Sunday, January 23, 2022

அவருடைய சமூக நீதி கொள்கையை மக்களிடையே, இன்றைய இளைஞர்கள் அழுத்தமாக பரப்ப செய்ய வேண்டும்..!

 உலகிலேயே 40 வருஷம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் என்றால் அது *திரு.வ.உ.சிதம்பரம்* அவர்களுக்கு தான்..!

அதிலும் கோவை சிறைதான்.
*திரு.வ.உ.சி* .க்கு பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது..!
அந்த ஜெயிலர் பெயர் மிஞ்ஜேல்... ரொம்ப மோசமானவன்.. கொடூரக்காரன்..!
ஜெயிலுக்குள் கொண்டு செல்லும்முன், அவரது கை, கால்களை கட்டி தெருவெல்லாம் இழுத்து சென்றுள்ளனர்..!
*திரு.வ.உ.சி* யை சிறைக்குள் தனிச்சிறையில் அடைந்துள்ளனர்.. ஆனால் அதில் காற்று வசதி இல்லை.. சுத்தமும், சுகாதாரமும் துளியும் இல்லை.. கால்களில் விலங்கு பூட்டப்பட்ட நிலையில்தான் *திரு.வ.உ.சி* யை அடைத்துவைத்தனர்..!
ஜெயிலுக்குள் சென்றதுமே அவரது தலையை மொட்டை அடித்திருக்கிறார்கள்.. ஒரே ஒரு ஆடை தந்திருக்கிறார்கள்.. அதுகூட சாக்குப் பையால் தைத்தது.
ஒருநாளைக்கு ஆயிரம் பேருக்கு சாப்பாடு போட்ட வள்ளளுக்கு ஜெயிலில் கூழ் தான் தந்தார்கள்.. அதுவும் புளித்து போயிருந்தது.. சில சமயம் அந்த கூழில் புழுக்கள் மிதக்குமாம்..!
உடல்நிலை மோசமானதால், ஒருநாள் மட்டும் அரசி சோறு கேட்டாராம் *திரு.வ.உ.சி* .. அதற்காக மூன்று நாளைக்கு, அந்த கூழை கூட தராமல் பட்டினி போட்டுள்ளான், அந்த ஜெயிலர் மிஞ்ஜேல்.
சணல் கிழிக்கும் மிஷினை கையாலேயே சுற்ற வேண்டும்.. இதுதான் *திரு.வ.உ.சி* க்கு தரப்பட்ட முதல் வேலை... அப்படி செய்ததால், *திரு.வ.உ.சி.யின்* கைகளில் உள்ள தோல் கிழிந்து ரத்தம் கொட்டி உள்ளது.. அதை பார்த்து ஒரு கைதி, மனசு கேட்காமல் ஓடிவந்து மிஷின் சுற்றுவதை தடுத்துள்ளார்..
அதனால் அந்த கைதியை அடித்து நொறுக்கினான் மிஞ்ஜேல்... பிறகு, கையால் செய்யும் வேலைகளை தராமல், செக்கிழுக்கும் வேலையை தந்துள்ளனர்.. அதாவது மாட்டுக்கு பதில் *திரு.வ.உ‌.சி* யை பூட்டினர்.. அதுவும் உச்சிவெயிலில்.. இதில் மயங்கி கீழே விழுந்துவிட்டால், சவுக்காலேயே அடிப்பார்கள்..!
*திரு.வ.உ.சி* யின் மதிப்பு தெரிந்த கைதி ஒருவர், தன்னுடைய தலைக்கு மேல் 2 கைகளையும் கூப்பி "வணக்கம் ஐயா" என்றார்.. அவ்வளவுதான், ஜெயிலுக்குள் கலவரம் வெடித்து, ஒரு கைதி துப்பாக்கி சூட்டில் இறக்குமளவுக்கு பிரச்சனை செய்துவிட்டான் அந்த ஜெயிலர்.
*திரு.வ.உ.சி* விடுதலை செய்யப்பட்டும் தன்னுடைய வக்கீல் பணியை தொடர முடியாத அளவுக்கு அவரது லைசென்ஸ் பிடுங்கிவிட்டனர்.. ஒரு அரிசி கடையில் வேலை பார்த்துள்ளார்.. நாள் முழுக்க வேலை பார்த்துவிட்டு, 4 ஆழாக்கு அரிசியோடு வீட்டுக்கு போவாராம்.. இந்த விஷயம் தெரிந்ததும் அந்த மளிகைக் கடைக்கும் சீல் வைத்து விட்டனர் பிரிட்டிஷ் அதிகாரிகள்..!
அரை வயிற்று கஞ்சிக்குகூட கஷ்டப்படும் நிலை வந்ததால்தான், தலையில் மண்ணெண்ணெய் சுமந்து விற்றுள்ளார்...!
