Wednesday, January 14, 2015

நேர நிர்வாகம், அதுவே வாழ்க்கை நிர்வாகம் ! – சிந்தையைச் சீர்த் தூக்க‍ம் வரிகள் இவை

நேர நிர்வாகம், அதுவே வாழ்க்கை நிர்வாகம்!- சிந்தை யைச் சீர்த் தூக்க‍ம் வரிகள் இவை  
24 நிமிட நேர நிர்வாகமே வாழ்க்கை நிர்வாகம்.
நேர நிர்வாகமே, வாழ்க்கை நிர்வாகம்- Time management is Life management
தனி ஒரு மனிதனின்
நேர நிர்வாகமே, அவனுடைய வாழ்க்கை நிர்வாகத்தி ற்கு அடிப்படையாக அமைகிறது.
ஒரு நாளை நான்கு நிலைகளில், ஒரு இளைஞன் முறையான நேர நிர்வாக த்தைக் கொண்டு செலவு செய்யலாம்.
ஒருநாளை மகிழ்ச்சியாகவோ அல்ல து சோகமாகவோ அல்லது அமைதி யாகவோ அல்லது பேரானந்தமாகவோ ஒரு இளைஞ ன் செலவு செய்ய லாம்.
நேர நிர்வாகம் என்பது ஒரு நாளை இன்ப, துன்பங்களுக்கு செலவு செய்யாம ல், அந்நிலையை தாண்டி வாழ்க்கையை இனிமையாக, அமைத்துக் கொள்ள திட்ட மிட்டு, செயல்படுத்துவது.. பிறகு பேரின்ப நிலைக்கு திட்டமிடுவது.
எவ்வளவு நேரம் மகிழ்ச்சிக்கு ?
எவ்வளவு நேரம் சோகத்திற்கு ?
எவ்வளவு நேரம் அமைதிக்கு ?
எவ்வளவு நேரம் பேரான்ந்தத்திற் கு ?
என்றளவுவிகிதம், தனிமனிதனி ன் நேர நிர்வாகத்தை கொண்டு அமைகிறது.
ஒரு இளைஞன், மகிழ்ச்சியான நிலை, சோகமானநிலை, அமைதியான நிலை, பேரான்ந்தமான நிலை என்ற நான்கு நிலைகளில் ஒரு நாளை செலவு செய்ய லாம்.
இன்றைய நவ நாகரீக மனிதர் களில் நூற்றுக்கு 99 பேர், மகி ழ்ச்சியாக அல்லது சோகமாக தான் ஒரு நாளை செலவு செய்கிறார்கள்.
பணம் என்ற மாய வலையில் சிக்கிய இன்றைய இளை ஞனுக்கு அமைதி மற்றும் பேரான்ந்தத்தை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் இல்லை.
அவ்வாறு தெரிந்து கொ ண்ட அல்லது விழிப்புண ர்வு கொண்ட ஒரு சதவீத இளைஞனும், விளக்கத்தி ன் வழி பழக்கத்தை கொண்டு செல்ல முடியாமல் தடு மாறுகிறான்.
உலகப் புகழ் பெற்ற மூளை நிபுணர் பி. இராம மூர்த்தி சொன்னார் “இந்தியர்கள் முட் டாள்கள், யோகக் கலை என்ற தங்க சுரங்கத்தின்மேல் உட்கார் ந்து கொண்டு சிறிது தங்கத்திற் காக வாழ்நாள் முழுவதும் அலையும் முட்டாள்கள்.
இக்கண தேவை இந்திய இளைஞர்கள் தன்னை உணர உள்நோக்கு பயணம்(தவம்) செய்து, தற் சோதனை செய்து இந்திய பாரம்பரிய சொத்தான அமைதி மற்றும் பேரின்பத்தை ப் புரிந்துகொள்ளவேண்டும். பிறகு அந்த நிலையில் வாழ்க்கையை முறைப்படுத்தி க் கொள்ள வேண்டும்.
“Indians are fools, sitting on the gold mine of yoga” – B. Ramamurthi, famous neuro surgeon
ஆனந்த வாழ்க்கை

