Sunday, February 11, 2018

மகாசிவராத்திரி....

*மகாசிவராத்திரி* , மகாசிவராத்திரி ,மாதசிவாரத்திரி, நான்கு ஜாம பூசையின் பலன்கள் ,சிவாராத்திரியில் அருள் பெற்றவர்கள்*
சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் தேய்பிறை நாளில் வரும் சதுர்த்தசிதிதியினை நாம் சிவராத்திரி என்றும் சில சமயங்களில் மிக அரிதாக
த்ரியேதசி பகல் பொழுதில் முடியும் பட்சத்தில் அதே நாளில் வரும். மாதத்திற்கு ஒன்று வீதம் மொத்தம் பன்னிரண்டு சிவராத்திரியும்
சேர்ந்தது மஹா சிவராத்திரி
இது வருடத்திற்கு ஒரே ஒரு முறை மட்டும் வரும் சிவராத்திரி. மாசி மாத சதுர்த்தசி திதியினை நாம் மஹா சிவராத்திரியாக கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு 13-02-2018 செவ்வாய்க்கிழமை வருகின்றது.
எண்ணிய எல்லாம் நிறைவேற ஈஸ்வரா நீயே கதி என்று ஈசனது திருவடி பற்றி பணியும் நேரமும் அதுவே. அப்படி பணிந்து பேறுபெற்றவர்கள் சிலர்.
*அர்ஜூனன் அவர்கள் தவத்தால் பாசுபதம் என்னும் அஸ்திரத்தை பெற்றது,
*கண்ணப்ப நாயனார் என்னும் அன்புக்குரிய வேடன் சிவகதி என்னும் முக்தி அடைந்தது,
*பகீரதன் தவப்பலன் கங்கையை பாரிக்கு தந்தது,
*பதினாறு வயதுடையோன் மார்க்கண்டேயனுக்காக பாச கயிற்றை பஷ்பமாகியது,
*அன்னை உமையாளுக்காக சரீரத்திலும் பாதி தந்து பற்றற்ற நிலையில் இருக்கும் எம் பெருமான் அர்த்தனாதீஸ்வரராக ஆனது, இப்படி கூறிக்கொண்டே செல்லலாம்.
மஹா சிவராத்திரியும் நான்கு கால பூஜைகளும் :
முதல் கால பூஜை
இது ஜோதி சொரூபமான ஈசனின் முடி ( தலை பகுதி ) தேடி அன்னப்பறவையாய் மாறிய அய்யன் " பிரம்மன் " எம்பெருமான் ஈசனுக்கு செய்யும் பூஜையாகும்.
அன்னைக்களுக்கெல்லாம் அரசி என்று போற்றப்படும் பசு என்னும் கோமாதா மும்மூர்த்திகள் முதல் முப்பது முக்கோடி தேவர்களும் ரிஷிகள் யாவரும் உறையும் கோமாதா எனும் பசுவின் மூலம் பெறப்படும் அமுதுகளால் செய்யப்படும் பூஜை இதுவே .
இந்த கால பூஜையில் "பஞ்ச கவ்வியத்தால்" (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம்) அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், தாமரைப் பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் முதல் கால பூஜை நடத்தப்படும் .
பிறவி பிணி நீங்க இக்காலம் பெரிதும் உதவும் .
இரண்டாவது கால பூஜை
திருவடி தேடி சென்ற பரம்பொருள் "விஷ்ணு" அவர்களால் அப்பனுக்கு செய்யும் பூஜையாகும்.
இந்த காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், சந்தன காப்பு சாற்றியும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், ஸ்வர்ண நாணயங்களை கொண்டு அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசம் நிவேதனமாக படைத்து, நல்லெண்ணை தீபத்துடன் நடைபெறும் .
இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நோய்கள் தீரும் ; செல்வம் செழித்தோங்கும், திருமாலின் அருள் கிட்டும்.
மூன்றாவது கால பூஜை
அம்பாள் அவர்கள் செய்யும் பூசையினை மூன்றாம் கால பூஜை என்போம் .
