Friday, January 2, 2015

கிரெடிட் கார்டு – நன்மையும் தீமையும்

கிரெடிட் கார்டும். இதைப் பயன் படுத்தும் நபரைப் பொறுத்தே, அதன் நன்மையும் தீமையும் அமையும்.
 
சரியாகப் பயன்படுத்தினால், அது நமக்குப் பொருளாதார நண்பன்! தவறாகப் பயன்படுத்தினால்… அதைப்போல மோசமான ‘ஸ்லோ பாய்சன்’ எதுவும் இல்லை. கிரெடிட் கார்டின் சரியான பயன்பாட்டை அறிந்து வைத்துக் கொள்வது, அதை பாய்சனாக்கா    மல், பாயசமாக் கும் கலையை உங்கள் வசமாக்கும்!
 கிரெடிட் கார்டு எதற்கு?
கிரெடிட் கார்டு என்பது, வங்கிகள் மற்றும் கிரெடிட் யூனியன்கள் வழங்கும் கடன் அட்டை. கையில் பணம் இல்லாதபோது நேரும் எதிர் பாராத செலவுகளை சமாளிக்க இது கைகொடுக்கும். பிறகு,அத்தொகையை செலுத்திவிடலாம் என்பதுதான் நடைமுறை.
தற்போது இருக்கும் சூழ்நிலையில்… எப்போது பணம் தேவைப்படும், எவ்வளவு தேவைப்படும் என்பதை யெல்லாம் யாராலும் கணிக்க முடியாமல்தான் இருக்கிறது. ஒரு கடைக்குச் செல்கிறோம். ஆஃபர் மூலம் விற்பனை நடக்கிறது. இன்றே கடைசி நாள்… கையில் பணமி ல்லை. அந்தச் சமயத்தில் கிரெடிட் கார்டு கை கொடுக்கும். நண்பர், உறவினர் திருமணம்; பிறந்தநாள் போன்ற விழாக்கள்; அவசரமாக ஊருக்குச் செல்ல டிக்கெட் புக் செய்ய வேண்டும்; எதிர்பாராத ஆஸ் பத்திரி செலவுகள்… இதுபோன்ற சூழ்நிலைகளில் ‘யாமிருக்க பயமேன்’ என கிரெடிட் கார்டு கை கொடுக்கும்.
ஒருவேளை இந்தச் செலவுகளுக்கு எல்லாம்  பணம் கையில் இருந்தால்கூட, கிரெடிட் கார்டு மூலம் வாங் குவது… சில வகைகளில் நன்மை தருவதாகவே இருக்கும். கிரெடிட் கார்டு மூலம் நாம் வாங்கும் பொரு ட்களுக்கு 45 நாள் முதல் 50 நாள் வரைக்கும் எந்தவிதமான வட்டியும் செலுத்தத் தேவையில்லை. உதார ணத்துக்கு… ஒவ்வொரு மாதமும் 30-ம் தேதி ‘பில்லிங் தேதி’ என்றால், ஏப்ரல் மாதம் 1-ம் தேதி வாங்கும் பொருளுக்கு மே மாதம் 15 தேதி பணம் செலுத்தினால் போதுமானது. அதற்கான பணத்தை முன்கூட்டியே உங்களுடைய வங்கி சேமிப்புக் கணக்கில் போட்டு வைத் திருந்து, சரியான தேதியில் செலுத்திவிடலாம். இந்த இடைப்பட்ட நாளில் நமது வங்கிக் கணக்கில் இருந்த பணத்துக்கு வட்டி (ஆண்டுக்கு 4 முதல் 6 சதவிகிதம் வரை) கிடைக்கும்.
இது மட்டுமல்ல… நமது இன்ஷூரன்ஸ் பிரீமியம், மொபைல் பில், மின் கட்டணம், வங்கிக் கடன்கள் உள்ளிட்டவற்றுடன் கிரெடிட் கார்டை இணை த்து விட்டால், எந்தவிதமான பிரச்னையும் இல்லாமல் நமது பொறுப்புகள் பூர்த்தி செய்யப்பட்டுக் கொண்டிருக் கும். சமயங்களில், கிரெடிட் கார்டுகளை பிரபலப்படுத்துவ தற்காக, கிரெடிட் கார்டு பயன்படுத்தி நாம் செய்யும் செலவுகளில் குறிப்பிட்ட சதவிகிதப் பணத்தை சம்பந் தப்பட்ட வங்கிகள் நமக்கே திருப்பிக் கொடுப்பார்கள்.
