Saturday, November 27, 2021

நான் எனது பணியை தொடங்கி விட்டேன்.

 இந்த கார்த்திகை மாதத்தில் புதிதாக ஐயப்பன் மாலை போட்டுக்கொண்டு சபரிமலை செல்பவர்களும் வழக்கமாக சென்று வந்து கொண்டு இருப்பவர்களும் தயவுசெய்து இந்த பதிவை படியுங்கள்.

எப்படி வாவர் என்கிற ஒரு நபரைக் கொண்டு வந்து சபரிமலை வரலாற்றில் உள்ளே நுழைத்தார்கள் என்று படியுங்கள். ஹலாலை போல இதுவும் ஒரு ஏமாற்று வித்தைதான்.
இங்கு சபரிமலையில் பெண்கள் நுழைய வேண்டும் என்றும் போராடும் போராளிகள் அதே பெண்களை வாவர் சமாதியில் நுழைய விடுவார்களா என்று கேளுங்கள்?? உடனே உங்களை சங்கி என்று கதற ஆரம்பித்து விடுவார்கள்.
தன் வாழ்க்கையில் அதிக முறை சபரிமலைக்கு சென்று வந்த குருசாமி மறைந்த முன்னாள் நடிகர் எம் என் நம்பியார் அவர்கள் இந்த வாவர் மசூதியை பற்றி கூறியதையும் படியுங்கள்.
ஐயப்பன் மலைக்கு போகும் சாமிகளை எப்படி ஏமாற்றி காசு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தீர்க்கமாக படியுங்கள்.தயவுசெய்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் இந்த வாவர் சமாதிக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் விரதம் இருந்து அந்த தீட்சையோடு ஐயப்பனை தரிசிக்க செல்லும் நாம் எதற்காக ஒரு சமாதிக்கு செல்ல வேண்டும்?? எதற்காக தீட்டு பட வேண்டும்??
நான் எனது பணியை தொடங்கி விட்டேன்.
நான் இங்கும் எங்கும் தெருவெங்கும் சந்திக்கும் சபரிமலை பக்தர்களை முதலில் கேட்கும் கேள்வி, வாவர் சமாதிக்கு போகிறீர்களா என்று??
அவர் போவோம் என்று சொன்னால் உடனடியாக இந்த பதிவை அவர்களுக்கு காட்டி அவர்களை வாவர் சமாதிக்கு செல்ல விடாமல் தடுப்பது தான் எனது முதல் கடமை.
நீங்களும் உங்களால் ஆன பணியைத் தொடருங்கள் 🙏🙏🙏🙏
ஜெய் ஹிந்த்
பாரத் மாதா கி ஜே
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...