Sunday, March 28, 2021

தீராத துன்பம் போக்கும் லட்சுமி நரசிம்மர் கோவில்.

 மன்னார்குடியில் உள்ள லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் தீராத துன்பங்களும் தீரும் என்பதும் நீண்ட நாள் சொத்து பிரச்சினைகள் அகலும் என்பதும் இங்கு வந்து வழிபட்டு செல்பவர்களின் வாக்குமூலமாக உள்ளது.

தீராத துன்பம் போக்கும் லட்சுமி நரசிம்மர் கோவில்
நரசிம்மர்


















நாளை என்பது இல்லை நரசிம்மனிடத்தில்’ என்பது கூற்று. அதாவது எப்படி தன்னுடைய பக்தன் பிரகலாதன் உயிருக்கு ஆபத்து என்றவுடன் நொடிப்பொழுதும் தாமதிக்காமல் தூணை பிளந்து அவதாரம் எடுத்து பிரகலாதனை காப்பாற்றினாரோ அதே போல நரசிம்மனை வேண்டுபவர்களுக்கு உடனடியாக துன்பத்தை போக்குபவர் என்பதால் இந்த கூற்று உருவாயிற்று.

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் ராஜகோபுரத்திற்கு முன்பு தென்புறமாக அகோபில மடத்திற்குச் சொந்தமான ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் தீராத நாட்பட்ட துன்பங்களும் தீரும் என்பதும் நீண்ட நாள் சொத்து பிரச்சினைகள் அகலும் என்பதும் இங்கு வந்து வழிபட்டு செல்பவர்களின் வாக்குமூலமாக உள்ளது.

இந்த லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரதோஷம் மற்றும் சுவாதி நட்சத்திரத்தன்று சிறப்பு திருமஞ்சனம் மற்றும் வழிபாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு பக்தர்கள் லட்சுமி நரசிம்மரின் பூரண அருளை பெறலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...