Tuesday, March 30, 2021

புதிய தெம்போடு செயல்படலாம்..

 *வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும்போது மனம் தளராமல் இருக்க சில சொற்களை நாம் நினைவில் நிறுத்தி, சந்தர்ப்பத்திற்கு தகுந்தபடி அவற்றை உபயோகித்துக் கொள்ளலாம்.*

*மனம் சக்தி பெறும். புதிய தெம்போடு செயல்படலாம்.*
*1. போனது போச்சு, இனி ஆக வேண்டியதை யோசிப்போம்.*
*2. நல்ல வேளை. இதோடு போச்சு.*
*3. உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்டா போச்சு.*
*4. பஸ்ஸு போயிடுச்சா, அதனால என்ன? அடுத்த பஸ் இருக்குல்ல*
*5. பணம் தான போச்சு. கை கால் இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல.*
*6. சொல்றவங்க ஆயிரம் சொல்வாங்க. எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?*
*7. இதெல்லாம் சப்ப மேட்டரு. இதுக்குப் போயா கவலைப்படறது.*
*8. கஷ்டம் தான் … ஆனா முடியும்.*
*9. நஷ்டம் தான் … ஆனா மீண்டு வந்திடலாம்.*
*10. விழுந்தா என்ன? எழுந்திருக்க மாட்டனா?*
*11. இவன் இல்லேன்னா வேற ஆளே இல்லியா?*
*12. இந்த வழி இல்லேன்னா வேற வழி இல்லியா?*
*13. இப்பவும் முடியலியா? சரி. இன்னொரு வாட்டி ட்ரை பண்ணு.*
*14. இது கஷ்டமே இல்லையே. கொஞ்சம் யோசிச்சா வழி தெரியுமே.*
*15. முடியுமா…ன்னு நினைக்காதே. முடியணும்…னு நினை.*
*16. கிடைக்கலியா, விடு. வெயிட் பண்ணு. இத விட நல்லதாகவே கிடைக்கும்.*
*17. திருப்பித் திருப்பி அதயே பேசாதே. அது முடிஞ்சு போன கதை.*
*18. ஆகா, இவனும் அயோக்யன் தானா? சரி, சரி. இனிமே ஜாக்ரதையா இருக்கணும்.*
*19. கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது பாட்டுக்கு அது. வேலைபாட்டுக்கு வேலை.*
*20. எப்பவுமே ஜெயிக்க முடியுமா? அப்பப்ப தோத்தா அது என்ன பெரிய தப்பா?*
*21. அடடே, தூங்கிட்டேனே, பரவாயில்ல. இனிமே முழிச்சிக்கலாம்.*
*வீழ்வது கேவலமல்ல நண்பர்களே.....,வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம்.*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...