Wednesday, February 21, 2018

சொர்கம் நரகம்....



ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த ஜென் துறவியை அணுகிய அந்நாட்டின் தளபதி அவரிடம் சொர்கம் நரகம் என்பது உண்மையா என கேட்டார்..?
துறவி மௌனமாய் இருக்கவே மறுபடியும் அதே கேள்வியை கேட்டார். 
துறவி அவரிடம் நீ யார் என்ன செய்கிறாய் என கேட்க, தளபதி அவரிடம் "நான் இந்நாட்டு தளபதி, எல்லா படைகளுக்கும் சேனாதிபதி என பெருமிதத்துடன் கூறினான்.
உடனே துறவி அவரிடம் நீ ஒரு முட்டாள் உன்னை யார் தளபதியாக நியமித்தது என கேலிசிரிப்புடன் கூறினார். இதை கேட்ட தளபதியின் கண்கள் கோபத்தால் சிவந்தன , வாளை உருவி கர்ஜித்தான்.
துறவி அமைதியாக "இதோ நரகத்தின் கதவுகள் திறக்கின்றன" என்றார்.
ஒரு விநாடி திகைத்த தளபதி வாளை உறையில் போட்டு விட்டு என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் என்று கூறினார். உடனே துறவி இதோ சொர்கத்தின் கதவுகள் திறந்து விட்டன என்றார்.
பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளை கல்...!!!
Image may contain: night

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...