Saturday, February 22, 2020

சிவானந்தா குருகுல நிர்வாகி மறைவு.

காட்டாங்கொளத்துார், சிவானந்தா குருகுலத்தின் நிர்வாகி எஸ்.ராஜாராம், 67, உடல் நலக்குறைவால் காலமானார்.செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துாரில், சிவானந்தா குருகுலம் என்ற ஆதரவற்றோர், கைவிடப்பட்ட குழந்தைகளுக்கான இல்லம் உள்ளது.இதன் நிர்வாகி எஸ்.ராஜாராம், உடல் நலக்குறைவு காரணமாக, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.
ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக, குருகுலம் வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. அரசியல் கட்சியினர், பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்தோர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இறுதிச்சடங்கு இன்று காலை நடக்கிறது.ஆதரவற்றோருக்காகவும், கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதற்காகவும், சிவானந்தா குருகுலத்தை, எஸ்.வி.அய்யர் - மங்களம் தம்பதி, 1945ல் துவக்கினர். அவர்கள் மறைவுக்கு பின், 19 வயதில், குருகுலத்தை நிர்வகிக்க துவங்கிய ராஜாராம், பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டார்.
அதற்காக, மத்திய அரசு, 2002ல், அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது.மறைந்த ராஜாராமுக்கு, லட்சுமி என்ற மனைவியும், கிஷோர், ராஜேஷ்குமார் என்ற இரு மகன்களும் உள்ளனர்.ராஜாராம் மறைவுக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், த.மா.கா., தலைவர் வாசன், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 சிவானந்தா குருகுல நிர்வாகி மறைவு

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...