இந்த காலத்தில் தேன் அபிஷேகம் செய்தும் பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து "கற்கண்டு அன்னம்" நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் பூஜை செய்வது நன்று .
இந்த காலத்திற்குரிய சிறப்பு என்றால் இதை லிங்கோத்பவ காலம்என்றும் இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம்.
இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும்.
நான்காவது கால பூஜை
முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது.
குங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு & பால் அபிஷேகம் செய்தும், நந்தியாவட்ட பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது. 🌹 108 லிங்கம் போற்றி 🌹
1. ஓம் சிவ லிங்கமே போற்றி
2. ஓம் அங்க லிங்கமே போற்றி
3. ஓம் அபய லிங்கமே போற்றி
4. ஓம் அமுத லிங்கமே போற்றி
5. ஓம் அபிஷேக லிங்கமே போற்றி
6. ஓம் அனாயக லிங்கமே போற்றி
7. ஓம் அகண்ட லிங்கமே போற்றி
8. ஓம் அக்ஷர லிங்கமே போற்றி
9. ஓம் அப்பு லிங்கமே போற்றி
10. ஓம் ஆதி லிங்கமே போற்றி
11. ஓம் ஆதார லிங்கமே போற்றி
12. ஓம் ஆத்ம லிங்கமே போற்றி
13. ஓம் ஆனந்த லிங்கமே போற்றி
14. ஓம் ஆகாசிய லிங்கமே போற்றி
15. ஓம் ஆலாஸ்ய லிங்கமே போற்றி
16. ஓம் ஆத்யந்த லிங்கமே போற்றி
17. ஓம் ஆபத்பாண்டவ லிங்கமே போற்றி
18. ஓம் ஆரண்ய லிங்கமே போற்றி
19. ஓம் ஈஸ்வர லிங்கமே போற்றி
20. ஓம் உக்ர லிங்கமே போற்றி
21. ஓம் ஊர்த்துவ லிங்கமே போற்றி
22. ஓம் ஏகாந்த லிங்கமே போற்றி
23. ஓம் ஓம்கார லிங்கமே போற்றி
24. ஓம் கனக லிங்கமே போற்றி
25. ஓம் காருண்ய லிங்கமே போற்றி
26. ஓம் காசி லிங்கமே போற்றி
27. ஓம் காஞ்சி லிங்கமே போற்றி
28. ஓம் காளத்தி லிங்கமே போற்றி
29. ஓம் கிரி லிங்கமே போற்றி
30. ஓம் குரு லிங்கமே போற்றி
31. ஓம் கேதார லிங்கமே போற்றி
32. ஓம் கைலாச லிங்கமே போற்றி
33. ஓம் கோடி லிங்கமே போற்றி
34. ஓம் சக்தி லிங்கமே போற்றி
35. ஓம் சங்கர லிங்கமே போற்றி
36. ஓம் சதாசிவ லிங்கமே போற்றி
37. ஓம் சச்சிதானந்த லிங்கமே போற்றி
38. ஓம் சகஸ்ர லிங்கமே போற்றி
39. ஓம் சம்ஹார லிங்கமே போற்றி
40. ஓம் சாக்ஷி லிங்கமே போற்றி
41. ஓம் சாளக்கிராம லிங்கமே போற்றி
42. ஓம் சாந்த லிங்கமே போற்றி
43. ஓம் தியான லிங்கமே போற்றி
44. ஓம் சித்த லிங்கமே போற்றி
45. ஓம் சிதம்பர லிங்கமே போற்றி
46. ஓம் சீதள லிங்கமே போற்றி
47. ஓம் சுத்த லிங்கமே போற்றி