இதைவிட கொடுமை என்னவென்றால், தன்னுடைய வக்கீல் உரிமத்தை மீட்டெடுக்க கோர்ட்டில் வாதாடி உதவ வேண்டும் என்று *திரு.வ.உ.சி* கேட்டதற்கு, அன்று மூத்த வக்கீலான ராஜகோபாலாச்சாரி என்ற தனது பெயரை தானே மூதறிஞர் ராஜாஜி என மாற்றி கொண்ட அவர் மறுத்துவிட்டாராம்.
சில சமயம் காந்தியை விட்டுத்தராமலும், சில சமயம் காந்தியின் கொள்கைகளை ஏற்க முடியாமலும் எதிர்த்துள்ளார் *திரு.வ.உ.சி* அவர்கள்..!
*திரு.வ.உ.சி* அவர்களின் குடும்பம் மிக வறுமையில் உள்ளதை கேள்விப்பட்டு, தென் ஆப்பிரிக்காவில் உள்ள நம் தமிழர்கள், அன்று *5000* ரூபாய் நிதி திரட்டி காந்தியிடம் தந்து.. "எப்படியாவது *திரு.வ.உ.சி* யிடம் இந்த பணத்தை சேர்த்துவிடுங்கள்" என்றும் சொல்லி உள்ளனர்.. ஆனால் பணம் அவர் கைக்கு போகவில்லை.அதனால் காந்திக்கு கடிதம் மேல் கடிதம் போட்டு காந்திக்கு ஞாபகப்படுத்தியும் கொண்டே இருந்தனர்..!
ஆனால் அந்த பணத்தை திருவாளர்.காந்தி, *திரு.வ.உ.சி* க்கு தரவே இல்லையாம்.. "காந்தி கணக்கு" என்று இன்று நாம் சொல்கிறோமே.. அது இதுதான்! பின்னர்(திரு.திலகர், இந்த விஷயத்தில் தலையிட்டு பஞ்சாயத்து செய்து, அந்த பணத்தை *திரு.வ.உ.சி* க்கு பெற்று தந்தது தனிப்பெரும் கதை)
*திரு.வ.உ.சி* க்கு இணையான ஒரு தியாகியோ, போர்க்குணமுள்ள ஒரு தலைவரோ இந்திய அரசியலிலேயே கிடையவே கிடையாது. ஆனாலும் சொந்த கட்சியில் அவருக்கு உரிய மரியாதையை, அவர் இறந்தும்கூட இன்றும் தராதது வருந்தத்தக்கது.. அவரது சில வழக்குகளை எதிர் கொள்வதற்கும் கூட அவருக்கு காங்கிரஸ் உதவவில்லை என்பதும் கசப்பான உண்மை..!
உண்மையை சொல்வதானால், பிரிட்டிஷ் அரசின் ஒடுக்குமுறைக்கு ஆளாகி அவர் சீரழிந்ததைவிட, சொந்த கட்சியின் துரோகத்தால் தான் அதிகம் துவண்டுபோனார் *திரு.வ.உ.சி* ..!
பல்லாண்டு காலமாய் அடிமைப்படுத்தியிருந்த வெள்ளையர்களுக்கு எதிராகக் கப்பல் விட்டு அவர்களை ஆட்டம் காட்டிய பெருமை இந்தியாவிலேயே நம் தமிழன் *திரு.வ.உ.சி* க்கு மட்டும் தான் உண்டு..!
இந்த தேசத்தின் தலைவராக உயர்ந்திருக்க வேண்டியவர் *திரு.வ.உ.சி* ..
ஆனால், *திரு.வ.உ.சி* யின் வரலாற்றை மறைத்துவிட்டு வாஞ்சிநாதனை பிரதானப்படுத்த காரணம் என்ன? அவர் பார்பனர்.மேலும் எதற்காக அவர் ஆஷ்துரையை சுட்டார் என்பது சிலர் அறிந்திருப்பார்கள் .
1806-ல் வேலூர் புரட்சியை அலட்சியப்படுத்திவிட்டு, 1857-ல் வந்த சிப்பாய் கலகத்தை பெரிதுபடுத்த காரணம் என்ன?
ஒன்று மட்டும் விளங்குகிறது.. எப்பேர்ப்பட்ட தியாகத்தையே செய்திருந்தாலும், அதை தீர்மானிப்பது இந்திய அரசியலின் "சாத தான்..!
இனியாகிலும் " *திரு.வ.உ.சி* கப்பல் ஓட்டினார், செக்கிழுத்தார்" என்பதை மட்டுமே சொல்லி சுருக்கிவிடாமல், அவருடைய சமூக நீதி கொள்கையை மக்களிடையே, இன்றைய இளைஞர்கள் அழுத்தமாக பரப்ப செய்ய வேண்டும்..!
தமிழர்களை மட்டுப்படுத்தவும், ஏளனப்படுத்தவும், யாருக்குமே தகுதி கிடையாது என்பதையும் செவிப்பறையில் ஓங்கி அறைந்து சொல்ல *வேண்டும்* ..!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...