Saturday, February 17, 2018

எல்லாம் வெறும் கண் துடைப்பாகவே உள்ளது.

ரியாலிட்டி ஷோ என்று எல்லா சேனல்களிலும் ஒரு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதை பார்த்து மிகவும் வருத்தப்பட்டேன். ஏன் என்றால் ஒருவர் பங்கு பெறுகிறார் என்றால் தன்னுடைய திறமையை வெளிப்படுத்த அவருக்கு ஒரு சரியான மேடை தேவை. ஆனால் நடப்பது எல்லாம் வெறும் கண் துடைப்பாகவே உள்ளது. பங்கு பெறும் நபரை மிகவும் தவராக வாடா போடா என்றும், வேற்று மொழியில் இருந்து பாடும் ஒருவரை இது போல் ஒருமையில் பேசுவது அநாகரீகமாக தெரியவில்லையோ? சரி சேனலை மாற்றி வேறு சேனல் போனால் அங்கே இதை விட கேவலமாக நடக்கிறது. அதை விட கொடுமை நடுவர்கள் இவர்கள் எல்லோரும் திரைப்படத்தில் நிரைய பாடி நிரைய சொத்துக்கள் கோடி கோடியாக இருந்தும் மிகவும் கேவலமாக பாடிய ஒருவருக்கு பின்னனி பாடகர்கள் எழுந்து நின்று கைதட்டி மரியாதை செய்கிறார். இது இன்னும் கொடுமை. ஆனால் தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நடத்தப்படும் நிகழ்ச்சியில் சிரிய குழந்தைகள் என்றாலும் அவர்களுக்கு தகுந்த மரியாதை தருகின்றார்கள். தமிழ் தமிழ் என்று கூவும் நாம் தான் மிகவும் கேவலமாக நடத்துகிறோம் இது போன்ற நிகழ்ச்சிகளை? இவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். எதற்கு எடுத்தாலும் கை தட்டும் ஒரு ஜால்ரா குருப் ஒரு நாள் இது போன்ற டி.வி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 300 ரூபாய் பணம் மூன்று வேளை சாப்பாடு இவர்களுக்கு கொடுக்கப்பட்டு ஏமாற்று நிகழ்ச்சி நடத்துகிறார்கள். அடியேனுக்கு தெரிந்து இதுவரை தமிழ் சேனல்களில் பாடியவர்களுக்கு ஒரு வீடு கூட தரவில்லை என்று கேள்வி பட்டுள்ளேன். இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இது ஒரு வேதனையான பதிவு

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...