Friday, March 26, 2021

கேள்விக்குறியாகிறது திருவண்ணாமலை தேர்தல்!

 தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் அலுவலகம் மற்றும் வீடுகளில், 'ரெய்டு' நடத்தி, கணக்கில் காட்டப்படாத வருமானம் குறித்த ஆவணங்களுடன், எட்டு வாகனங்கள், நேற்று இரவு, திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு கிளம்பின.

கேள்விக்குறியாகிறது திருவண்ணாமலை தேர்தல்!

அதில் பணப் பரிமாற்றம் குறித்த தகவல்கள் அடங்கி உள்ளதால், திருவண்ணாமலை சட்டசபை தொகுதி தேர்தல், கேள்விக்குறியாகி உள்ளது.இரண்டு நாட்களாக, வருமான வரித் துறை, திருவண்ணாமலை மற்றும் கரூரில் நடத்திய சோதனையில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, கரூர் பைனான்சியர் அலுவலகம் மற்றும் சென்னையில், ஒரு நகைக் கடைக்காரருக்குச் சொந்தமான இடங்களில், ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப் பட்டன.

ஆவணங்கள் அனைத்தும், தேர்தல் கமிஷனிடம், இன்று ஒப்படைக்கப்பட உள்ளன. அவற்றைச் சரிபார்த்த பின், புதுடில்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...