Wednesday, February 26, 2020

பெருமைப்பட வேண்டிய,,, திமுகவினரை தலைகுனிய வைக்கப்போகும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை இது!!

தமிழக மொத்த மக்கள் தொகையே ஏழரை கோடி தான் இருக்கும், சரி ஒரு கணக்குக்கு 8 கோடி என்றே எடுத்துக்கொள்வோமே... அதில் 2 கோடி பேரிடம் கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள் என்றால்,, 8 கோடி மக்களின் எண்ணிக்கையை 2 கோடி கையெழுத்துகளால் வகுத்தால் விடை “4” வருகிறது.
அப்படியென்றால் தமிழகத்தில்,,, நமது குடும்பத்தாரிடம் அல்லது நமக்கு தெரிந்த நால்வரில் ஒருவரிடம் கையெழுத்து வாங்கியிருக்க வேண்டும் இல்லை கையெழுத்து பெற குறைந்தபட்சம் முயற்சியாவது நடைபெற்றிருக்க வேண்டும்,,, ஆனால் எனக்கு பெர்சனலாக தெரிந்த சுமார் நூறு பேரிடம் பேச்சுவாக்கில் கேட்டதில் “ஒருவரிடம்” குறித்துக் கொள்ளுங்கள் “ஒரே ஒருவரிடம் கூட கையெழுத்து தொடர்பாக அணுகக்கூட இல்லையென்கிறார்கள். (ஒருதலைப்பட்சமாக இருக்குமாதலால் பாஜகவினரிடம் கேட்கவில்லை, மற்றவர்களிடம் கேட்டேன் அதில் திமுகவினரும் அடக்கம்)
அப்படியென்றால் ஸ்டாலின் அவர்களை வைத்து நாலு பேரிடம் கையெழுத்து வாங்கி அதை போட்டோ எடுத்து போட்டுவிட்டால் போதும், தமிழகம் முழுக்க CAAவுக்கு எதிராக மக்கள் மனநிலை இருப்பதாக,, போலி ஊடகங்கள் மூலம் மக்களை நம்பவைத்துவிடலாம் என்ற மனப்பால் குடித்த திமுக, இன்று வளர்ந்து நிற்கும் சமூக வலைதளங்களால் பொய்யான மக்களுக்கு எதிரான போராட்டங்களை கட்டமைக்க முடியாமல் திணறுகிறது...
சமூக வலைதளங்கள் மலையென வளர்ந்து நிற்கும் இந்த காலத்திலேயே இவ்வளவு தண்ணி காட்டினால் பெரும்பாலான மக்கள், ஊடகங்கள் மூலமே செய்திகளை நுகர்ந்து கொண்டிருந்த நேரத்தில்... அதாவது நமது அப்பா காலத்தில் எந்த அளவு ஆட்டம் போட்டிருக்கும்? கொஞ்சம் நினைத்துப்பார்க்க வேண்டும்...
தயவுசெய்து திமுக நிறுவனர் ஸ்டாலின் அவர்கள் நிகழ்கால அரசியலுக்கு வரும்படி பணிவன்போடு கேட்டுக்கொள்கிறோம்...
தொடர்ந்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்து வருவதற்கு இளம் எழுத்தாளர் Maridhas அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றி...
இது ஊர்கூடி திமுகவின் முகத்தில் கரியை பூச வேண்டிய நேரம்...
-நன்றி

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...