48. ஓம் சுயம்பு லிங்கமே போற்றி
49. ஓம் சுவர்ண லிங்கமே போற்றி
50. ஓம் சுந்தர லிங்கமே போற்றி
51. ஓம் ஸ்தூல லிங்கமே போற்றி
52. ஓம் சூக்ஷ்ம லிங்கமே போற்றி
53. ஓம் ஸ்படிக லிங்கமே போற்றி
54. ஓம் ஸ்திர லிங்கமே போற்றி
55. ஓம் சைதன்ய லிங்கமே போற்றி
56. ஓம் ஜய லிங்கமே போற்றி
57. ஓம் ஜம்பு லிங்கமே போற்றி
58. ஓம் ஜீவ லிங்கமே போற்றி
59. ஓம் ஜோதி லிங்கமே போற்றி
60. ஓம் ஞான லிங்கமே போற்றி
61. ஓம் தர்ம லிங்கமே போற்றி
62. ஓம் தாணு லிங்கமே போற்றி
63. ஓம் தேவ லிங்கமே போற்றி
64. ஓம் நடன லிங்கமே போற்றி
65. ஓம் நாக லிங்கமே போற்றி
66. ஓம் நித்ய லிங்கமே போற்றி
67. ஓம் நிர்மல லிங்கமே போற்றி
68. ஓம் பர லிங்கமே போற்றி
69. ஓம் பஞ்ச லிங்கமே போற்றி
70. ஓம் பஞ்சாக்ஷர லிங்கமே போற்றி
71. ஓம் பத்ரி லிங்கமே போற்றி
72. ஓம் பக்த லிங்கமே போற்றி
73. ஓம் பாபநாச லிங்கமே போற்றி
74. ஓம் பிரதோஷ லிங்கமே போற்றி
75. ஓம் பிராண லிங்கமே போற்றி
76. ஓம் பீஜ லிங்கமே போற்றி
77. ஓம் பிரம்ம லிங்கமே போற்றி
78. ஓம் பிரம்மாண்ட லிங்கமே போற்றி
79. ஓம் பிரகாச லிங்கமே போற்றி
80. ஓம் புவன லிங்கமே போற்றி
81. ஓம் பூத லிங்கமே போற்றி
82. ஓம் பூர்ண லிங்கமே போற்றி
83. ஓம் பூஜ்ய லிங்கமே போற்றி
84. ஓம் மரகத லிங்கமே போற்றி
85. ஓம் மஹா லிங்கமே போற்றி
86. ஓம் மகேஸ்வர லிங்கமே போற்றி
87. ஓம் மார்க்கபந்து லிங்கமே போற்றி
88. ஓம் மார்க்கண்டேய லிங்கமே போற்றி
89. ஓம் மிருத்யுஞ்சய லிங்கமே போற்றி
90. ஓம் முக்தி லிங்கமே போற்றி
91. ஓம் மூல லிங்கமே போற்றி
92. ஓம் மூர்த்தி லிங்கமே போற்றி
93. ஓம் மேரு லிங்கமே போற்றி
94. ஓம் மோன லிங்கமே போற்றி
95. ஓம் மோக்ஷ லிங்கமே போற்றி
96. ஓம் யக்ஞ லிங்கமே போற்றி
97. ஓம் யோக லிங்கமே போற்றி
98. ஓம் ராம லிங்கமே போற்றி
99. ஓம் ராஜ லிங்கமே போற்றி
100. ஓம் ருத்ர லிங்கமே போற்றி
101. ஓம் வாயு லிங்கமே போற்றி
102. ஓம் விஸ்வ லிங்கமே போற்றி
103. ஓம் விசித்திர லிங்கமே போற்றி
104. ஓம் வீர்ய லிங்கமே போற்றி
105. ஓம் வேத லிங்கமே போற்றி
106. ஓம் வைத்ய லிங்கமே போற்றி
107. ஓம் ஹ்ருதய லிங்கமே போற்றி
108. ஓம் லிங்கோத்பவனே போற்றி. சிவஅன்பர்களே நாம் செய்யும் செயலில் சிவம் இருக்கிறார் என்பதை மறவாதீர்கள். வாழ்க மெய்அன்பர்கள் வளர்க சிவம் புகழ். அன்பே சிவம். சிவாயநம அருணாச்சலம்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...