கிரெடிட் கார்டு பயன்படுத்தி பொருள் வாங்கும்போது 100 ரூபாய்க்கு ஒரு பாயின்ட் (ஒரு பாயின்ட் = ஒரு ரூபாய்) என்று நமக்கு பாயின்ட்டுகளை வழங்குவார்கள். இது வங்கிகளுக் கிடையே மாறுபடும். இவற்றை மீண்டும் பயன்படுத்தி நாம் பொருட்களை வாங்கலாம். அனைத்துச் செலவுகளை யும் கிரெடிட் கார்டு மூலம் செய்யும்போது, ஆண்டுக்கு 1,000 முதல் 2,000 பாயின்ட் கள் வரை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதாவது 1,000 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை கிடைக்கும். இது எல்லாமே… கிரெடிட் கார்டை கவனமாகவும், எல்லை மீறாமலும் பயன் படுத்தும் வரைதான். சிறிது பிசகினாலும் புதைகுழியில் சிக்கியது போல ஆகி விடும் என்பதை எப்போதும் மறந்துவிடாதீர்கள்.
கிரெடிட் கார்டு எப்போது எமனாகும்..?
கிரெடிட் கார்டு வாங்குகிறோம், பயன்படுத்துகிறோம், வங்கி குறிப்பிட்ட நாட்களுக்குள் பணத்தைச் செலுத்து கிறோம்… இப்படியே போய்க்கொண்டிருந்தால் பிரச்னை இல்லை. ஆனால், பணம் கட்டுவதற்கான குறிப்பிட்ட தேதியைக் கடந்துவிட்டால், நம் தலை கிரெடிட் கார்டு நிறுவனங்களின் பிடியில். முதலில் வங்கியில் இருந்து போன் வரும். குறைந்தபட்ச தொகையைக் கட்டச் சொல்வார்கள். அதாவது, பில் தொகையில் 5 சதவிகித்தை கட்டச் சொல்வார்கள். ‘50,000 பில் தொகை என்றால், 2,500 ரூபாய் கட்டினால் போதும், கார்டை தொடர்ந்து பயன்படுத்த லாம்’ என்று வங்கி தரப்பில் சொல்வார்கள். நீங்களும் ‘இது ஓ.கே-தானே..?!’ என்று மகிழ்ச்சியோடு 2,500 கட்டிவிடுகிறீர்கள். அடுத்து என்ன நடக்கும்?
மீதமுள்ள 47,500 ரூபாய்க்கு மாதத்துக்கு 3 சதவிகித வட்டி (வருடத்துக்கு 36%) விதிக்கப்படும். அடுத்த மாதத்தில் நமது அசல் 48,925 ஆக மாறி இருக்கும். மீண்டும், மீண்டும் குறைந்தபட்ச கட்டணம் மட்டுமே செலுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொண்டால், அது சிந்துபாத் கதைதான். கடன் எப்போது முடியும் என்று வங்கிக்கும் தெரியாது, உங்களுக்கும் தெரியாது. வட்டி மட்டுமல்லாமல்… லேட் பேமன்ட் அபராதமும் சேர்ந்து கொள்ளும்.
உங்கள் கார்டு லிமிட் 50,000 ரூபாய் என்றால், அதற்கு மேல் செலவு செய்ய முடியாது என்று நினைக்கலாம். ஆனால், 50,000 ரூபாய்க்கு மேலேயும் செலவு செய்யலாம். இதற்கு ஒவர் லிமிட் சார்ஜ் என்று மாதத்துக்கு 3 சதவிகிதம் வட்டி விதிக்கப்படும்.
இந்தத் தகவல்கள் எல்லாம், கிரெடிட் கார்டு லிமிட் அறியாமல் பயன்படுத்தும் செலவாளிகளுக்கு செய்யும் எச்சரிக்கையே. தேவையைக் கருதி திட்டமிட்டு கிரெடிட் கார்டு உபயோகிக்கும் புத்திசாலிகளுக்கு அல்ல.
நீங்கள் எப்படி?!
கிரெடிட் கார்டு  சில அறிவுறுத்தல்கள்!
