Wednesday, January 7, 2015

ஹோம் லோன்- எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டியவை!

ஹோம் லோன்- எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டியவை!
சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என நினைப்பவர் களின்  எண்ணத்தை நனவாக்குவது வீட்டுக் கடன்தா ன். ஏனெனில், இன்றைக்கு
வீடு விற்கும் விலையில் ஒரு தனிநபர் மொத்தப் பணத்தை யும் கையில் வைத்துக்கொ ண்டு வீடு வாங்குவது என்பது முடியாத காரியம். எனவே, வீடு வாங்கும் கனவை நனவா க்குவதில் வீட்டுக் கடன் பெரு ம்பங்கு வகிக்கிறது. வீட்டுக் கடனுக்கான வட்டி நிலை யான வட்டி (ஃபிக்ஸட் ரேட்), மாறுபடும் வட்டி (ஃப்ளோ ட்டிங் ரேட்) என இரு விதமாக இருக்கும்.
பெரும்பாலான வங்கிகள் மற் றும் வீட்டுவசதி நிறுவனங்களி ல் நிலையான வட்டி விகிதம் என்பது 2, 3 வருடங்களுக்கு இருக்கும். அதன்பிறகு அப்போ துள்ள மாறுபடும் வட்டிக்கு மாற்றப்படும். ஆனால், தற்போது சில வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங்கள் நீண்ட காலத்துக்கு நிலையா ன வட்டிவிகிதத்தை அறிவித் துள்ளன. அதாவது, 10வருடங் கள் வரை நிலையான வட்டி யில் வீட்டுக் கடன் வழங்குகி ன்றன.
கடந்த பத்து வருடங்களில் வீட்டுக்கடனுக்கான வட்டியா னது 7 சதவிகிதத்துக்கு இறங்கி 13 சதவிகிதத்துக்கு உயர்ந்துள்ளது. இப்போது நீண்ட காலத்தில் நிலையா ன வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வழங்க என்ன தேவை ஏற்பட்டிருக்கிறது?
தற்போது பண்டிகைக் காலம். இந்த நேரத்தில் பலரும் சொந்த வீடு வாங்க விரும்புவார்கள். இனிவரும் கால த்தில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறையும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. வட்டி விகி தம் குறையும்போது, வங்கிகளின் வருமானம் குறைய வாய்ப்புள்ளது.

லாபத்தைத் தக்கவைத்துக் கொள் ள நீண்டகால நிலையான வட்டி விகிதத்தில் குறிப்பிட்ட அளவு வா டிக்கை யாளர்களை வைத்துக் கொள்வது நல்லது என வங்கிக ள் நினைப்பதால், நீண்ட காலத்தி ல் நிலையான வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் திட்டம்  அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரி கிறது.
நிலையான வட்டி விகிதத் தில் கடனை முன்கூட்டியே அடைக்கும்போது நிலுவை யில் உள்ள கடன் தொகைக் கு 2% அபராதம் இருக்கிறது. அதனால், வட்டி விகிதம் குறையும்போது, ஒரு வங்கி யிலிருந்து இன்னொரு வங்கிக்கு வாடிக்கையாளர்கள் மாறும் சதவிகிதம் குறைவாக இருக்கும் என்கிற எண் ணத்திலும்  நிலையான வட்டி விகிதத் திட்டம் அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது. ஹெச்டிஎஃப்சி மற்றும் ICICI பேங்க் 10 ஆண்டு களுக்கும், ஆக்ஸிஸ் பேங்க் 20 ஆண்டுகளுக்கும் நிலையான வட்டி விகிதத்தில் கடன் திட்டங்களை அறிவித்துள்ளன.
பொதுத்துறை வங்கிகள் இந்த நிலையான வட்டி விகிதத் திட்டம் எதையும் புதிதாக அறிவிக்காமல் உள்ளன.
கவனிக்க வேண்டியவை!
மத்தியில் நிலையான ஆட்சி, நவம்பர் மொத்த பண வீக்க விகிதம் பூஜ்ஜியம், கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை குறைவது, ஜிடிபி உயர்வு போன்றவற்றால் இனி வரும் காலத்தில் ஆர்பிஐ வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.
வட்டி விகிதம் குறைக்கப்பட்டு, வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமும் குறையும்போது, ஃபிக்ஸட் வட்டியில் வீட்டுக்கடன் வாங்கியவர்கள்,அதே  வங்கியில் மாறுபடும் வட்டி விகிதத் துக்கு மாற முடியாது என்பது முக் கியமான விஷயம். கடனை வேறு வங்கிக்கு மாற்ற வேண்டும் எனில், பாக்கி கடன் தொகையில் 2% அபரா தம் கட்டவேண்டிய சூழல் உருவாகு ம்.
இந்தத் தொகையைக் கடன் வாங்கியவர் கையிலிருந் து கொடுக்க வேண்டும். இதன் விளைவாக, வட்டி மிச்ச ம் ஏற்படாமல் இழப்புதான் ஏற்படும். கூடவே, வேறு வங்கிக்குக் கடனை மாற்றும்போது மீண்டும் செயல்பாட்டு க் கட்டணம், லீகல் ஒப்பீனி யன் சார்ஜ், சொத்தின் சந்தை மதிப்பைக் கணக்கிடு வதற்குக் கட்டணம் என பல கட்டணங் கள் செலுத்த வேண்டியிருக்கும்.

வட்டி விகிதம் குறைந்தால், மாறுபடும் வட்டி விகிதத் தில் இஎம்ஐ தொகை குறைவ தற்கோ அல்லது கடனை முன் கூட்டியே முடிக்கவோ வாய்ப்புள்ளது.
ஆனால், நிலையான வட்டி விகிதத்தைத் தேர்வு செய்பவ ர்கள்  அந்தசமயத்தில் அதிக இஎம்ஐ தொகை செலுத்த வேண்டியிருக்கும்.
இந்தநிலையில், ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தில் வீட் டுக் கடன் வாங்கியவர், தவணை சரியாக க் கட்டிவரும் நிலையில், வட்டி குறையும்போது வேறு வங்கிக் கு கடனை மாற்றப்போவதாக தன் வங்கியில் சொன் னால், அவர்கள் வட்டியைக் குறைக்க வாய்ப்பு இருக்கி றது. இதற்கு சில ஆயிரம் ரூபாயைக் கட்டணமாக வசூ லிப்பார்கள்.  
தற்போதைய நிலையில், நிலையான வட்டி விகிதம் மற்றும் மாறுபடும் வட்டி விகிதத்துக்கு இடையேயான வட்டி வித்தியாசம் 0.5%  1% அளவில்  உள்ளது. இது நிலை யான வட்டி விகிதத்தைத் தேர்ந் தெடுக்க வைப்பதுபோல் இருந்தா லும், விரைவில் வீட்டுக் கடனுக் கான வட்டி விகிதம் குறையும் என் பதால், மாறுபடும் வட்டி விகிதத் தைத் தேர்ந்தெடுப்பதே லாபகரமா க இருக்கும்.  
ஏற்கெனவே குறிப்பிட்டிருப்பது போல், கடன் காலம் முழுக்க நிலையான வட்டி விகிதம், குறுகிய காலத்தில் கடனை கட்டத் திட்டமிட்டிருப்பவர்கள் மற்றும் ரிஸ்க்கே வேண்டாம் என்பவர்களுக்குத் தான் ஃபிக்ஸ ட் வட்டி விகிதம் என்பதை மனதில் கொண்டு முடிவு எடுங்கள்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...