தினசரி நேர நிர்வாகமே, மனித வாழ்க்கை நிர்வாகம்;
தினசரி மனிதமன நிர்வாகமே, தினசரி நேர நிர்வாகம்;
தினசரி உணவு நிர்வாகமே, தினசரி மனித மன நிர் வாகம்;
தினசரி நாக்கு நிர்வாகமே, தினசரி மனித உணவு நிர்வாகம்;
தினசரி குடல் நிர்வாகமே, தினசரி மனித நாக்கு நிர்வா கம்;
தினசரி நிதானமாக முடிவு எடுக்கும் நிர்வாகமே, தினசரி மனித குடல் நிர்வாகம்;
தினசரி சக்தி நிர்வாகமே, தினசரி மனிதனின் நிதானமாக முடிவு எடுக்கும் மனோபாவ நிர்வாகம்;
சக்தி நிர்வாகம்
தினசரி மனித உடல் சக்தி நிர்வாக மே, தினசரி திறம்பட செயல்கள் வேலை செய்யத்தேவையான சக்தி நிர்வாகம்;
தினசரி மன சக்தி நிர்வாகமே, தினசரி மனித உடல்சக்தி நிர்வாகம்;
தினசரி உணர்ச்சி நிர்வாகமே, தினசரி மனித மன சக்தி நிர்வாகம்;
தினசரி ஜீவகாந்த சக்தி நிர்வாகமே, தினசரி மனித உணர்ச்சி நிர்வாகம்;

தினசரி உயிர் சக்தி நிர்வாக மே, தினசரி மனித ஜீவ காந்த சக்தி நிர்வாகம்;
தினசரி ஆன்மீக சக்தி நிர்வா கமே, தினசரி மனித உயிர் சக்தி நிர்வாகம்;

சமச்சீர் வாழ்ககை நிர்வாகமே, தினசரி மனித ஆன்மீக சக்தி நிர்வாகம்;
ஆரோக்கிய வாழ்க்கை நிர்வா கமே, மனித சமச்சீர் வாழ்க்கை நிர்வாகம்.
வெற்றி…. வெற்றி…..
இளைஞனே.. வெற்றி வேண்டுமா?வாழ்க்கையில் வெற்றி வேண்டுமா?வெற்றி என்பது மாங்கு .. மாங்கு என்று வேலை செய்வதில் மட்டும் இல்லை..வெற்றி என்பது சிந்தனை செய்து, 24 நிமிட நேரத்தை சரியாக திட்டமிட்டு, சிந்தனை வழியில் மாங் கு.. மாங்கு என்று வேலையைத் திற ம்பட செய்து, சாதனை படைப்பதில் தான் உள்ளது. வெற்றி வேண்டுமா?  போட்டுப் பாரடா எதிர்நீச்சல்…24 நிமிட நேர நிர்வாகத்தோடு !
வெற்றி வேண்டுமா? 
போட்டுப் பாரடா எதி நீச்சல்…
24 நிமிட நேர நிர்வாகத்தோடு !!
மிகப் பெரிய வெற்றி ….
இளைஞனே … மிகப பெரிய வெற்றி வேண்டுமா? வாழ் க்கையில் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டுமா? மிகப் பெரிய வெற்றி என்பது, 24நிமிடநேரத்தில்தெளிவாக மற்றும் துல்லியமாக திட்டமி ட்டு, சிந்தனைவழி, சரியான துல்லியமாக திட்டத்தை செய ல் படுத்தி உலக அளவில்சாதனை படைப்பதில் தான் உள்ளது.
முன்னால் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்-ஐ பார்த்து ஒரு பத்திரிக் கை நிருபர் கேட்டார், எப்படி உங்கள் ஒய்வு நேரத்தை செலவிடுவீர்கள்?
அதற்கு, ரூஸ்வெல்ட் புத்தகங்களோ டு தான் எனக்கு கிடைக்கும் ஒய்வு நேரத்தை செலவு செய்வேன் என்றார்.
பத்திரிக்கை நிரூபர் மேலும் கேட் டார், “உங்களுக்கு கிடைக்கும் மிக அரிதான காலத்தை ஏன் புத்தகங்களோடு செலவு செய்கிறீ ர்கள்? என்றார்.
மேலும், ரூஸ்வெல்ட் சொன்னார், புத்தகங்களைப் படிக்கும் போது எனக்குப் புத்துணர்ச்சி கிடைக்கிறது.

