நாம் உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதா ல் கீழ்க்காணும் நடைமுறைகளை கடைப்பிடிப்பது சிறப்பைத்தரும்.
அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் ஆயுள் குறையும். எனவே
வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது.
பசிக்கும்போது தான் சாப்பிட வேண்டும். மிளகு சேர்ப் பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில்
உள்ள விஷமும் முறிகிறது. உண வில் சீரகம் சேர்ப்பதால் உடம் பை சீராக வைப்பது மட்டும் அல் லாமல் குளிர்ச்சியை தருகிறது.
வெந்தயம் உஷ்ணத்தைக் குறை க்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக் கிறது. கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது.



வெங்கலம், அலுமினியம் மற் றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது.
புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும். வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை கிடைக்கும்.
நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ
அல்லது மற்ற உணவு பதார்த்த ங்களையோ மூடி வைக்கக் கூடாது. இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல் லிக்காய் ஆகியவற்றை சேர்க் கக் கூடாது. உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ உப்போ பரிமாறாமல் சாத த்
தை பரிமாறக்கூடாது. அதே போல முதலில் கீரையோ, வத்தலோ இலையில் வைக்க க் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர். உண்ணும் உணவில் இறைவ ன் வாசம் செய்வதால் மேற்க ண்ட நடைமுறைகளை கடை பிடிப்பது சிறப்பைத்தரும்.



No comments:
Post a Comment