Tuesday, January 25, 2022

இது தான் தி.மு.க.,வின் கொள்கையா?

 தமிழகத்தில், ஹிந்துக்களை கட்டாய மத மாற்றம் செய்து வருவது அதிகரித்து வருகிறது.அப்பாவி ஏழை ஹிந்துக்களுக்கு பணத்தாசை காட்டியும், பள்ளி மாணவ - மாணவியரை மிரட்டியும் மதமாற்றம் செய்கின்றனர்.பல ஆண்டுகளாகவே இது நடைபெற்று வந்தாலும், தி.மு.க., ஆட்சிக்கு வரும்போது எல்லாம், இச்சம்பவம் உச்சம் அடைகிறது.


அரியலுார், வடுகர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த, 17 வயது மாணவி, தஞ்சாவூர் மைக்கேல்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதால், அந்த மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார் என புகார் கிளம்பியுள்ளது. இந்த கொடுமையை, எந்த செய்தி ஊடகமும் கண்டுகொள்ளவில்லை; தி.மு.க.,வும், அதன் கூட்டணிக் கட்சிகளும், இச்சம்பவத்தைப் பற்றி வாயே திறக்கவில்லை. ஏன், முதல்வர் ஸ்டாலின் கூட இச்சம்பவம் பற்றி எதுவும் கூறாமல் இருக்கிறார்.


latest tamil news


இதே சம்பவம், ஹிந்து பள்ளியில் நடந்திருந்தால் இந்நேரம் தி.மு.க. தலைவர்கள், திருமாவளவன், வைகோ, அழகிரி போன்றோர் பொங்கி எழுந்திருப்பர். முதல்வர் ஸ்டாலினும், பள்ளி நிர்வாகம் மீது உடனே நடவடிக்கை எடுத்திருப்பார். மாணவியின் பெற்றோருக்கு இழப்பீட்டு தொகையும் உடனடியாக கிடைத்திருக்கும்.ஆனால் சம்பவம் நடைபெற்றது, கிறிஸ்துவ பள்ளியில் என்பதால் எந்த சத்தமும் வரவில்லை. இதிலிருந்தே, இக்கட்சித் தலைவர்களின் மதச்சார்பற்ற கொள்கை என்ன என்பது, தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

'மத மாற்றம் செய்வது எங்களுடைய வேலை. பிடிக்கவில்லை என்றால் வேறு பள்ளியில் போய் படிக்க வேண்டியது தானே' என்று, பேராயர் எஸ்றா சற்குணம் வெளிப்படையாகவே கூறுகிறார்.'இது எல்லாருக்குமான ஆட்சி' என்று, முதல்வர் ஸ்டாலின் கூறுவது உண்மையானால், பாரபட்சம் இல்லாமல் அந்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். தமிழகத்திலும் கட்டாய மத மாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும். முதல்வர் ஸ்டாலின் செய்வாரா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...