பத்திரிக்கை நிருபர், மீண்டும் ரூஸ்வெல்ட் – ஐ பார்த்து கேட்டார். அதாவது, “நீங்கள் எப்படி, படிப்பதற்கான புத்தகங்களைத் தேர்வு செய்வீர்கள்.”
அதற்கு ரூஸ்வெல்ட் தெளிவாக சொன்னார், “நூற்றா ண்டின் சிறந்த புத்தகத்தை முதலில் தேர்ந்து எடுத்து படிப்பேன். வார, சஞ்சிகை  யையோ, மலிவான நாவல் களையோ படிக்க மாட்டேன் . சில சமயம், நான்கு நூற் றாண்டு பாரம்பரிய, புத்தக ங்களான ‘பழமொழிகள்’ (Proverb) அடங்கிய புத்தகத் தைத் தேர்ந்து எடுத்து முத லில் படிப்பேன்.”
ரூஸ்வெல்ட் மேலும்சொன்னார்,”காலம் மற்றும்மனம் இவை இரண்டும் இயற்கையின்மிகப்பெரியபொக்கிஷ ங்கள், அதைமிக மிகக் கவன மாக ஒருவன் கையாள வேண் டும். ஆகையால், என்னுடைய ஒவ்வொரு கணத்தையும் வாழ் க்கையின் மிக மிக சிறந்தவை களுக்காக செலவு செய்வேன்” என்றார்.
மேலும் ரூஸ்வெல்ட்டின் “என்னுடைய ஒவ்வொரு கணத்தையும் வாழ்க்கையின் மிகமிக சிறந்தவைகளு க்காக செலவு செய்வேன்” என்ற இந்த தெளிவான கூற்றைவிட காலத்தின் அருமையை ஒருவர் உணர வைக்க முடியாது.
இந்திய இளைஞனே காலத்தின் அரு மையை முதலில் உணர். பிறகு உனது நேரத்திற்கு நீயே மதிப்பு கொடு !!
பிறகு உன் மனதின் அருமையை மற்றும் உள்ளத்தின் அருமையை உணர முயல். உனது திறமையை உணர்.
செயற்கரிய செயல்களை திட்டமிட்டுசெய். உலகம்உன் காலடியில். கிடைத்தற்கு அரிய இந்த வாழ்க்கையை வாழ்வங்கு வாழமுற்படு வோ ம்.
“Time and mind are too precious to waste to spend on anything but the best” – Theodore Roosevelt, Former USpresident.
சராசரி இந்தியனின் வாழ்க்கை 65 ஆண்டுகள் கண் மூடி கண் திறப்ப தற்குள் முடிகின்ற மிக குறுகிய கால வாழ்க்கை.
“LIFE IS SHORT, MAKE IT SWEET AND PURPOSEFUL”
ஆகையால்தான் சொல்கிறேன், நேரநிர்வாகம் என்பது வாழ்க்கை நிர்வாகம்.
“TIME MANAGEMENT IS LIFE MANAGEMENT”
நேரத்தைத் தொலைத்தவன் வாழ்க் கையைத தொலைக்கிறான்.
6 வயது முதல் 60 வயது வரை நேர நிர்வாகம் கட்டா யம் தேவை, அதுவே வாழ்க்கை நிர்வாகம் !

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...