Friday, November 26, 2021

மௌனம்ஒருமகத்தான_சக்தி...

******************************       


ஒரு பேச்சு சொல்லாத எத்தனையோ செய்திகளை, ஒரு மௌனம் சொல்லி விடும்.


மௌனம் ஒரு மகத்தான சக்தி! மௌனத்தின் சக்தியை உணர்ந்தவர்கள், அதைத் தங்கள் வாழ்வில் உபயோகித்து வெற்றி கண்டு இருக்கிறார்கள்.


எப்போது பேசாமல் மௌனமாக இருக்க வேண்டும் என்று தெரிந்து வைத்திருப்பது.


ஆனால் அதை விட,  ,''எதை, எப்போது பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்றெல்லாம் தெரிந்து வைத்து இருப்பது மிக அவசியம்.


புத்தர், அரசனுக்கு மூத்த மகனாகப் பிறந்த அரச குமாரன். மிகவும் அழகாக இருந்தார். உடற்கட்டுடன் இருந்தார்.கண்கள் ஒளியுடன் பிரகாசித்தன.


ஆனாலும் அரசன் மிகவும் கலங்கிப் போனான். காரணம் வாய் மௌனத்தில் ஆழ்ந்திருந்தது.


நாட்டில் உள்ள அத்தனை மருத்துவர்களும் முயன்று பார்த்துத் தோற்றுப் போனார்கள்.


என் மகனின் வாய்ப் பேச்சைக் கேட்கும் பாக்கியம் எனக்கு இல்லையா? என்று அரசன் புலம்பித் தீர்த்தான்.


இறுதியில், இளவரசனைப் பேச வைப்பவர்களுக்குப் பரிசு என அறிவித்தான். நாட்கள் ஓடின,


யாராலும் அரசகுமாரனைப் பேச வைக்க முடியவில்லை. அரசன் ஏங்கித் தவித்தபடியே அவனது காலத்தைக் கடத்தினான்.


அரசகுமாரனுக்குத் தனிமை மிகவும் பிடித்த விஷயம். அதுவும் காடுகளில் தன்னந்தனியே நடப்பது மிகவும் பிடிக்கும்.


வழக்கம் போல் அவன் காட்டில் தனியே அமர்ந்து வானத்தையும், பசுமையான மரங்களையும், அருவியின் துள்ளல் நடையையும் கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தான்.


அப்பொழுது வேட்டைக்காரர்கள் சிலர் மிருகங்களைத் தேடி ஒன்றும் கிடைக்காததால், வருத்தத்திலும்,, சோர்விலும் அமர்ந்திருந்தனர்.


அப்பொழுது ஒரு ஜோடிக் குருவிகள் ‘கீச்…கீச்…’ எனச் சப்தமெழுப்பியபடி மகிழ்ச்சியுடன் படபடவென அங்கும் இங்குமாகப் பறந்து விளையாடிக் கொண்டு இருந்தன.


பார்த்தான் ஒரு வேடன், எய்தான் அம்பை! இரண்டு குருவிகளும் அம்படிபட்டுத் தரையில் விழுந்து துடித்தன.


இதைக் கண்ட புத்தர் ஓடோடிப் போய் அவற்றைத் தமது கைகளில் தூக்கினார், துடித்தன பறவைகள்,


இளகியது அரசகுமாரனின் மனம். கண்களில் கண்ணீர்த் துளிகள்.அந்தப் பறவைகளைப் பார்த்து, ‘நீங்கள் ஏன் பேசினீர்கள்?’ என்று கேட்டார்.


அரசகுமாரன் பேசியதைக் கண்ட வேடர்களுக்கு ஒரே ஆனந்தம். ஓடிச் சென்று இந்தச் செய்தியை மன்னனிடம் கூறினர். மகிழ்ச்சி அடைந்த மன்னன், அரசகுமாரன் வருகைக்காகக் காத்திருந்தான்.


வழக்கம் போல பேசியதற்கான அறிகுறியே சிறிதும் இல்லாமல், அரண்மனையினுள் நடந்து, தமது அறைக்கு விரைந்தார் அரசகுமாரன்.


மன்னனுக்கு வந்தது கோபம்! வேடர்கள் பொய் சொல்லி உள்ளார்கள் என்று கருதி, பொய் சொன்ன வேடர்களின் தலையைச் சீவி விடும்படிக் கட்டளை இட்டார்.


அவர்களோ மன்னனிடம் கதறி அழுதார்கள், அங்கு வந்த அரசகுமாரனைப் பார்த்து,'நீங்கள் பேசியது உண்மை! இது நமக்கு மட்டும் தான் தெரியும். நீங்கள் வாயைத் திறந்து ஒப்புக் கொண்டால் தான், எங்கள் தலை தப்பும், எங்கள் பிள்ளைகள் அனாதை ஆவது தடுக்கப்படும் என்று கூறி அழுதார்கள்.


அவர்கள், மீது கருணை கொண்ட அரசகுமாரன் ‘நீங்கள் ஏன் பேசினீர்கள்?’ என்று கேட்டு விட்டு உள்ளே சென்றார்.


கதை சொல்லும் நீதியைப் பற்றி எதுவும் கூறத் தேவையில்லை, அது உணர்த்தும் நீதி உங்களுக்கே புரியும்.


பல நேரங்களில் மௌனம் நிறைய செய்திகளை எளிதாகச் சொல்லி விடுகிறது.. நம்மால் வாழ்க்கை முழுவதும் பேசாமல் இருக்க இயலாது.


ஆனால் தினமும், சிறிது நேரமாவது பேசாமல், மௌனமாக இருக்க முயற்சி செய்யலாம். அப்போது நமது மனம் மலரும் அதிசயத்தை உணரலாம்.


மௌன மொழி மூலம் நமது ஆன்ம பலம் பெருகும்.


குடும்பத்திலும் பணி புரியும் இடத்திலும் மகிழ்ச்சி பொங்கும்.


பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!


தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!     


முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!  


#வாழ்த்துக்கள்.🙏🙏


#வாழ்க_வளமுடன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...