Wednesday, November 24, 2021

வேடிக்கையான அர்த்தமுள்ள கேள்வி.

 இட்லிக்கும் ஒரு கரண்டி மாவு தான். தோசைக்கும் ஒரு கரண்டி மாவு தான்.

இட்டிலியின் விலையை விட தோசையின் விலை கூடுதலாக இருக்க காரணம் என்ன?
வேடிக்கையான அர்த்தமுள்ள கேள்வி,
காரணம் ஒன்றே,
தோசைக்கு கூடுதல் கவனம் தேவை, ஆதலால் கூடுதல் விலை.
விளக்கமாக சொல்லவேன்றும் என்றால்,
இட்லி - மாவை ஊற்றி மூடிவைத்தால் போதும், சற்றுநேரத்தில் விடை கிடைத்துவிடும்,
ஒரு ஆள் அதன் அருகில் நின்று பார்க்கவேண்டும் என்று ஏதும் கிடையாது, ஒரே நேரத்தில் ஒரே பொருள் செலவில் ஐம்பதுக்கு மேல் அவித்துவிடலாம்.
தோசை - அதே மாவுதான், ஆனால் கூடுதலாக எண்ணெய் தேவை, ஒரு ஆள் கூடவே நிற்கணும், ஒரே நேரத்தில் ஒரே பொருள் செலவில் அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு தான் சுட முடியும்.
வேடிக்கையாக சொல்லவேண்டும் என்றால்,
இட்லி - பள்ளியில் ஆசிரியர் நடத்தும் போதே பாடங்களை புரிந்துகொள்ளும் மாணவன்.
தோசை - அண்ணனுக்கு சிறப்பு வகுப்பு தேவை.
சற்று உற்று கவனியுங்கள்,
தோற்றம் குணாதசியம் கூட ஒற்றுப்போகும்.
வாழ்க்கையின் பல நிலைகளில் நாமும் இப்படித்தான் இருக்கிறோம் ❤️❤️
May be an image of food and text that says "தோசைக்கும் என்ன வேறுயாடு வேற பாடு"

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...