Monday, January 31, 2022

புதிய கல்வி கொள்கைக்கு திருக்குறளை மேற்கோள் காட்டிய ஜனாதிபதி...

  ‛கற்க கசடற' என்னும் வள்ளுவரின் குறளுக்கு இணங்க மத்திய அரசின் கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளதாக திருக்குறளை மேற்கோள் காட்டி ஜனாதிபதி உரையாற்றினார்.

பார்லி., கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றியதாவது:
* ‛பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; பெண் குழந்தைகளை படிக்க வைப்போம்' திட்டம் பெண்கள் முன்னேற்ற வழிவகை செய்துள்ளது.
* ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது.
* நாட்டின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை உருவாக்கியுள்ளது.
* ‛கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக' என்னும் வள்ளுவரின் குறளுக்கு இணங்க அரசின் கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
* நாடு முழுவதும் நதிகளை இணைக்கும் திட்டங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
* நான்கரை கோடி மாணவர்களுக்கு மத்திய அரசு உதவித்தொகை வழங்கியுள்ளது.
* உதவித்தொகை வழங்குவதால் இஸ்லாமிய மாணவர்களின் பள்ளி இடைநிற்றல் தடுக்கப்பட்டுள்ளது.
* இஸ்லாமிய பெண்கள் பெரும் சவால்களை சந்தித்து வந்த முத்தலாக் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
* தற்போது 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவதில் இந்தியா முன்னணியில் இருக்கிறது.
* ‛ஸ்டார்ட்அப்' திட்டங்கள் மூலம் 6 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
* ஜி.எஸ்.டி வருமானம் கடந்த சில மாதங்களில் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.
* நாட்டின் முந்தைய சாதனைகள் முறியடிக்கப்பட்டு புதிய சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன.
- இவ்வாறு அவர் உரையாற்றினார்.
May be an image of 1 person and standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...