Thursday, March 25, 2021

55 டி.எஸ்.பி.,க்கள் மாற்றம் : டி.ஜி.பி., திரிபாதி உத்தரவு.

 சென்னை தமிழகம் முழுதும், டி.எஸ்.பி.,க்கள் மற்றும் உதவி கமிஷனர்கள், 55 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.


சென்னை, திருவொற்றியூர் உதவி கமிஷனர் ஆனந்தகுமார், திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி.,யாகவும்; அங்கு பணிபுரியும் பொன்சங்கர், திருவொற்றியூர் உதவி கமிஷனராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.


latest tamil news



சென்னை, வேப்பேரி உதவி கமிஷனர் கமலக்கண்ணன், சேலம் தெற்கு குற்றப் பிரிவுக்கும்; சென்னை ரயில்வே டி.எஸ்.பி., பாபு, வேப்பேரிக்கும் உதவி கமிஷனராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
சென்னை, சி.பி.சி.ஐ.டி., பிரிவு டி.எஸ்.பி., சரஸ்வதி, சென்னை உயர் நீதிமன்ற உதவி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். இவர்கள் உட்பட மொத்தம், 55 பேர் இடம் மாற்றப்பட்டுள்ளனர். இவர்களில், 33 பேர் சென்னையில் பணிபுரிபவர்கள்.சட்டசபை தேர்தலையொட்டி, பணியிட மாறுதலுக்கான உத்தரவை, டி.ஜி.பி., திரிபாதி, இன்று பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...