கிரெடிட் கார்டை பயன்படுத்துவது தொடர்பான முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார், நிதி ஆலோசகர் பத்மநாபன்.
 பெரும்பாலான கிரெடிட் கார்டுகளுக்கு எந்தவிதமான வருடாந்திர கட்டணங்களும் செலுத் தத் தேவை இருக்காது. சில கார்டுகளுக்கு வருடாந்திர கட்டணம் செலுத்த வேண்டி இருக் கும். இன்னும் சில கார்டுகளில் வருடாந்திர கட்டணம் இருக்காது, ஆனால், வருட த்துக்கு குறைந் தபட்சம் இவ்வளவு ரூபாய் கார்டு மூலம் வாங்கி இருக்க வேண்டும் என்ற விதி இருக்கும். ஒப்பீட்டளவில் வங்கி, நிறுவனங்களை ஆராய்ந்து, அதன்பின் அவர்களிடம் கார்டு பெறவும்.
 கிரெடிட் கார்டு வைத்திருந்தால் ஹெல்த் இன்ஷூரன்ஸ் கிடைக்கும் என்று சொல்லி, அதற்குப் பிரீமியம் வசூலிக்க வாய்ப்பு இருக்கிறது. அதைத் தவிர்த்துவிடுங்கள். கார்டு புரொடக்ஷன் கட்டணம் என்று கட்ட ணம் வாங்கவும் வாய்ப்பிருக்கிறது. கார்டு வாங்கும்போது எவ்விதமான கட்டணங்களும் இல்லை என்று உறுதி செய்த பிறகே வாங்குங்கள்.
 எக்காரணம் கொண்டும் கார்டைப் பயன்படுத்தி பணத்தை எடுக்காதீர்கள். பணத்தை எடுத்த நாளில் இருந்து வட்டி கணக்கிடப்படும். உதாரணத்துக்கு 10,000 ரூபாய் எடுத்தால் 300 ரூபாய் மாதாந்திர வட்டியாகச் செலுத்த வேண்டி இருக்கும்.
 செலவு செய்த தொகையை பணமாகச் செலுத்தினால்… ஒரு நாளைக்கு முன்பு செலுத்திவிடுங்கள், செக் என்றால் நான்கு வேலை நாட்களுக்கு முன்பு செலுத்திவிடுங்கள், இன்டர்நெட் பேங்கிங் மூலமாக டிரான் ஸ்ஃபர் செய்வதாக இருந்தால், 2 நாட்களுக்கு முன்பு செய்துவிடுங்கள். இல்லை யெனில், அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.
 சரியான தேதிக்குள் பணம் செலுத்த வேண்டும். ஒருவேளை செலுத்தத் தவறினால், மாதந்தோறும் குறைந்த பட்ச கட்டணம் செலுத்துவதைவிட, வாங்கிய கடனை மாதாந்திர இ.எம்.ஐ-ஆக மாற்றிக் கொள்வது சரியாக இருக்கும். இதற்கு 18 சதவிகித வட்டி செலுத்த வேண்டும்.
 கார்டைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்கவும். இரண்டு முறை பில் செய்ய வாய்ப்பிருக்கிறது. கார்டை தேய்த்த பிறகு கொடுக்கப்படும் ஸ்லிப்பை கவனமாக செக் செய்து கையெழுத்துப் போடவும். 100 ரூபாய்க்கு 1,000 ரூபாய் என்று மாற்ற நிறைய நேரம் ஆகாது. முடிந்த வரை கூடவே இருந்து கார்டை வாங்கி வரவும். ஸ்கிம்மர் மெஷினில் உங்கள் கிரெடிட் கார்டைச் செலுத்தி, டூப்ளிகேட் கார்டு தயாரிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
 ஒவ்வொரு முறையும் கிரெடிட் கார்டு உபயோகத்துக்குப் பின்னர் நீங்கள் என்ன செலவு செய்தீர்கள், எவ்வளவு செய்தீர்கள், எங்கு செய்தீர்கள் என்ற எஸ்.எம்.எஸ். வரும். ஒரு வேளை வராவிட்டால்… கஸ்டமர் கேர் செக்ஷனுக்கு போன் செய்து விசாரியுங்கள். மொபைல் நம்பரை மாற்றினால், தவறாமல் நிறுவனத்துக்குத் தகவல் சொல்லுங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...