ்டம் போகம், மற்றும் சகலபாக்கியங்களையும் அனுபவிக்கும் ஆசிகளை தரும் .
( இந்த பஞ்சமஹா பாவிகளை அடையாளம் கண்டு கொள்வது சற்று சிரமம் தான். தெரிந்து சேர்வது நமக்கு தரித்திரம் )
10.பாழடைந்தசிவன் கோவிலில் விளக்கு ஏற்றுவது பிரதோஷநாளில் சிவஸ்தலங்களுக்கு அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை முடிந்த அளவுக்கு வாங்கி கொடுப்பது, பச்சரிசியுடன் வெல்லத்தூளை கலந்து அந்தகோவிலின் சுற்று பிரகாரத்தில் தூவி விடுவது தேவர்களை சாந்தி படுத்திவிடும். இவர்கள் நம் முன்னோர்களுக்கு மோட்சபதவி அளிப்பார்கள். பொதுவானவை
ஒரு முறை செய்யும் பரிகாரம் அல்ல
வழக்கமாக செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. புரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் பலன் ஒன்று தான்.
ஓம் நமச்சிவாய

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...